2 கோடி சம்பளம் - மீண்டும் வாய்ப்புக்கொடுத்த தனுஷ்! ரெக்கைக்கட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்!
இப்போது இளைய நாயகர்களில் மிகவும் சென்சேஷனல் ஹீரோ சிவகார்த்திகேயன் தான்.
சிவகார்த்திகேயன் உட்பட விமல், விதார்த், சிவா, விக்ரம் பிரபு, கௌதம்
கார்த்திக் என அனைவரும் தன் சம்பளப்பணத்தை உயர்த்திவிட்டார்களாம். தன்
அடுத்தப் படத்திற்கு 2 கோடி சம்பளம் கேட்கிறாராம் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடித்த மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல்
என மூன்று படங்களுமே ஹிட்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சின்னத்திரையில் தனக்கான ரசிகர்களை
சிவகார்த்திகேயன் தக்கவைத்துக் கொண்டதுதான் இந்த அதிரடி வெற்றிக்கு காரணம்
என்றும் சொல்லப்படுகிறது. 5 கோடியில் உருவான எதிர்நீச்சல் ரிலீசான முதல்
வாரத்திலேயே கிட்டத்தட்ட 13 கோடி வசூலை பெற்றிருக்கிறது.
இது பற்றி சிவகார்த்திகேயன் பேசும் போது, ’இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த
என் தயாரிப்பாளர் தனுஷுக்கு நன்றி. பத்திரிக்கைகளில், என் சம்மளம் 2 கோடி
என்று எழுதுகிற அளவிற்கு என்னை உயர்த்திவிட்டது எதிர்நீச்சல் படம் தான்.
என்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படத்துக்கு நான்
கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்று சொல்லியதாக வதந்திகள் கிளப்புகிறார்கள்.
அது எதுவுமே உண்மை இல்லை. மீண்டும் தன் தயாரிப்பில் எனக்கு வாய்ப்பு
கொடுத்திருக்கிறார் தனுஷ்.’ என்று சொன்னார்.
No comments:
Post a Comment