29 May 2013

சுனாமியால் அதிர வைக்கும் பிரபு சாலமன் !
வித்தியாசமான கதைகளங்களை திரைப்படமாக்கி அதில் வெற்றியும் பெறுபவர் பிரபு சாலமன். கதைகளங்கள் மட்டுமன்றி படத்தினை அவர் காட்சியமைக்கும் இடமும் வித்தியாசமாக இருக்கும்.

இவரது இயக்கத்தில் வெளியான 'கும்கி' படத்தில், பிரபுசாலமன் காட்சியமைத்த இடங்கள் அனைவரது மனங்களையும் கொள்ளைக் கொண்டது.

இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த பிரபுசாலமன், அப்படத்தினை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்.

அப்படத்தில் 'நான் ஈ' படத்தில் நடித்த நானி நாயகனாக நடிக்க இருக்கிறார். குரங்கினி மலையில் யானையைப் பின்புலமாக ​வைத்துப் படமாக்கியவர், அடுத்து சுனாமியை மையமாக்கி இயக்குகிறார்.

சுனாமி இடம்பெறும் காட்சியை மட்டும் 40 நிமிடங்கள் காட்டி, படம் பார்ப்பவர்களை அதிரவைக்க திட்டமிட்டு இருக்கிறாராம் பிரபு சாலமன். அதுமட்டுமன்றி பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களின் பட்ஜெட்டையும் விட இப்படத்தின் பட்ஜெட் அதிகம். 

ரஜினி ஆர்வம் காட்டும் பாட்ஷா ரீமேக்! 
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த 'பாட்ஷா' திரைப்படம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே பெயரில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் சமீபத்தில் ஒரு படம் வெளியானது. இரண்டு படங்களும் பெயரில் மட்டும் தான் ஒன்றே தவிர, கதைகளங்கள் வெவ்வேறு.

ஜுனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்த அப்படத்தினை சீனு வாட்லா இயக்கி இருந்தார். தமன் இசையமைத்த இப்படம் ஆந்திராவில் வசூலை வாரிக் குவித்தது.

சமீபத்தில் அப்படத்தினைப் பார்த்த ரஜினிகாந்த், படக்குழுவினரை வெகுவாக பாராட்டி இருக்கிறார். அதுமட்டுமன்றி படக்குழுவினரிடம் பேசி, தென்னந்திய ரீமேக் உரிமையை வாங்கி அதில் தனுஷை நடிக்க வைக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

தற்போது மரியான், இந்தியில் RAANJHANAA, நையாண்டி, கே.வி.ஆனந்த் படம் என தனுஷின் திரையுலக வாழ்க்கை உச்சத்தில் இருப்பதால், அவர் இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறாராம் ரஜினி.

அதுமட்டுமன்றி BAADSHAH ரீமேக்கில் தனுஷ் நடித்தால், RAANJHANAA படத்தின் மூலம் தனுஷிற்கு கிடைத்து இருக்கும் இந்தி மார்க்கெட்டை கணக்கில் கொண்டு தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் வெளியிட்டு விடலாம் என்பது தான் ரஜினியின் திட்டம்.

BAADSHAH படத்தின் கதை என்ன தெரியுமா.. 'காக்கி சட்டை' படத்தின் இன்னொரு பரிமாணம் தான்.
 


அக்டோபரில் 'விஸ்வரூபம் 2'
படத்தின் இரண்டாம் பாகம் இந்தியாவில் என்று அறிவிப்போடு 'விஸ்வரூபம்' படம் முடிவடையும். அது போலவே தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கிவிட்டது.

கமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார், ராகுல் போஸ், சேகர் கபூர் நடிப்பில் கமல் எழுதி, இயக்கி, தயாரித்த படம் தான் 'விஸ்வரூபம்'. பெரும் சர்ச்சையில் சிக்கி வெளிவந்து வசூலை வாரி குவித்தது.

'விஸ்வரூபம் 2' இந்தாண்டே வெளிவரும் என்றும், 50% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்தார் கமல்.

அதுபோலவே தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கி இருக்கிறது. 'விஸ்வரூபம்' படத்தில் நடித்தவர்களே இப்படத்திலும் நடித்து வருகிறார்கள்.

கமல், ஆண்ட்ரியா பங்கேற்ற ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். அங்கு படப்பிடிப்பு முடிவடைந்ததும், பாங்காக்கில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். 'விஸ்வரூபம் 2' படத்தினை கமல் தயாரிக்கவில்லை, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
இப்படத்தினை அக்டோபரில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அப்படத்தினைத் தொடர்ந்து லிங்குசாமி தயாரிக்கும் படத்தினை இயக்கி, நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல்.

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா?
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன? என்பது குறித்து அறிய சென்னையில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அணுகினோம். நம் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தைத் தந்தார்கள் அவர்கள். 

ஏ.டி.எம். ஃபிட் கரன்சி!
ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த் தாள்களை லோடு செய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.

அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங் களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தால் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.

எப்படி வருகிறது?
எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது. Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்து வருகின்றன. இவர்களின் பணி வங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள். 

யாரை அணுகுவது?

வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம். ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.

பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

வங்கி நடைமுறைகள்!


  ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம். ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ள நோட்டுதானா என்று பரிசோதிப்பார்கள். அது கள்ள நோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள். உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள். இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தேகம் வந்தால் அவர் மீது வங்கியானது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது. 

எஃப்.ஐ.ஆர். ஃபைல்!
பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த் தாள்கள் கள்ள நோட்டுகளாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்களின் மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும். அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும். தனது ஏ.டி.எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.

ஆர்.பி.ஐ.-ன் உதவி!

வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ள நோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென்று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு, www.rbi.org.in, www.paisabolthahai.rbi.org.in என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.''

இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்!

 
அனிருத்தின் அசுர வளர்ச்சி! 


அனிருத் இசையமைப்பில் வெளிவந்ததோ 2 படங்கள் தான். பாடல்களுக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு, அடுத்தடுத்து ஒப்பந்தமாகி இருக்கும் படங்களால் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருக்கு கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த '3' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத், அப்படத்தின் பாடல்கள் அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றது. 'WHY THIS KOLAVERI' பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. பாடல்களால் மட்டுமே அப்படத்திற்கு மிகப்பெரிய ஒப்பனிங் கிடைத்தது.

அப்படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடித்த 'எதிர் நீச்சல்' படத்திற்கு இசையமைத்தார். அப்படத்தின் பாடல்களுக்கும் வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகம், படத்தின் பின்னணி இசை என அனைத்து விதத்திலும் அனிருத்திற்கு பாராட்டு கிடைத்தது.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கும் 'வணக்கம் சென்னை', எல்ரெட் குமார் இயக்கும் படம், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம், கே.வி.ஆனந்த் - தனுஷ் இணையும் படம் என வரிசையாக இசையமைக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, என்னவென்றால் கிருத்திகா உதயநிதி படத்திற்கு முதலில் ஹாரிஸ் ஜெயராஜை ஒப்பந்தம் செய்யலாமா என்று ஆலோசித்து இருக்கிறார்கள். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வேண்டும் என்றால், வெளிநாட்டிற்கு டிக்கெட், ஒரு நேரத்தில் ஒரு பாடல் மட்டுமே கிடைக்கும், அடுத்தடுத்து பாடல்கள் வேண்டும் என்றால் நீண்ட நாட்களாகும் என்பதால் அனிருத்தை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

அதுபோலவே ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் படங்கள் என்றாலே இசை ஹாரிஸ் ஜெயராஜ் தான். ஆனால் இப்போது இருவருமே அனிருத்தை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். எல்ரெட் குமார் இயக்கிய முதல் படமான 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் தான். ஆனால் அவர் இப்போது அடுத்து இயக்கும் படத்திற்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.

அனிருத்தின் இந்த அசுர வளர்ச்சி, பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களிடம் கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 ---Movie updates 
ஐபிஎல் கிரிக்கெட் : அணிகளின் உரிமையாளர்கள் பற்றிய தகவல்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என, சொல்லப்பட்டு வந்த குருநாத் மெய்யப்பன் சூதாட்டக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படும் நிலை உருவானபோது, அவர் அணியின் உரிமையாளர் அல்ல என்றும், வெறும் கௌரவ உறுப்பினர் மட்டுமே என இந்தியா சிமென்ட்ஸ் விளக்கம் அளித்தது. அதைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் நடந்து வரும் விசாரணையில், மற்ற சில அணி வீரர்களுக்கும் தொடர்பு இருக்கும் என தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், மற்ற அணிகளின் உரிமையாளர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
ஐபிஎல் அணிகளில், அதிகமான எண்ணிக்கை பங்குதாரர்களைக் கொண்ட அணி என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ட்ரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம்தான் இதன் அதிகாரப் பூர்வ உரிமையாளர். இந்த அணிக்கு 7 பங்குதாரர் இதில் உள்ளனர். இதில் நன்கு அறியப்பட்ட பங்குதாரர், பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. அடுத்து, பாம்பே டையிங் குழுமத்தைச் சேர்ந்த நெஸ் வாடியா மற்றும் கால்வே இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம். இந்த 3 தரப்புக்கும் தலா 22.98 சதவீத பங்குகள் உள்ளன.
அடுத்து, எம்பி ஃபின்மார்ட் என்ற நிறுவனத்துக்கும், விண்டி இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்துக்கும் தலா 11.49 சதவீத பங்குகள் தரப்பட்டுள்ளன. ரூட் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம், 4.09 சதவீத பங்குகளும், ஹோட்டல் துறையில் செயல்பட்டு வரும் ஏபிஜி சுரேந்திரா குழுமத் தலைவரான கரன் பால் 3.99 சதவீத பங்குகளும் பெற்றுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
 இந்த அணியின் உரிமையாளர், நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம். முன்னணி பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தனது ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் இதில் 54.77 சதவீத பங்குகளை பெற்றுள்ளார்.
அதே போல, பிரபல நடிகையான ஜூஹி சாவ்லா 20.10 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதுதவிர, மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த தி ஸீ ஐலேண்ட் இன்வெஸ்மெண்ட் என்ற நிறுவனத்தின் ஜே மேத்தா என்பவருக்கு 25.12 சதவீத பங்குகள் உள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஜெய்ப்பூர் ஐபிஎல் கிரிக்கெட் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும், மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த இ.எம். ஸ்போர்டிங் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் வைத்துள்ளது. அதில் நான்கு பேர் பங்குதாரர்கள். இதில் சுரேஷ் செல்லாராம் 44.1 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இவர், முன்னாள் ஐபிஎல் கமிஷனரான லலித் மோடியின் உறவினர் எனவும் சொல்லப்படுகிறது.
அடுத்து எமர்ஜிங் மீடியா என்ற நிறுவனப் பெயரில், 32.4 சதவீத பங்குகளை மனோஜ் பாதல் என்ற நபர் வைத்துள்ளார். பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, குக்கி இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம் மூலமாக 11.75 சதவீத பங்குகளை பெற்றுள்ளார். அதேபோல், ப்ளு வாட்டர் எஸ்டேட் என்ற நிறுவனம் மூலமாக, சர்வதேச மீடியா உலகில் அறியப்பட்ட லாச்லன் மூர்டெக் 11.75 சதவீத பங்குகளைப் பெற்றுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்.
 இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம். எனினும், இந்த குழுமத்தின் 3 நிறுவனங்களின் பெயரில் இந்த பங்குகள் உள்ளதாக தெரிகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்துக்கு 49.99 சதவீதமும், ஷினானோ இன்டஸ்ட்ரியல் ரிடெய்ல் என்ற நிறுவனத்துக்கும், டீஸ்டா ரிடெய்ல் என்ற நிறுவனத்துக்கும் தலா 20 சதவீதமும் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீதியுள்ள 10 சதவீத பங்குகள் இக்குழுமத்தைச் சேர்ந்த அன்ஷூ ஜெயின் என்பவரது பெயரில் உள்ளது என்கின்றன தகவல்கள்.

ஹைதராபாத் சன் ரெய்சர்ஸ்.
ஹைதராபாத் சன் ரெய்சர்ஸ் அணியின் உரிமையாளர், சன் டிவி நெட்வொர்க். இதன் மொத்த பங்குகளும் இந்த குழுமத்திடமே உள்ளன.

ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களுரு.
அணியின் உரிமையாளர் யூபி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட். இதன் பங்குகள் அனைத்தும், விஜய் மல்லையா தலைமையிலான யூ பி குழுத்திடம் உள்ளன.

டெல்லி டேர்டெவில்ஸ்.
இந்த அணியின் உரிமையாளர், ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ். டெல்லி விமான நிலையத்தை கட்டி நிர்வகிக்கும் ஜிஎம் ஆர் குழுமத்திடம் இதன் மொத்த பங்குகளும் உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ்.
இந்த அணியின் உரிமையாளர் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம். இதன் பங்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்திட்மே உள்ளது.

பூனே வாரியர்ஸ் அணி.
அடுத்த ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ள, பூனே வாரியர்ஸ் அணி. இதன் உரிமையாளர், சஹாரா அட்வென்ச்சர் ஸ்போர்டஸ் என்ற நிறுவனம். இதன் பங்குகள் அனைத்தும் சஹாரா இந்தியா குழுத்திட்ம் உள்ளன.


28 May 2013

போலிஸாக நடிக்கிறார் விஜயகாந்த் மகன்! 
 என் மகன் நடிக்கவிருக்கிறான் என்று விஜயகாந்த் அறிவித்ததும், திரையுலகின் பல இயக்குனர்களும் ஓடிச்சென்று கதை சொன்னார்கள் விஜயகாந்திடம்(!). 
எந்த கதையும் வேண்டாம் என்றுக் கூறிவிட்ட விஜயகாந்த் கொஞ்சநாளைக்கு அந்த முயற்சியை கிடப்பில் போட்டு வைத்திருந்தார். 

நேற்று(12.05.13) திருப்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த “காவல்துறை பாரபட்சம் காட்டுகிறது. ஆளுங்கட்சிக்கு ஒரு மாதிரியும், எதிர்க்கட்சிக்கு ஒரு மாதிரியும் நடந்துக்குறாங்க. எனக்குத் தெரியாதா காவல்துறை எப்படி நடந்துக்கனும்னு.
நான் எத்தனைப் படத்துல போலிஸ்காரனா நடிச்சிருக்கேன். என் பையனும் நடிக்க வர்றான். அவனுக்கும் போலிஸ் ட்ரெஸ் போட்டுத்தான் நடிக்கவைப்பேன். அப்ப தெரியும் போலிஸ்காரன்னா எப்படி நடந்துக்கனும்னு” என்று ஆவேசமாக பேசினார். 

2 கோடி சம்பளம் - மீண்டும் வாய்ப்புக்கொடுத்த தனுஷ்! ரெக்கைக்கட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்! 
 இப்போது இளைய நாயகர்களில் மிகவும் சென்சேஷனல் ஹீரோ சிவகார்த்திகேயன் தான். சிவகார்த்திகேயன் உட்பட விமல், விதார்த், சிவா, விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக் என அனைவரும் தன் சம்பளப்பணத்தை உயர்த்திவிட்டார்களாம். தன் அடுத்தப் படத்திற்கு 2 கோடி சம்பளம் கேட்கிறாராம் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடித்த மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் என மூன்று படங்களுமே ஹிட். 
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சின்னத்திரையில் தனக்கான ரசிகர்களை சிவகார்த்திகேயன் தக்கவைத்துக் கொண்டதுதான் இந்த அதிரடி வெற்றிக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 5 கோடியில் உருவான எதிர்நீச்சல் ரிலீசான முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட 13 கோடி வசூலை பெற்றிருக்கிறது. 

இது பற்றி சிவகார்த்திகேயன் பேசும் போது, ’இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த என் தயாரிப்பாளர் தனுஷுக்கு நன்றி. பத்திரிக்கைகளில், என் சம்மளம் 2 கோடி என்று எழுதுகிற அளவிற்கு என்னை உயர்த்திவிட்டது எதிர்நீச்சல் படம் தான். 

என்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படத்துக்கு நான் கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்று சொல்லியதாக வதந்திகள் கிளப்புகிறார்கள். அது எதுவுமே உண்மை இல்லை. மீண்டும் தன் தயாரிப்பில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் தனுஷ்.’ என்று சொன்னார்.



 
அஜித் விஜய்யின் திடீர் கூட்டணி நட்பு?
இரு துருவங்களாக இருந்த அஜீத்தும் விஜய்யும் இப்போது அல்டிமேட் ஃபிரண்ட்ஸ் ஆகிவிட்டார்கள். ஆனால் அவரது ரசிகர்கள் இப்போதும் கட்டி உருள்வது தொடர் கதையாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் ரத்தம் சொட்டுகிற அளவுக்கு கழுத்தை நெறித்துக் கொள்கிறார்கள் அவர்கள். இவர்களை சமாதானப்படுத்த ஆயிரம் பக்க அறிக்கைகள் விட்டாலும் ஒன்றுக்கும் உதவாது என்பதை புரிந்து வைத்திருக்கும் இருவரும் அதிரடி ஆக்ஷனில் இறங்கியிருக்கிறார்கள். அதுதான் இது.
சமீபத்தில் மும்பையில் விஜய் நடித்த தலைவா ஷுட்டிங் நடந்தது. அப்போது ஷுட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துவிட்டார் அஜீத். தலைவா பாடல்களை அஜீத்திற்கு போட்டு காட்டினாராம் விஜய். ஆஹா.. ஓஹோ… என அவற்றையெல்லாம் பாராட்டியிருக்கிறார் அஜீத்.
அதற்கப்புறம் விஜய் தங்கியிருக்கும் ஓட்டலுக்கே வந்து டின்னரில் கலந்து கொண்டாராம் அஜீத். இந்த கூட்டணி இணை சேர்வது ரசிகர்களின் மோதலை தவிர்க்க மட்டும்தானா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் இருக்கா?
‘தல தளபதி’ சலூன்ல வெட்டிகிட்டே பேச வேண்டிய வெட்டி விஷயம் இல்லைங்க அது! 


பொங்கல் விருந்தாக 'ஜில்லா'
 விஜய் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி என்னவென்றால் 'ஜில்லா' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது என்பது தான்.

விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் படம் 'ஜில்லா'. புதுமுக இயக்குனர் நேசன் இயக்கி வருகிறார். இமான் இசையமைக்க ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார்.

விஜய் - மோகன்லால் கலந்து கொள்ளும் படப்பிடிப்பிற்காக சென்னையில் ஒரு பிரம்மாண்ட அரங்கம் ஒன்று தயாராகி வருகிறது. மதுரை, காரைக்குடியில் மோகன்லால், பூர்ணிமா கலந்து கொண்ட முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்றது.

சென்னையில் நடைபெற இருக்கும் படப்பிடிப்பில்தான் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். 'ஜில்லா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காட்சிகளை எடிட் செய்ய தொடங்கிவிட்டதாகவும், காட்சிகள் பிரதமாக இருப்பதாகவும் படத்தொகுப்பாளர் ப்ரவீன் தனது டிவிட்டர் இணையத்தில் தெரிவித்து இருக்கிறார்.

'தலைவா' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், 'ஜில்லா' படத்தின் பணிகளும் மறுபுறத்தில் படுஜோராக நடைபெற்று வருகிறது. சென்னையில் தொடங்க இருக்கும் படப்பிடிப்பு முடிந்தவுடன், பாடல்களை படமாக்க வெளிநாடு செல்ல இருக்கிறார்கள்.

பொங்கல் 2012ல் வெளியான 'நண்பன்' பெரிய ஹிட்டாக அமைந்ததால், 'ஜில்லா' படத்தினை பொங்கல் 2014ல் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

27 May 2013

டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள்.

டைட்டானிக் படம் பற்றி தான் அனைவரும் பேசுகிறோமே தவிர நிஜ டைட்டானிக் கப்பல் பற்றி நம்மில் எத்தனை பேர் தெரிந்து கொண்டோம் என்று தெரியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் வரை எனக்கும் எதுவும் தெரியாது இதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் இந்தக் கப்பல் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலில் எழுதுகிறேன். இதன் மூலம் நானும் பல விசயங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
படிக்க ஓரளவு எளிமையாக கொடுக்க முயற்சிக்கிறேன். குற்றம் குறை இருப்பின் மன்னிப்பீர்களாக
உலகின் முதல் சொகுசுக் கப்பலான டைட்டானிக்கின் பெயர் RMS TITANIC. இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான White Star Line நிறுவனம் இதைக் கட்டியது.
கப்பல் கட்டும் பணி 1909 மார்ச் மாதம் 31 ம் தேதி துவங்கி 1911 மே மாதம் 31 ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் கட்டப்பட்ட இந்தக்கப்பலின் எடை 46,328 டன் ஆகும்.
Southampton நகரில் (இங்கிலாந்து) இருந்து கிளம்பி Cherbourg, France & Queenstown, Ireland வழியாக நியூயார்க் சென்றடைவதாக திட்டமிடப்பட்டது.
டைட்டானிக் கப்பல் பெண் பாலில் தான் (She) அழைக்கப்படுகிறது அதாவது இந்தக்கப்பலை பெண்ணாக கருதுகிறார்கள்.
இந்தக் கப்பல் A முதல் G வரை பல அடுக்குகளாக கட்டப்பட்டது. மேல் (A) அடுக்கில் முதல் வகுப்பு பயணிகளான செல்வந்தர்களுக்கும் அதன் கீழே வரும் அடுக்குகள் அதற்கு கீழ் வகுப்புகளான இரண்டு, மூன்று வகுப்பு பயணிகளுக்குமானது. மூன்றாம் வகுப்பு பயணிகள் அறை டார்மிட்டரி என்று அழைக்கப்படும் பல அடுக்குகளைக் கொண்ட படுக்கைகளால் ஆனது. (டைட்டானிக் படத்தில் ஜேக் ன் அறை)
 இந்த சொகுசுக் கப்பல் முக்கியமாகப் பணக்காரர்களுக்காகவே கட்டப்பட்டது. இதில் உள்ள ஒரு அடுக்கின் பெயரான Promenade Deck (A Deck) ல் நீச்சல்க் குளம், சொகுசான உணவருந்தும் இடம், படிக்கும் எழுதும் இடம், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு இடம் மற்றும் புகைபிடிக்கும் இடம் என்று பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டது. இதில் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் சாமானியர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. புரியும் படி கூறவேண்டும் என்றால் சாதா விடுதியில் தங்கி இருந்தவர் ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்றால் எப்படி மலைத்துப் போவாரோ அது போல இருக்கும். முதல் வகுப்புப் பயணிகள் தங்களுடன் செவிலியர் உதவியாளர்கள் ஆகியோரை துணைக்கு அழைத்து வர அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய பணக்காரர்கள் பெரும்பாலும் சென்றனர் இதில் அமெரிக்க மில்லியனர் John Jacob Astor IV மற்றும் இவரது 18 வயது கர்ப்பமான மனைவி பிரசவத்திற்காக நியூயார்க் சென்றார்கள். John Jacob Astor IV தான் இந்தக்கப்பலில் மிகப்பெரிய பணக்காரர். இவர் ஆண் என்பதால் படகில் ஏற அனுமதிக்கப்படவில்லை பின் 1912 ஏப்ரல் 22 ம் தேதி இவருடைய இறந்த உடலுடன் இருந்த பல ஆயிரம் டாலர்கள் பணமும் கண்டு எடுக்கப்பட்டது. RMS Carpathia கப்பலால் காப்பற்றப்பட்ட இவரது மனைவி இதன் பிறகு 1916 ல் மறுமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு இன்னொருவரை 1933 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மூன்றாம் வகுப்பில் தான் அதிக பயணிகள் இருந்தார்கள் இவர்கள் பெரும்பாலும் குடியேறிகள், அமெரிக்கா சென்று வேலை தேடி தங்கள் வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டு இதில் வந்தவர்கள். பல நாட்டை சேர்ந்தவர்களும் இதில் இருந்தனர். மூன்றாம் வகுப்பில் இருந்த இரண்டு மாதக் குழந்தையான Millvina Dean தான் இருந்ததிலேயே வயது குறைந்த பயணி!! இவர் தன்னுடைய 97 ம் வயதில் 2009 ஆண்டு காலமானார். டைட்டானிக் விபத்தில் பிழைத்தவர்களில் இவர் தான் கடைசி நபர்.
ஒவ்வொரு அடுக்கிற்க்கும் கதவு இருக்கும் இதனால் ஒரு வகுப்பு பயணிகள் மற்ற வகுப்பு பயணிகளுடன் கலக்காமல் இருக்க முடியும். விபத்து ஏற்பட்ட போது கதவு மூடி இருந்ததால் சிலர் வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டனர்.
கப்பலில் செல்லக் கட்டணம் தோராயமாக மூன்றாம் வகுப்பிற்கு $36 இரண்டாம் வகுப்பிற்கு $66 முதல் வகுப்பிற்கு $125 மற்றும் டீலக்ஸ் வகுப்பிற்கு $4500 ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நூறு வருடம் முன்பு 4500$ என்றால் தற்போது கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது. அந்தக்காலத்தில் ஒரு வீட்டையே 1000$ க்கு வாங்க முடியுமாம்!
விபத்து ஏற்ப்பட்டால் தப்பிக்க 20 படகுகள் (Life boats) மட்டுமே இருந்தன இதில் 16 படகுகள் 65 பேரையும் 4 படகுகள் 47 பேரையும் கொள்ளும் அளவு கொண்டது 1100 – 1200 பேர் தப்பித்து இருக்க முடியும் ஆனால் இதில் 710 பேர் மட்டுமே தப்பிக்க முடிந்தது. முதல் வகுப்பு பயணிகள் படகில் மிகக் குறைவானவர்களே இருந்தனர் அதோடு தனது படகில் ஏறி படகை கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்று பலரை படகில் ஏற இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த விபத்திற்குப் பிறகே பாதுகாப்பு விசயத்தில் அனைவரும் அதிக கவனம் செலுத்தினார்கள். உயிர்காக்கும் படகுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது.
படகில் ஏற முடியாதவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து குளிரில் சில நிமிடங்களில் விரைத்து இறந்து விட்டார்கள். கடுமையான பனி (−2°C) அப்போது நிலவியது. டைட்டானிக் படத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம் ஜேக் தண்ணீரில் விழுந்த உடனே அவரது தலை முடியில் இருந்த நீர் பனிக்கட்டியாக மாறி இருக்கும்.
நம்மால் பனிக்கட்டியையே சில நொடிகள் கூட கையில் வைத்து இருக்க முடியாது அப்படி இருக்கும் போது நம் உடல் முழுவதும் இதைப் போல குளிர்ச்சியில் இருந்தால்!…
தப்பித்துச் செல்ல குழந்தைகளுக்கும் பெண்களுக்குமே முன்னுரிமை வழங்கப்பட்டது எனவே இந்தக்கப்பலில் சென்ற பெரும்பான்மையான ஆண்கள் இறந்து விட்டார்கள். அப்படியும் தப்பித்த ஆண்கள் நாட்டில் உள்ளவர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர் காரணம் பல குழந்தைகள் பெண்கள் படகு கிடைக்காமல் இறந்து விட்டனர் அப்படி இருக்கும் போது அவர்களை காப்பாற்றாமல் கோழை போல இவர்கள் நடந்து கொண்டதால் பலரால் அதன் பிறகு சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு இகழப்பட்டனர்.
மூன்று என்ஜின்களைக் கொண்ட இதில் இரண்டு எஞ்சின்கள் இணைந்து 30,000 குதிரை சக்தியை (Horse Power) தரவல்லது. நிலக்கரி மூலம் வேலை செய்யும் Turbine மேலும் 16,000 குதிரை சக்தி வேகத்தை தரவல்லது மொத்தம் 46,000 குதிரை சக்தி. இரண்டு எஞ்சின்கள் 720 டன் எடை கொண்டதாகும். இதை இயக்குவதில் 176 பணியாளர்கள் பகுதி நேர வேலையில் (24/7) பயன்படுத்தப்பட்டார்கள். அழுக்கு, வெப்பம் அதிகம் உள்ள இடம் என்பதால் இங்கு பணி புரிவது என்பது மிகச் சிரமமான ஒன்றாகும். இதில் தினமும் வரும் 100 டன் சாம்பல் கடலில் கொட்டப்பட்டது.
கப்பலின் வேகம் மணிக்கு 39 கிலோ மீட்டர்
முதல்வகுப்பில் 739 பயணிகளும், இரண்டாம் வகுப்பில் 674 பயணிகளும், மூன்றாம் வகுப்பில் 1026 பயணிகளும் இவர்களோடு 900 பணியாளர்களும் பயணம் செய்ய முடியும் ஆக மொத்தம் 3, 339 பேர் பயணம் செய்யலாம் ஆனால் இதில் 2,224 நபர்கள் மட்டுமே (900 ஊழியர்களும் சேர்த்து) பயணம் செய்தார்கள். முன்பே குறிப்பிட்டபடி இந்தக்கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணிகளே அதிகம் இருந்தனர். அப்போது ஒவ்வொரு குடும்பமும் மிகப்பெரியதாக இருக்கும் 7 குழந்தைகள் எல்லாம் சகஜமாக பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு வந்தவர்கள் பலர் குடும்பத்தோடு இறந்து போனார்கள்.
டைட்டானிக் பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல பயன்படாமல் கார்கோ என்று அழைக்கப்படும் சரக்குப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டது. இதில் பல டன் பொருட்கள் சரக்குகளாக கொண்டு செல்லப்பட்டன. கடிதங்கள் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது.
இதில் பயன்படுத்தப்பட்ட தந்தி முறை சாதனங்கள் 1000 மைல் வரை தகவல்களை அனுப்ப வல்லது.
ஏப்ரல் 14 இரவு 11 : 40 மணிக்கு டைட்டானிக் 220 அடி நீள பனிப்பாறையில் மோதி மூழ்கத் தொடங்கி ஏப்ரல் 15 விடியற்காலை 2 : 20 மணிக்கு முற்றிலுமாக 12,415 அடி ஆழத்தில் (3,784 மீட்டர்) மூழ்கியது. விபத்து நடந்தவுடன் உதவி கோரிய போது அருகில் இருந்தது கப்பல் RMS Carpathia ஆகும், தூரம் சுமார் 93 கிலோ மீட்டர். இது வர 4 மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டது. RMS Carpathia சரியாக 4 : 10 மணிக்கு டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கு வந்து படகில் பிழைத்தவர்களை காப்பாற்றியது. படகில் இருந்தவர்கள் ஒரு சிலர் குளிர் தாங்காமல் இறந்து விட்டார்கள். இந்த விபத்தில் மொத்தமாக 1,514 பேர் இறந்து விட்டார்கள் பணியாளர்களுடன் சேர்த்து 710 பேர் உயிர் பிழைத்தார்கள்.
 கேப்டன் Edward John Smith இருப்பதிலேயே மிகுந்த அனுபவம் பெற்றவராக விளங்கி இருந்தார். கப்பல் மூழ்கும் போது கடைசியாக இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று பல்வேறு ஊகங்கள் கூறப்படுகின்றன. செய்தி அறையில் பரபரப்பாக இருந்தார் என்றும், அறையினுள் அமைதியாக சென்று விட்டார் என்றும், தண்ணீரில் குதித்து ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உலவுகின்றன. இவருக்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டுள்ளது.
மூழ்க வாய்ப்பே இல்லை கடவுளாலும் எதுவும் செய்ய முடியாது என்று கருதப்பட்ட டைட்டானிக்கின் முதல்ப் பயணமே கடைசிப்பயணமாக ஆகிப் போனது மிகவும் சோகமான விசயமாகும். 10 ஏப்ரல் 1912 அன்று புறப்பட்டு 15 ஏப்ரல் 1912 மூழ்கிய டைட்டானிக் மொத்தமாக பயணம் செய்தது நான்கு நாட்கள் மட்டுமே!
மனிதன் என்னதான் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எதை உருவாக்கினாலும் இயற்கை முன்பு நாம் ஒன்றுமில்லை என்று நம் அனைவருக்கும் இயற்கை உணர்த்திக்கொண்டே வருகிறது. அதில் விலை உயர்ந்த பாடமாக மனித குலத்திற்கு இந்த விபத்து அமைந்து விட்டது.
ஏப்ரல் 15 2012 உடன் டைட்டானிக் மூழ்கி 100 ஆண்டுகள் ஆகப்போகிறது.
உண்மையில் டைட்டானிக் பற்றிய தகவல்களை திரட்டி மிரண்டு விட்டேன். எடுக்க எடுக்க பல பல புதிய சுவாரசியமான தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அத்தனையையும் எழுதினால் நான் ஒரு புத்தகம் தான் எழுத வேண்டும் அப்பவும் கூட அத்தனையும் எழுத முடியுமா! என்பது சந்தேகம் தான். எத்தனை எத்தனை விதமான தகவல்கள்!!! மலைத்து விட்டேன். உண்மையில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து விட்டேன் காரணம் முற்றும் போட முடியாத அளவிற்கு சங்கலித்தொடராக தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது அமுத சுரபி போல. இனியும் முடியாது! என்று இதோடு நிறுத்திக்கொண்டேன் ஆனால் நிச்சயம் இது சுவாரசியமான அனுபவமாக இருந்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.
சிறிய அளவில் கூற நினைத்து வழக்கம் போல நீண்டு விட்டது  இந்தப்பதிவு உங்களுக்கு “டைட்டானிக்” பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள உதவியிருக்கும் என்று நம்புகிறேன். கடைசி வரை முழுமையாகப் படித்தவர்களுக்கு நன்றி.




பொங்கல் தினத்தன்று 'ஐ'!
 எப்போதுமே யாரும் எதிர்பார்க்காத இடங்கள், பிரம்மாண்டமான அரங்குகள், ரயிலுக்கு பெயிண்ட் அடிப்பது, துணை நடன கலைஞர்கள் அனைவருக்கும் பெயிண்ட் அடித்து ஆடவைப்பது என பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் ஷங்கர்.

விக்ரம், ஏமி ஜாக்சன், சுரேஷ் கோபி, ராம் குமார், சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் 'ஐ' படத்தினை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ராம் ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கர் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு VFX எனப்படும் கிராபிக்ஸ் பணிகளை LORD OF THE RINGS படத்திற்கு கவனித்த குழு செய்து வருகிறது. தற்போது கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜுன் 2ம் வாரம் சென்னையில் துவங்க இருக்கிறது. செப்டம்பர் மாதம் வரை படப்பிடிப்பு இருக்கிறதாம். பின்னணி இசைக் கோர்ப்பு பணியையும் விரைவில் துவங்க திட்டமிட்டு இருக்கிறாராம் ரஹ்மான்.

இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள், டப்பிங் பணிகள், பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் என அனைத்தும் முடிய இந்தாண்டு இறுதி ஆகிவிடுமாம், அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று இப்படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.


26 May 2013

ரஜினியின் அட்வைஸால் ஹீரோவாகும் கனவை கைவிட்ட அனிருத்!
விஜய், முருகதாஸ் இணையப்போகும் படத்திற்கு அனிருத் இசைமைப்பாளராகிவிட்டார் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் சில பேருக்கு பெருங்காயத்தையும், சில பேருக்கு வெல்லத்தையும் கரைத்துக் கொடுத்திருக்கிறது. பெருங்காய பார்ட்டிகளை விடுங்கள்… வெல்லக்கட்டி மனசுக்காரர்களை பார்ப்போம்.
முதலில் அனிருத்தை அழைத்து பாராட்டியவர் ரஜினிதானாம். ‘உன் வளர்ச்சிக்கு என்னோட ஆசிர்வாதங்கள்’ என்றவர், அதற்கப்புறம் சொன்னதுதான் அனிருத் கைகட்டி வாய்பொத்தி கேட்க வேண்டிய விஷயம். ‘இப்படியே இசையிலே கவனம் செலுத்தி இன்னும் இன்னும்னு பெரிய படங்கள் செய்யணும். அவ்வளவு ஏன்? நீ என் படத்திற்கு இசையமைக்கிற நேரமும் வந்து கொண்டேயிருக்கு. (பிளான் பண்ணிட்டாரோ) இந்த நேரத்தில் நானே ஹீரோவா நடிக்கிறேன்னு இறங்கி வாழ்க்கைய ஸ்பாயில் பண்ணிக்காதே. இறைவன் காட்ற ரூட்டுல சந்தோஷமா போகணும். நீயே இன்னொரு பாதையை டிசைட் பண்ணி, கிடைச்சிருக்கிறதையும் விட்ற கூடாது. யோசி’ என்றாராம்.
அவரே சொல்லிட்ட பிறகு அப்புறம் என்ன? தனது ஹீரோ ஆசையை டிஷ்யூ பேப்பர் வைத்து அனிருத் துடைத்தெறிந்தால் அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
அனிருத்தை மடக்க ஏகப்பட்ட வியூகத்துடன் அவர் வீட்டு தெருவை நோட்டம் விட்டு வரும் உதவி இயக்குனர்கள் அப்படியே தெருமுனை டீக்கடையில் ஒரு கப் டீ சாப்பிட்டு விட்டு யுவன் ஷங்கர் வீட்டுப்பக்கம் போனால் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஏனென்றால் அனிருத் மனசில் பூத்த மொட்டு இப்போது யுவன் மனசில்தான் ஜில்லென்று பூத்திருக்கிறதாம்.

சென்னையில் குட்டிபுலியை 90 தியேட்டர்களில் வெளியிட திட்டமிடும் உதயநிதி!
அவரு தயாரிச்சு வேறொருத்தருக்கு விற்று, அதை வேறொருவர் வாங்கி, அதை இன்னொருத்தருக்கு கைமாற்றி, ரிலீஸ் நேரத்துல பொட்டி யாரு கையில இருக்கும்னு தெரியாமலே சுற்றி சுற்றி வருவது அண்மைகால ட்ரென்ட். கூட்டி கழித்து பார்த்தால் கூட்டலும் கழித்தலும்தான் மிச்சம்னு சொல்ற அளவுக்கு இருக்கிறது இப்படி வரும் சில படங்களின் ரிசல்ட்!

இன்னும் சில தினங்களில் வெளிவரப்போகும் குட்டிப்புலி படத்தை வாகை சூடவா என்ற படத்தை தயாரித்த முருகானந்தம்தான் தயாரித்தார். அதை அப்படியே சன் பிக்சர்சுக்கு விற்றார்கள். இப்போது அந்த படத்தின் தியேட்டர் ரிலீஸ் வேலைகளை உதயநிதியின் ரெட் ஜயன்ட் நிறுவனம்தான் கவனிக்கப் போகிறதாம்.

அகல கரண்டியால சாம்பாரை அள்ளினால் கொஞ்சமாகவா வரும்? அப்படிதான் அணுகுகிறார்களாம் குட்டிப்புலியையும். சென்னையிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தை சுமார் 90 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம் உதயநிதி. அப்படியென்றால் மற்ற நகரங்களில் எப்படியிருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.

முன்பெல்லாம் ரஜினி விஜய் படங்களுக்குதான் இப்படி மாஸ் காண்பிப்பார்கள். இப்போது சசிகுமார் படத்திற்கும்! ஹ்ம்ம்ம்… கோடம்பாக்கத்தின் அட்டாக் கோக்குமாக்காகவே இருக்கிறது கொஞ்ச நாட்களாக! 

சினிமாவில் நேர்மையை கடைப்பிடிக்கும் அஜித்!
எத்தனை துன்பங்கள் இருந்தாலும் தொழிலில் அக்கறையும், பக்தியும் கொண்ட ஒரு நடிகர் உண்டென்றால் அவர் நடிகர் அஜித்தான்.

படப் பிடிப்பின் போது காலம் கடத்தும் ஒவ்வொரு நிமிஷத்துக்காக விரையமாகும் செலவு என்ன என்பதை உணர்ந்தவர் அவர். அதனால் தன்னால் முடிந்த அளவுக்கு படப் பிடிப்பில் குறித்த நேரத்தில் கலந்து கொள்வார்.
தயாரிப்பாளருக்கு தன்னால் நஷ்டம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அப்படி சமீபத்தில் ‘வலை’ படத்துக்கான சூட்டிங் குலுமணாலியில் நடந்து கொண்டிருக்கிறது.

டெல்லியில் இருக்கும் அஜித் படப் பிடிப்பு நடக்கும் குலுமணாலிக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டும்.

உடனடியாக பைக் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு, கரெக்டாக சூட்டிங்கில் கலந்து கொண்டார். இதற்காக பைக்கில் பயணமான தூரம் 550 கிலோ மீட்டர். இதை ஒன்பது மணி நேரத்தில் கடந்துள்ளார்.

---Movie updates



பின்வாங்கினார் தலைவா விஜய்!


இரண்டு முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ஒரே வாரத்திலோ அல்லது ஒரே நாளிலோ திரைக்கு வந்தால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அப்படித்தான் விஜய்யின் தலைவாவும்,சூர்யாவின் சிங்கம்-2வும் அடுத்த மாதம் ஒரே நாளில் திரைக்கு வருவதாக கடந்த சில வாரங்களாக கோலிவுட்டில் பரபரப்பு தீயை பற்றிக்கொண்டு எரிந்தது. ஆனால், இப்போது கொளுந்து விட்டு எரிந்த தீயில் மழை கொட்டியது போல் அந்த செய்தி புஷ் ஆகி விட்டது.


அதாவது, ஒரே நேரத்தில் வெளியாக இருந்த அப்படங்களில் விஜய்யின் தலைவா ஜூலை மாதத்துககு தள்ளிப்போய் உள்ளது காரணம், விஜய், அமலாபால் நடித்த காட்சிகள் முடிந்து விட்டபோதும, சிலர் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னமும் படமாக வேண்டியுள்ளதாம். அதனால் ஜூன் மாதம் என்று கூறிவந்தவர்கள் இப்போது தேதியை மாற்றி அறிவித்து விட்டனர். ஆக, அடுத்த மாதம் சூர்யாவின் சிங்கம்-2மட்டும் சீறிப்பாய வருகிறதாம்.


கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ள தனுஷ்.
  
இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த். அவர் இயக்கிய ‘மாற்றான்’ படத்துக்குப் பின் ரஜினிக்கு கதை சொல்லி ஒகே ஆகிவிட்டது.

‘கோச்சடையான்’ முடிந்ததும் ரஜினி நடிக்கிறார் என்று பேசிக்கொண்டார்கள். அதன் பிறகு, ரஜினி நடிக்கவில்லை.

அவருக்கான கதைதான் என்றாலும் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் அவர் நடிக்க மாட்டார் என்றார்கள். அப்புறம், நடிகர் ஆர்யாவை வைத்து கே.வி.ஆனந்த் இயக்குகிறார் என செய்தி வெளியானது.

தற்போது அதுவும் இல்லை என்றும், இறுதியாக தனுஷ்தான் நடிக்கிறார். என பேச்சு அடிபடுகிறது. இதுதான் உண்மை என்பது போல், தனுஷும் தனது வலைதளத்தில் அடுத்து நான் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று செய்தி வெளியிட்டிருக்கிறார். ஆக, இதுதான் உண்மை தகவலாக இருக்கிறது.

1500 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்த அயன்மேன் 3!

வசூல்னா இதுதான் வசூல். வட அமெரிக்காவில் மட்டும் அயன் மேன் 3 சென்ற வார இறுதிவரை 1500 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்திருக்கிறது.
அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே 42 நாடுகளில் அயன் மேன் 3 வெளியானது. முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய ஆயிரம் கோடிகளை வசூல் தொட்டது. அமெரிக்காவிலும் அதே வசூல் மழை. இந்த வார யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் வார இறுதியில் 35.8 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 3 வாரங்களில் இதன் யுஎஸ் வசூல் மட்டும் ஏறக்குறைய 338 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
முதலிடத்தில் சென்ற வாரம் வெளியான ஸ்டார் ட்ரெக் இன் டூ டார்க்னெஸ் உள்ளது. வார இறுதியில் இதன் வசூல் – வியாழன் ப்ரிமியரும் சேர்த்து 83.7 மில்லியன் டாலர்கள்.
மூன்றாவது இடத்தில் அமிதாப்பச்சன் கௌரவ வேடத்தில் நடித்த டிகாப்ரியோவின் த கிரேட் கேட்ஸ்பை. இரண்டாவது வார இறுதியில் 23.9 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ள. இரண்டு வாரங்களின் மொத்த வசூல் 90.7 மில்லியன் டாலர்கள்.
நான்காவது இடத்தில் பெயின் அண்ட் கெய்ன். சென்ற வார இறுதியில் 3.2 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. நான்கு வாரங்களில் வசூல், 46.7 மில்லியன் டாலர்கள். ஐந்தாவது இடத்தில் அனிமேஷன் படமான த க்ரூட்ஸ். ஒன்பதாவது வார இறுதியில் 3.02 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஒன்பது வார மொத்த யுஎஸ் வசூல் 177 மில்லியன் டாலர்கள்.

சூதாடிய அமலா பால்!!!

தலைவா படத்துக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள அமலா பால், அங்கு நடிகர் சுரேஷுடன் சேர்ந்து சூதாடி பணம் ஜெயித்தாராம். விஜய் நடிக்க, விஜய் இயக்கும் புதிய படம் தலைவா. சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு இரு ஜோடிகள். ஒருவர் அமலா. மற்றவர் ராகிணி நந்த்வனி. இப்போது படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. விஜய்யுடன் இரு நாயகிகளும் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.
போன இடத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் போரடித்ததாம் அமலாவுக்கு. அப்படியே சுற்றிப் பார்க்கக் கிளம்பியவர் சூதாட்ட கிளப்புக்குள் நுழைந்து, ஒரு ஆட்டம் ஆடினாராம். முதலில் ஆடியபோது சறுக்கினாலும், அடுத்து நடிகர் மொட்டை சுரேஷுடன் இணைந்து ஆடி கேமை வென்றாராம். இதனை பெருமையாக சொன்ன அமலா பால், சூதாட்டத்தில் எனக்கு ரொம்ப லக்கி ஜோடி சுரேஷ்தான். நானும் அவரும் ஒரு ஆட்டத்தில் வென்றோம் என்று கூறியுள்ளார்.