15 Jun 2013

'சிங்கம் 2' படத்தின் கதை.

 பரபர விறுவிறு காட்சிகளில் கவனம் ஈர்ப்பவர் அருவா இயக்குநர் ஹரி. சிங்கம் கதையின் தொடர்ச்சியை 'சிங்கம் 2'வில் தொடர்ந்தாலும், சூர்யாவுக்கு இது ரொம்பவே முக்கியமான படமாக இருக்கும்.

ஜூலை 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் 'சிங்கம் 2' படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. 'சிங்கம் 2'வின் வியாபாரமும் சூர்யா தரப்பினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும் தருணத்தில் கதையும் வெளிவரத் தொடங்கிவிட்டது.

சிங்கம் படத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளைப் புரட்டி எடுத்த சூர்யா, 'சிங்கம் 2'வில் தூத்துக்குடியில் உலவும் கடத்தல்காரர்களையும், பெரிய பெரிய டான்களையும் துவம்சம் பண்ணுகிறாராம்.

பள்ளிக்கூட மாணவியாக நடிக்கும் ஹன்சிகா தான் சர்வதேசக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சூர்யாவுக்கு உதவி செய்கிறாராம். இதைத் தெரிந்துகொண்ட பெரிய டான் ரகுமான், அண்ணன் மகள் என்று கூட பார்க்காமல் ஹன்சிகாவைக் கொன்றுவிடுகிறார்.

ஹன்சிகா இறந்த பிறகு சூர்யா வெறித்தனமாக வேட்டையாடி ரகுமான் நெட்வொர்க்கைக் கண்டுபிடித்து எல்லா டான்களின் சதிச் செயல்களையும் முறியடிக்கிறார். இதுதான் 'சிங்கம் 2' கதையாம். இந்தப் படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கும் பட்சத்தில் சிங்கம் - 3 எடுக்கும் ஐடியா இருக்கிறதாம்.

---Movie updates  

No comments: