29 May 2013

அக்டோபரில் 'விஸ்வரூபம் 2'
படத்தின் இரண்டாம் பாகம் இந்தியாவில் என்று அறிவிப்போடு 'விஸ்வரூபம்' படம் முடிவடையும். அது போலவே தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கிவிட்டது.

கமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார், ராகுல் போஸ், சேகர் கபூர் நடிப்பில் கமல் எழுதி, இயக்கி, தயாரித்த படம் தான் 'விஸ்வரூபம்'. பெரும் சர்ச்சையில் சிக்கி வெளிவந்து வசூலை வாரி குவித்தது.

'விஸ்வரூபம் 2' இந்தாண்டே வெளிவரும் என்றும், 50% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்தார் கமல்.

அதுபோலவே தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கி இருக்கிறது. 'விஸ்வரூபம்' படத்தில் நடித்தவர்களே இப்படத்திலும் நடித்து வருகிறார்கள்.

கமல், ஆண்ட்ரியா பங்கேற்ற ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். அங்கு படப்பிடிப்பு முடிவடைந்ததும், பாங்காக்கில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். 'விஸ்வரூபம் 2' படத்தினை கமல் தயாரிக்கவில்லை, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
இப்படத்தினை அக்டோபரில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அப்படத்தினைத் தொடர்ந்து லிங்குசாமி தயாரிக்கும் படத்தினை இயக்கி, நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல்.

No comments: