17 Aug 2013

'தலைவா' - இன்று உரிமை; நாளை ரிலீஸ் - அன்பழகன் அதிரடி!

'தலைவா' - இன்று உரிமை; நாளை ரிலீஸ் - அன்பழகன் அதிரடி! 

விஜய் நடித்துள்ள 'தலைவா' திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, தமிழகத்தில் இன்னும் படம் வெளியாகவில்லை. ஆனால், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் படம் வெளியானது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். 'தலைவா' படத்திற்கு என்னதான் பிரச்னை என்பது புரியாத புதிராக இருக்கிறது. 

'விஸ்வரூபம்' படத்தினைப் போன்று அரசாங்கம் படத்தினை வெளியிடத் தடை என்று அறிவிக்காத நிலையில், 'தலைவா'விற்கு என்ன பிரச்னை என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.

இந்நிலையில், அன்பு பிக்சர்ஸ் நிறுவனரும், தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன், தனது டிவிட்டர் இணையத்தில், " 'தலைவா' படத்தினை எங்களுக்கு (அன்பு பிக்சர்ஸ்) கொடுத்தால் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியிடத் தயார்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் சந்தோஷம் தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து அன்பழகனிடம் பேசினோம். " 'ஆதிபகவன்' படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில், ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்பது எனக்குத் தெரியும். ஆகையால் தான் எனது டிவிட்டர் இணையத்தில் 'தலைவா' படத்தினை எங்களுக்குக் கொடுத்தால் வெளியிடத் தயார் என்று கூறினேன்.

வெளிநாடு, வெளிமாநிலங்கள் என படம் வெளியானாலும், எனக்குக் கவலையில்லை. இப்போதெல்லாம் படம் வெளியான அன்று, படத்தின் சி.டி. பர்மா பஜாரில் கிடைக்கிறது. எனவே, இணையத்தில் வெளியானது பற்றியும் நான் கவலைப்படவில்லை. 'தலைவா' மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இன்று காலை முதலே, எனக்குத் தெரிந்த ஒவ்வொரு மாவட்ட விநியோகஸ்தர்களிடமும் பேசி வருகிறேன். அவர்களும் 'கண்டிப்பாக வாங்குங்கள், வெளியிடத் தயாராக இருக்கிறோம்' என்று தெரிவித்து வருகிறார்கள். ஆகையால், எனக்கு படத்தின் வெளியீட்டு உரிமையை அளித்தால் வெளியிடத் தயாராக இருக்கிறேன்.

அரசாங்கம் படத்திற்கு எவ்வித தடையையும் விதிக்கவில்லை. தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்களும் படத்தினை வெளியிடத் தயாராக இருக்கிறார்கள். பிறகு ஏன் நான் கவலைப்பட வேண்டும்? 'தலைவா' வெளியீட்டு உரிமை இப்போது எனக்கு வந்தால் கூட படத்தை நாளை காலை ரிலீஸ் செய்ய முடியும்.

அதற்காக நான் வேந்தர் மூவிஸுக்குப் போட்டியாகச் செயல்படுகிறேன் என்றில்லை. அவர்களால் முடியவில்லை என்றால் மட்டுமே கொடுங்கள், நான் வெளியிடுகிறேன் என்றுதானே கூறுகிறேன். 

ஒரு சில நபர்கள் விஜய் கால்ஷீட் தேதிக்காக பேசுகிறேன் என்று கூறுகிறார்கள். விஜய்யிடம் கால்ஷீட் குறித்து இதுவரை நான் பேசியதில்லை. நான் வேறு ஒரு முன்னணி இயக்குனரிடம் பேசி வருகிறேன். அவருடைய பணிகள் முடிந்தவுடன், எனது அன்பு பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படம் செய்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
இப்போது சொல்கிறேன்... நான் யாருடனும் போட்டி போடவில்லை. தயாரிப்பாளர் என்கிற முறையில் உதவி செய்கிறேன். என்னிடம் படத்தினைக் கொடுத்தால், நாளை வெளியிட என்னால் முடியும்" என்று அடித்துச் சொல்கிறார் அன்பழகன்.

'தலைவா' படத்தின் தயாரிப்பாளர் என்ன முடிவு செய்ய இருக்கிறாரோ?
-vikatan 

தலைவாவுக்காக 'டாப் தலை'களைச் சந்திக்க விஜய் தரப்பு தொடர் முயற்சி!

தலைவாவுக்காக 'டாப் தலை'களைச் சந்திக்க விஜய் தரப்பு தொடர் முயற்சி!

தலைவா படத்தை வெளியில் கொண்டு வர பல தலைவர்களையும் சந்தித்து கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள் விஜய் தரப்பினர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தலைவா படம் தமிழகத்தில் மட்டும் வெளிவரவில்லை. முதல்வரைச் சந்தித்து படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்கத் திட்டமிருந்தது விஜய் தரப்பு. ஆனால் இந்தப் படத்துக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என முதல்வர் அலுவலகத்திலிருந்து பதில் வந்துவிட்டதாம்.

அடுத்து ஜெயலலிதாவுக்கு நெருக்கமான ஆலோசகர் என்று கூறப்படும் மூத்த பத்திரிகையாளரைச் சந்தித்து உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரோ, தன்னால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றும், தலைவா என தலைப்பு வைக்கும்போதே இதை யோசித்திருக்க வேண்டும் என்றும் பதில் கூறி அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது. தமிழக அமைச்சரவையில் உள்ள ஒரு மூத்த அமைச்சர் மூலம் முதல்வரிடம் பேச படத்தை வெளியிடும் தரப்பில் முயற்சித்ததாகவும், அதற்கு, இவ்வளவு பெரிய படம் எடுத்துவிட்டு எதற்காக வரிச் சலுகை கேட்கிறீர்கள் என முதல் சந்திப்பிலேயே அவர் முற்றுப் புள்ளி வைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். 
 
தலைவா விஷயம் குறித்து யாரிடமும் பேச விரும்பவில்லை முதல்வர் என்ற நிலையில், இப்போது இன்னொரு முக்கிய தலைவர் மூலம் முதல்வரை அணுக முயற்சித்து வருகிறார்களாம் படத்தின் வெளியீட்டாளர்கள்.

---Movie updates

பிரியாணி பாடல்களை சோனியே லீக் செய்தது அம்பலம்- எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டன்ட்!

பிரியாணி பாடல்களை சோனியே லீக் செய்தது அம்பலம்- எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டன்ட்!

பிரியாணி படத்தின் எட்டுப் பாடல்களையும் பப்ளிசிட்டிக்காக சோனியே வெளியிட்ட ரகசியம் அம்பலத்துக்கு வந்துள்ளது. கார்த்தி - ஹன்சிகா நடித்துள்ள பிரியாணி படத்துக்கு யுவன் சங்கர் இசையமைத்துள்ளார். இது யுவனின் 100 வது படம் என்பதால், படத்தின் பாடல்களை அவரது பிறந்த நாளான ஆக 31-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேற்றே பாடல்கள் அனைத்தும் இணையதளங்களில் வெளியாகிவிட்டன.


இதுகுறித்து விசாரித்ததில், இந்த வேலையைச் செய்தது, பாடல் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள சோனி நிறுவனமே என்பது தெரிய வந்துள்ளது. ரஜினி நடித்த சிவாஜி படத்திலிருந்துதான் இந்தப் போக்கு ஆரம்பமானது. அந்தப் படத்தின் ஒரு கூடை சன் லைட் பாடலை இப்படித்தான் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பினர். அதன் பிறகு பல பெரிய படங்களின் பாடல்கள் அல்லது வீடியோக்களை தயாரிப்பாளர்கள் அல்லது இசை வெளியீட்டு நிறுவனங்கள் அல்லது இயக்குநர்களே வெளியிடுவதும், பின்னர் போலீசில் புகார் செய்து ஸ்டன்ட் அடிப்பதும் வழக்கமாகிவிட்டது. இந்த முறை இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, பிரியாணி படத்தின் அத்தனைப் பாடல்களையும் பாடலின் வெளியீட்டு உரிமை பெற்ற சோனி நிறுவனமே வெளியிட்டுவிட்டது. ஆனால் இது தெரியாமல் அல்லது காட்டிக் கொள்ளாமல் "அப்படியே ஷாக்காகிட்டேன்," என்று கூறியுள்ளார் யுவன்.

 ஏன் இப்படி? எல்லாம் பப்ளிசிட்டிக்காகத்தான். இன்னொரு முக்கிய விஷயம், இந்தப் பாடல்களை இணையத்தில் டவுன்லோடு செய்வதன் மூலம் பாடல் வெளியிடும் நிறுவனத்துக்கு வருமானமும் கிடைக்கிறது என்கிறார்கள். தங்களுக்கு இதில் எந்த நஷ்டமும் இல்லை என்பதால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என யாருமே அலட்டிக் கொள்ளாமல் அமைதி காக்கின்றனர். இல்லாவிட்டால் இந்நேரம் போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலில் பிரஸ் மீட் கூட்டியிருப்பார்களே.. ஆனாலும் யுவனுக்காக அவரது பிறந்த நாளன்று பாடல் வெளியீட்டை நடத்தப் போகிறார்களாம்!

16 Aug 2013

விஜய்க்கு போன் செய்த அஜீத் தலைவா குறித்து விசாரிப்பு

விஜய்க்கு போன் செய்த அஜீத் தலைவா குறித்து விசாரிப்பு...

தலைவா படம் குறித்த பரபரப்பு நாளுக்கு நாள் வேறு வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் படம் வருமா என்பதே சந்தேகமாகியிருக்கிறது இப்போது. விஜய்யின் உண்ணாவிரதம் மறுக்கப்பட்ட நிலையில் அவரது அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? விஜயகாந்த் இவருக்காக களம் இறங்குவாரா போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்த இக்கட்டான நேரத்தில் மிக மிக சைலண்ட்டாக அந்த சம்பவமும் நடந்ததாம். 

நடிகர் அஜீத் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யிடம் போனில் பேசியதாகவும், எதற்கும் டென்ஷன் ஆகாமல் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

பொதுவாகவே முதல்வர் ஜெயலலிதாவின் அனுதாபி என்று கருதப்படுகிறவர் அஜீத். அதற்காக இந்த தலைவா விஷயத்தில் அவர் களமிரங்க மாட்டார். ஏனென்றால் அடுத்தவர்களுக்காக சிபாரிசுக்கு செல்வது அஜீத்திற்கு பிடிக்காத விஷயம் என்பது அவரை அறிந்தவர்களுக்கு புரியும். எனவே இந்த விசாரிப்பும் அனுதாப ஆறுதலும் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டுமே என்றும் கூறுகிறார்கள் திரையுலகத்தில். 

எதிரி யார் என்றே தெரியாமல் ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
அதுதான் புரியாத புதிர். 

6 Aug 2013

'தலைவா'வுக்கு கிடைத்த வெற்றி!

'தலைவா'வுக்கு கிடைத்த வெற்றி!

இந்தியத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் ஆகஸ்ட் 9-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மிகவும் எதிர்பார்ப்புடன் கூடிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தலைவா', தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் 'Atharintiki Daredi', இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' ஆகிய படங்கள் தான் அவை.

மூன்று படங்களுமே அதிக பட்ஜெட்டில் தயாராகி இருப்பதோடு, மூன்றுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருப்பவை.

இந்தப் போட்டியில் இருந்து திடீரென பவன் கல்யாணின் 'Atharintiki Daredi' விலகியிருக்கிறது. தனித்தெலுங்கானா பிரச்னையால் ஆந்திரா முழுவதும் அதிரிபுதிரியாகிக் கிடக்கிறது.

இதனால் படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்திருக்கிறார்கள். ரிலீஸ் எப்போது என்பதை விரைவில் அறிவிப்பார்களாம்.

இந்த அறிவிப்பால், 'தலைவா' படக்குழு ஏக உற்சாகத்தில் இருக்கிறதாம். காரணம், வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளை பவன் கல்யாண் படத்துக்காக ஏற்கெனவே புக் செய்து வைத்திருந்தனர்.

இப்போது அந்தப் படம் ரிலீஸாகாததால், அந்தத் திரையரங்குகள் 'தலைவா'வுக்குக் கிடைத்திருக்கிறதாம்.

அதுபோலவே பெங்களூரில் உள்ள மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்களில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் படத்துக்குத்தான் அதிக ஸ்கிரீன்கள் ஒதுக்கப்பட்டதாம். அந்த ஸ்கிரீன்களையும் இப்போது 'தலைவா' கைப்பற்றி இருக்கிறது.
 

2 Aug 2013

இயக்குநர் சேரன் மகள் காதல் விவகாரம்- போலீஸ் விசாரணை!

இயக்குநர் சேரன் மகள் காதல் விவகாரம்- போலீஸ் விசாரணை!

பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் காதலை புதிய கோணத்தில் சொல்லி டைரக்டராக அறிமுகம் ஆனவர் சேரன். ஆட்டோகிராப் என்ற காதல் காவியத்தை டைரக்ட்டு செய்து அதில் கதாநாயகனாக நடித்தார். அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். பின்னர் காதல் மற்றும் குடும்ப பாங்கான படங்களை இயக்கி வருகிறார். இவர் சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், நிவேதா, தாமினி (20) ஆகிய மகள்களும் உள்ளனர். 2–வது மகளான தாமினி சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.
தாமினி இன்று காலை 11 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். தன்னையும் காதலன் சந்துருவையும் பிரிக்க முயல்வதாக தந்தை சேரன் மீது பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார்.அம்மனுவில், ‘சந்துரு என்பவரை காதலிக்கிறேன். அவருடன்தான் வாழ்வேன். இதற்கு எனது தந்தை சேரன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காதலனுடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
- See more at: http://www.aanthaireporter.com/?p=38489#sthash.VPARzkhO.dpuf
பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் காதலை புதிய கோணத்தில் சொல்லி டைரக்டராக அறிமுகம் ஆனவர் சேரன். ஆட்டோகிராப் என்ற காதல் காவியத்தை டைரக்ட்டு செய்து அதில் கதாநாயகனாக நடித்தார். அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். பின்னர் காதல் மற்றும் குடும்ப பாங்கான படங்களை இயக்கி வருகிறார். இவர் சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், நிவேதா, தாமினி (20) ஆகிய மகள்களும் உள்ளனர். 2–வது மகளான தாமினி சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.

தாமினி இன்று காலை 11 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். தன்னையும் காதலன் சந்துருவையும் பிரிக்க முயல்வதாக தந்தை சேரன் மீது பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார்.அம்மனுவில், ‘சந்துரு என்பவரை காதலிக்கிறேன். அவருடன்தான் வாழ்வேன். இதற்கு எனது தந்தை சேரன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காதலனுடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
 

பின்னர் அவர் நிருபர்களிடம்,”சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் எனக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. சந்துரு சினிமாவில் உதவி இயக்குனராகவும், டான்சராகவும் பணியாற்றுகிறார். சினிமா விழா ஒன்றில் என் தந்தையுடன் பங்கேற்றேன். அப்போது சந்துருவுடன் அறிமுகம் கிடைத்தது. பிறகு காதல் வயப்பட்டோம். எங்கள் காதல் விவகாரம் என் தந்தை சேரனுக்கு தெரியவந்தது. ஆரம்பத்தில் அவர் எதிர்க்கவில்லை. படிப்பு முடியட்டும் அதன் பிறகு உன் விருப்பப்படி சந்துருவையே திருமணம் செய்து கொள் என்றார்.

ஆனால் கடந்த இரு மாதங்களாக எங்கள் காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. என் தந்தையும் அவருக்கு நெருக்கமான சினிமா ஆட்களும் சந்துருவை மறந்து விடு என்று என்னை மிரட்டுகிறார்கள். பல தடவை சந்துருவை கொலை செய்யவும் முயற்சி நடந்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு எனக்கு உடல் நிலை சரி இல்லாமல் போனது. அப்போது என் தந்தை வெள்ளை பேப்பரில் என் கையெழுத்தை வாங்கினார். எங்கள் காதலை பிரித்து விடுவதாகவும் சந்துருவை தீர்த்து கட்டி விடுவதாகவும் தந்தை மிரட்டுகிறார்.

என்னை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து இருந்தனர். இன்று கல்லூரிக்கு செல்வதாக பொய் சொல்லி வீட்டை விட்டு வெளியேறினேன். நேராக காதலன் வீட்டுக்கு போய் தஞ்சம் அடைந்தேன். சந்துருவின் தாய் மற்றும் அக்காள் பத்மா ஆகியோரிடம் காதலை பிரிக்க தந்தை முயற்சிப்பது பற்றி சொன்னேன். அவர்களுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகாரும் அளித்துள்ளேன். காதலனுடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும்.”என்று தாமினி கூறினார்.

மேலும் டைரக்டர் சேரன் மகள் தாமினி காதலிக்கும் சந்துருவின் அக்காள் பத்மா என்பவரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வந்து அங்கிருந்த நிருபர்களிடம்,”என் தம்பி சந்துரு டைரக்டர் சேரன் மகளை காதலிக்கும் விஷயம் எங்கள் குடும்பத்தினருக்கு தெரிந்ததும் வருத்தப்பட்டோம். நல்ல படங்கள் எடுத்த பெரிய டைரக்டர் அவர் மனது கஷ்டப்படும். காதல் வேண்டாம் என்று என் தம்பியை கண்டித்தோம். ஆனால் திடீரென்று சேரனே எங்கள் வீட்டுக்கு வந்தார். மகள் காதலை ஏற்றுக் கொள்வதாக சொன்னார். படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறினார்.
 


நாங்கள் சந் தோஷப்பட்டோம். ஆனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேரன் ஆட்கள் திடீரென எங்கள் வீட்டுக்கு வந்து அவர் மகளை மறந்து விடும்படி சொல்லி மிரட்டினார்கள். பிறகு சேரனும் வந்து மிரட்டல் விடுத்தார். ஒரு வாரத்துக்கு முன்பு கோடம்பாக்கத்தில் சேரனும் அவர் ஆட்களும் என் தம்பியை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.

சேத்துப்பட்டு போலீசில் பொய் புகார் அளித்து என் தம்பியிடம் காதலியை பின் தொடர மாட்டேன் என்று எழுதி வாங்கியுள்ளனர். தம்பி உயிருக்கு ஆபத்து இருப்பதால் வெளியூருக்கு அனுப்பி பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளோம்.”என்று அவர் கூறினார்.
-aanthaireporter
நாங்கள் சந் தோஷப்பட்டோம். ஆனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேரன் ஆட்கள் திடீரென எங்கள் வீட்டுக்கு வந்து அவர் மகளை மறந்து விடும்படி சொல்லி மிரட்டினார்கள். பிறகு சேரனும் வந்து மிரட்டல் விடுத்தார். ஒரு வாரத்துக்கு முன்பு கோடம்பாக்கத்தில் சேரனும் அவர் ஆட்களும் என் தம்பியை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.
சேத்துப்பட்டு போலீசில் பொய் புகார் அளித்து என் தம்பியிடம் காதலியை பின் தொடர மாட்டேன் என்று எழுதி வாங்கியுள்ளனர். தம்பி உயிருக்கு ஆபத்து இருப்பதால் வெளியூருக்கு அனுப்பி பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளோம்.”என்று அவர் கூறினார்.
- See more at: http://www.aanthaireporter.com/?p=38489#sthash.VPARzkhO.dpuf
பின்னர் அவர் நிருபர்களிடம்,”சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் எனக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. சந்துரு சினிமாவில் உதவி இயக்குனராகவும், டான்சராகவும் பணியாற்றுகிறார். சினிமா விழா ஒன்றில் என் தந்தையுடன் பங்கேற்றேன். அப்போது சந்துருவுடன் அறிமுகம் கிடைத்தது. பிறகு காதல் வயப்பட்டோம். எங்கள் காதல் விவகாரம் என் தந்தை சேரனுக்கு தெரியவந்தது. ஆரம்பத்தில் அவர் எதிர்க்கவில்லை. படிப்பு முடியட்டும் அதன் பிறகு உன் விருப்பப்படி சந்துருவையே திருமணம் செய்து கொள் என்றார்.
ஆனால் கடந்த இரு மாதங்களாக எங்கள் காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. என் தந்தையும் அவருக்கு நெருக்கமான சினிமா ஆட்களும் சந்துருவை மறந்து விடு என்று என்னை மிரட்டுகிறார்கள். பல தடவை சந்துருவை கொலை செய்யவும் முயற்சி நடந்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு எனக்கு உடல் நிலை சரி இல்லாமல் போனது. அப்போது என் தந்தை வெள்ளை பேப்பரில் என் கையெழுத்தை வாங்கினார். எங்கள் காதலை பிரித்து விடுவதாகவும் சந்துருவை தீர்த்து கட்டி விடுவதாகவும் தந்தை மிரட்டுகிறார்.
என்னை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து இருந்தனர். இன்று கல்லூரிக்கு செல்வதாக பொய் சொல்லி வீட்டை விட்டு வெளியேறினேன். நேராக காதலன் வீட்டுக்கு போய் தஞ்சம் அடைந்தேன். சந்துருவின் தாய் மற்றும் அக்காள் பத்மா ஆகியோரிடம் காதலை பிரிக்க தந்தை முயற்சிப்பது பற்றி சொன்னேன். அவர்களுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகாரும் அளித்துள்ளேன். காதலனுடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும்.”என்று தாமினி கூறினார்.
மேலும் டைரக்டர் சேரன் மகள் தாமினி காதலிக்கும் சந்துருவின் அக்காள் பத்மா என்பவரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வந்து அங்கிருந்த நிருபர்களிடம்,”என் தம்பி சந்துரு டைரக்டர் சேரன் மகளை காதலிக்கும் விஷயம் எங்கள் குடும்பத்தினருக்கு தெரிந்ததும் வருத்தப்பட்டோம். நல்ல படங்கள் எடுத்த பெரிய டைரக்டர் அவர் மனது கஷ்டப்படும். காதல் வேண்டாம் என்று என் தம்பியை கண்டித்தோம். ஆனால் திடீரென்று சேரனே எங்கள் வீட்டுக்கு வந்தார். மகள் காதலை ஏற்றுக் கொள்வதாக சொன்னார். படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறினார்.
- See more at: http://www.aanthaireporter.com/?p=38489#sthash.VPARzkhO.dpuf
இயக்குநர் சேரன் மகள் காதல் விவகாரம்- போலீஸ் விசாரணை! - See more at: http://www.aanthaireporter.com/?p=38489#sthash.VPARzkhO.dpuf

12 Jul 2013

‎விஜய்யின் ‘தலைவா’ கதை ரகசியம்..!.+ டிரைலர்!!


விஜய்யின் ‘தலைவா’ கதை ரகசியம்..!.+ டிரைலர்!!
விஜய்யின் ‘தலைவா’ கதை ரகசியம்..!.+ டிரைலர்!!
Thalaivaa ...


விஜய் & அமலாபால் ஜோடி நடிப்பில் விஜய் இயக்கி வரும் ‘தலைவா’ படம் கிட்டத்தட்ட முடிவடைந்து ரிலீசுக்கு நெருங்கியிருக்கிறது. பொதுவாகவே விஜய் படங்களில் ‘மெசேஜ்’ இருப்பது வழக்கம்… இந்த ‘தலைவா’ படத்திலும் கண்டிப்பாக ஒரு மெசேஜ் இருக்கிறது.

‘உஷ்’… சத்தம் வேண்டாம்… காதை குடுங்க… காற்று வாக்கில் வந்த ‘தலைவா’ கதை ரகசியத்தை சொல்கிறேன்…

விஜய் அப்பாவாக இருக்கும் சத்யராஜ் மும்பையில் மிகப் பெரிய மனிதர். இவர் இல்லாமல் அங்கு எதுவும் நடக்காது. அப்படி செல்வாக்கானவர் திடீரென இறந்து போகிறார். வெளிநாட்டில் இருக்கும் விஜய்க்கு அப்பா மரணத்திற்கு பிறகு மும்பையிலேயே வந்து செட்டில் ஆகி… அப்பாவின் இடத்தை நிரப்புகிறார்… மக்களும் விஜய்யை தலைவனாக ஏற்றுக் கொள்கிறார்கள்…

சத்யராஜ் எப்படி இறந்து போகிறார்… மக்கள் எப்படி விஜய்யை தலைவனாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் ‘தலைவா’ படத்தின் ஒரு வரி கதையாம்… இடையிடையே அமலாபாலுடன் காதல்… சந்தானத்தின் காமெடி என பட்டையை கிளப்பும் விதத்தில் ‘தலைவா’ உருவாகியிருக்கிறதாம்…

ஜூலை கடைசியில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என நினைத்தவர்களுக்கு படத்தின் போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் முடியாததால் ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு ரிலீஸ் தேதியை தள்ளிகொண்டு போயிருக்கிறார்கள்… ஆகஸ்ட் 9ல் உலகம் முழுக்க ‘தலைவா’ வலம் வருவான் என்கிறார்கள்.



10 Jul 2013

இஸ்லாமியராக மாறிய நடிகர் விஜய்..!

இஸ்லாமியராக மாறிய நடிகர் விஜய்..!

கிறிஸ்தவரான நடிகர் விஜய் இஸ்லாமியராக மாறிவிட்டாரா என தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சி அடைய வேண்டாம்...

நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் 'ஜில்லா' படத்தின் ஒரு காட்சியில் விஜய் தாடி வைத்து குல்லா போட்டு இஸ்லாமியராக மாறி நடித்திருக்கிறார்.

படம் முழுக்க இஸ்லாமியராக நடிக்கிறாரா... இந்த கேள்விக்குள் நீங்கள் போவதற்கு முன்பு ஒரு சின்ன பிளாஷ்பேக்...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து ஹிட் ஆன படம் 'துப்பாக்கி'... இந்த படத்தில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தி விட்டார்கள் என இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியதும்... படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வரிடம் புகார் அளித்ததும்... இஸ்லாமிய பிரதிநிதிகளிடம் இயக்குனர் முருகதாஸ், விஜய் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், தயாரிப்பாளர் தாணுவும் பேச்சு வார்த்தை நடத்தி சில காட்சிகளை நீக்கியதும்...

அந்த சூழலில், 'இஸ்லாமியர்களை எந்த சூழலிலும் விஜய் தவறாக சித்தரிக்க மாட்டார்... அடுத்த படத்தில் இஸ்லாமியர்களின் நண்பனாக கட்டாயம் விஜய் நடிப்பார்' என எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்திருந்தார்...


இப்போது புரிகிறதா... 'ஜில்லா' படத்தில் விஜய் இஸ்லாமியர் வேஷம் போட்டதற்கு காரணம்... 

இஸ்லாமியராக கமல் நடிப்பில் உருவான 'விஸ்வரூபம்' படத்துக்கு எழுந்த பெரும் எதிர்ப்புக்கு பிறகு இஸ்லாமியர்களாக நடிப்பதற்கு மூத்த நடிகர்கள் தயங்கிய நிலையில் விஜய் இஸ்லாமியர் வேஷம் போட்டிருப்பது மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது... 

இஸ்லாமியர்களை கவுரவப்படுத்தும் விதமாக காட்சிகள் இருந்தாலும் இப்போதைக்கு அதைப்பற்றிய தகவல்கள் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறாராம் விஜய்...


சூப்பர்... நலமாக இருக்கிறேன்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஹிருத்திக்

சூப்பர்... நலமாக இருக்கிறேன்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஹிருத்திக் .

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் உள்ள இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், தான் நலமாக இருப்பதாக தனது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் சமூக வலைத்தளம் மூலமாக நேற்று செய்தி அனுப்பியுள்ளார்.
மும்பையில் உள்ள மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னதாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப் பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

நட்சத்திரப் பட்டாளங்கள் அவரை நேரில் சென்று நலம் விசாரித்த வண்ணம் உள்ளன.

ஹிருத்திக்கின் அப்பாவான நடிகர் ராகேஷ் ரோசன் ‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது என்று ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஹிருத்திக்கின் திரையுலக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் அவரை நேரில் சென்று மருத்துவமனையில் பார்த்த வண்ணம் உள்ளனர்.

ஆனால், சாதாரண எளிய ரசிகர்களுக்கு ஹிருத்திக்கின் தற்போதைய நிலைமையைப் பற்றி நேரடியாக தெரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் நிலவியது. இதனை புரிந்து கொண்ட ஹிருத்திக் ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்துள்ளார்.

சலைன் ஏற்றப்பட்ட கைகளோடு, ‘சூப்பர்' என்று விரல்களைக் காட்டிய தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஹிருத்திக்.

கூடவே, ‘தான் நலமாக இருப்பதாகவும், தன் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் நன்றி' எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், வெள்ளிக்கிழமை ரிலீசாகவுள்ள தனது நண்பரின் படத்திற்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் ஹிருத்திக் .

9 Jul 2013

"எதிர்பார்த்துக் காத்திருந்த வெற்றி 'சிங்கம்-2' " - சூர்யா

"எதிர்பார்த்துக் காத்திருந்த வெற்றி 'சிங்கம்-2' " - சூர்யா

"எனக்கு தேவைப்பட்ட வெற்றி, நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வெற்றி 'சிங்கம்-2.' சரியான சமயத்தில் இந்த வெற்றி எனக்குக் கிடைத்துள்ளது " என 'சிங்கம்-2' சக்சஸ் பிரஸ்மீட்டில் சூர்யா தெரிவித்தார்.

"இந்த வெற்றிக்கு காரணம் இயக்குநர் ஹரி தான். கால்ஷீட்டுக்கு தேதிகள் ஒதுக்கும்போதே என்னுடைய பிறந்தநாள், திருமண நாள், குழந்தைகளோட பிறந்தநாளைக் குறிச்சி வைச்சிப்பாரு.
அந்த சமயத்துல எங்க ஷூட்டிங் நடந்தாலும் லீவ் கொடுத்து வீட்டுக்குப் போங்கனு சொல்வாரு. அவரோட சேர்ந்து இது எனக்கு நாலாவது படம். இன்னும் அவரோட சேர்ந்து படங்கள் பண்ண ஆசைப்படுறேன்.

இந்தப் படம் பார்த்ததுக்கு அப்புறம் அப்பாகிட்ட இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அவ்வளவு பெரிய வார்த்தைகளை இதுவரைக்கும் அப்பா என்கிட்ட சொன்னதில்ல. அது ரொம்ப பர்சனலா இருக்குறதால உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியல.

கல்யாணத்துக்கு அப்புறம் ஜோதிகா பார்த்த என்னோட முதல் படம் இதுதான். அவங்க கை தட்டி பாராட்டுனாங்க" என்றார் சூர்யா.

விஜயகுமார் பேசும்போது. "அடுத்த சூப்பர் ஸ்டார் தம்பி சூர்யா தான்" என்றார்.

அடுத்து பேசிய வில்லனாக நடித்த ரகுமான், "சூர்யா ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் தான். அவரோட உயரம் பத்தி இங்க பேசுனாங்க. 'சிங்கத்துக்கு எதுக்கு ஒட்டகத்தோட ஹைட்டு' " என பஞ்ச் வைத்து முடித்தார்.
 -vikatan

---Movie updates          

8 Jul 2013

இளையராஜாவாக நடிக்கும் சத்தியராஜ்

இளையராஜாவாக நடிக்கும் சத்தியராஜ் .

இரண்டு இசையமைப்பாளர்களை சுற்றி நடக்கும் கதையாக இசை என்ற படத்தை இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா.
இப்படத்தை தானே இயக்கி, இசையமைத்து, நடிக்கவும் செய்கிறார்.
இரண்டு இசையமைப்பாளர்களிடையே ஏற்படும் ஈகோ மோதலை பற்றி எடுத்துக் கூறும் படமாகவும் இப்படம் தயாராகிறது.
இது இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய கதை என சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

படத்தில் இரண்டு இசையமைப்பாளர்களின் கதாபாத்திரம் பெயரும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என உச்சரிப்பது போலவே வருவதாகவும் கூறப்படுகிறது.

ரகுமான் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறாராம். இளையராஜா கேரக்டருக்கு முதலில் பிரகாஷ் ராஜ் ஒப்பந்தமாகி இருந்தாராம்.
கதை கேட்டு நடிக்க சம்மதித்த பிரகாஷ் ராஜ், தான் இளையராஜா கேரக்டரில் நடிப்பதாக வெளியே தகவல் கசிந்ததும் திடீரென படத்திலிருந்து விலகிவிட்டார்.

சர்ச்சைக்கு பயந்தே அவர் விலகியதாக தற்போது கூறப்படுகிறது. இதையடுத்து பலரிடம் கதையை கூறியுள்ளார் சூர்யா.
ஆனால் யாரும் நடிக்க முன்வராத இந்நிலையில் இப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

---Movie updates     

நடிகர் ஆகின்றார் நீயா நானா புகழ் கோபி!

 நடிகர் ஆகின்றார் நீயா நானா புகழ் கோபி!

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். அவர் இப்போது சினிமா நடிகர் ஆகிவிட்டார். சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி, அமலா பால் நடிக்கும் ‘‘நிமிர்ந்துநில்’’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜெயம்ரவி நாட்டையே உலுக்கும் ஒரு ரகசியத்தை மீடியாவுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது அவரது நினைவுக்கு வருவது நீயா நானா கோபி. உடனே அவரை மட்டும் அழைத்து நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரமாண்ட டிரக்கரின் உள்ளே வைத்து அவர் அது பற்றி பேட்டி கொடுக்கிறாராம். இந்த பேட்டியை முறியடிக்க சி.பி.ஐ.அதிகாரி சரத்குமார் துரத்துவாராம். இந்த காட்சியை பெங்களுரு மைசூரு ரோட்டில் படமாக்கியிருக்கிறார்கள். அதில் கலந்து கொண்டு கோபிநாத் நடித்திருக்கிறார். படத்தில் சுமார் 20 நிமிடங்கள் வருகிறார் கோபிநாத்.
இதுபற்றி அவர் கூறும்போது “எனக்கு நடிக்கத் தெரியாது. இயக்குனர் சமுத்திரகனி நீங்கள் நீங்களாக வந்தால் போதும் என்றுதான் அழைத்தார். ஆனால் அதன் பிறகு ஆக்ஷன் காட்சியில் எல்லாம் நடிக்க வைத்துவிட்டார். ஒரு சமுதாய பிரச்னையை பேசுகிற படம். வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்றார்.
- See more at: http://www.tamilyouthcafe.com/cinema/14213#sthash.a6drjUuL.dpuf
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். அவர் இப்போது சினிமா நடிகர் ஆகிவிட்டார். சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி, அமலா பால் நடிக்கும் ‘‘நிமிர்ந்துநில்’’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜெயம்ரவி நாட்டையே உலுக்கும் ஒரு ரகசியத்தை மீடியாவுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது அவரது நினைவுக்கு வருவது நீயா நானா கோபி. உடனே அவரை மட்டும் அழைத்து நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரமாண்ட டிரக்கரின் உள்ளே வைத்து அவர் அது பற்றி பேட்டி கொடுக்கிறாராம். இந்த பேட்டியை முறியடிக்க சி.பி.ஐ.அதிகாரி சரத்குமார் துரத்துவாராம். இந்த காட்சியை பெங்களுரு மைசூரு ரோட்டில் படமாக்கியிருக்கிறார்கள். அதில் கலந்து கொண்டு கோபிநாத் நடித்திருக்கிறார். படத்தில் சுமார் 20 நிமிடங்கள் வருகிறார் கோபிநாத்.

இதுபற்றி அவர் கூறும்போது “எனக்கு நடிக்கத் தெரியாது. இயக்குனர் சமுத்திரகனி நீங்கள் நீங்களாக வந்தால் போதும் என்றுதான் அழைத்தார். ஆனால் அதன் பிறகு ஆக்ஷன் காட்சியில் எல்லாம் நடிக்க வைத்துவிட்டார். ஒரு சமுதாய பிரச்னையை பேசுகிற படம். வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்றார்.

 ---Movie updates    


விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். அவர் இப்போது சினிமா நடிகர் ஆகிவிட்டார். சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி, அமலா பால் நடிக்கும் ‘‘நிமிர்ந்துநில்’’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜெயம்ரவி நாட்டையே உலுக்கும் ஒரு ரகசியத்தை மீடியாவுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது அவரது நினைவுக்கு வருவது நீயா நானா கோபி. உடனே அவரை மட்டும் அழைத்து நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரமாண்ட டிரக்கரின் உள்ளே வைத்து அவர் அது பற்றி பேட்டி கொடுக்கிறாராம். இந்த பேட்டியை முறியடிக்க சி.பி.ஐ.அதிகாரி சரத்குமார் துரத்துவாராம். இந்த காட்சியை பெங்களுரு மைசூரு ரோட்டில் படமாக்கியிருக்கிறார்கள். அதில் கலந்து கொண்டு கோபிநாத் நடித்திருக்கிறார். படத்தில் சுமார் 20 நிமிடங்கள் வருகிறார் கோபிநாத்.
இதுபற்றி அவர் கூறும்போது “எனக்கு நடிக்கத் தெரியாது. இயக்குனர் சமுத்திரகனி நீங்கள் நீங்களாக வந்தால் போதும் என்றுதான் அழைத்தார். ஆனால் அதன் பிறகு ஆக்ஷன் காட்சியில் எல்லாம் நடிக்க வைத்துவிட்டார். ஒரு சமுதாய பிரச்னையை பேசுகிற படம். வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்றார்.
- See more at: http://www.tamilyouthcafe.com/cinema/14213#sthash.a6drjUuL.dpuf


நடிகர் ஆகின்றார் நீயா நானா புகழ் கோபி!


நடிகர் ஆகின்றார் நீயா நானா புகழ் கோபி!

7 Jul 2013

நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் அறுவைசிகிச்சை

நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் அறுவைசிகிச்சை .

பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷனுக்கு சில மாதங்களுக்கு முன்னர் ‘பேங்க் பேங்க்’ படப்பிடிப்பின் போது தலையில் காயம் ஏற்பட்டது.

இந்த விபத்திற்குப் பின்பு அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது.
இந்த காயத்தின் விளைவாக மண்டை ஓட்டிற்கும் மூளைக்கும் இடையே நரம்பில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

ரத்தக் கசிவை நிறுத்த உடனடியாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, மும்பை கர் பகுதியில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் இன்று ஹிருத்திக் ரோஷனுக்கு தலையில் சத்திரசிகிச்சை நடத்தப்பட்டது.

நரம்பியல் நிபுணர் மருத்துவர் பி.கே. மிஷ்ரா வெற்றிகரமாக நடத்திய இந்த சத்திரசிகிச்சை சுமார் 45 நிமிடம் நீடித்ததாகவும் ஹிருத்திக் ரோஷன் நலமாக இருப்பதாகவும் அவரது தந்தை ராகேஷ் ரோஷன் கூறியுள்ளார்.

---Movie updates    

பெற்றோர் எதிர்ப்பை மீறி நடிகை காவேரி திடீர் திருமணம்

பெற்றோர் எதிர்ப்பை மீறி நடிகை காவேரி திடீர் திருமணம் .

பிரசாந்த் ஜோடியாக வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காவேரி.
தொடர்ந்து சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், தற்போது சின்னத்திரையில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை காவேரிக்கும், கேரளாவை சேர்ந்த ராகேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

ராகேஷின் சொந்த ஊர் கேரளா மாநிலம் உடுப்பி. இவர் சென்னை வேளச்சேரியில் பார்மெசி ஏஜென்டாக உள்ளார். தொழில் ரீதியாக காவேரியின் அண்ணன் மார்க் மூலம் ராகேஷ்க்கு, காவேரியிடம் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து காவேரி-ராகேஷ் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி இன்று(07.07.2013) விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தில் உள்ள பிரசித்திபெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
காவேரிக்கு தெரிந்த விழுப்புரத்தை சேர்ந்த வக்கீல் செந்தில் குமார் என்பவரது உதவியுடனும், ராகேஷின் நண்பர் ஒருவரது உதவியுடனும் இந்த திருமணம் நடந்துள்ளது.

தான் ஏன் வீட்டை விட்டு வந்து ரகசியமாக, கோயிலில் திருமணம் செய்து கொண்டேன் என்ற விடயத்தை நடிகை காவேரி கூற மறுத்துவிட்டார். 

---Movie updates   

2013 இல் கலெக்ஷனை அள்ளிய படங்கள்!

2013 இல் கலெக்ஷனை அள்ளிய படங்கள்!

2013ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 78 படங்கள் ரிலீசாகியுள்ளது. சுமார் 10 படங்கள் தான் ஹிட்டடித்துள்ளது. மீதி படங்களால் தயாரிப்பாளருக்கு லாஸ். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி பெப்பே காட்டியுள்ளது. சத்தமில்லாமல் கலெக்ஷனை அள்ளிய படங்கள் எது, ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்… - See more at: http://www.tamilyouthcafe.com/cinema/14130#sthash.nJrb5wgB.dpuf
2013ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 78 படங்கள் ரிலீசாகியுள்ளது. சுமார் 10 படங்கள் தான் ஹிட்டடித்துள்ளது. மீதி படங்களால் தயாரிப்பாளருக்கு லாஸ். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி பெப்பே காட்டியுள்ளது. சத்தமில்லாமல் கலெக்ஷனை அள்ளிய படங்கள் எது, ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்… - See more at: http://www.tamilyouthcafe.com/cinema/14130#sthash.nJrb5wgB.dpuf
2013ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 78 படங்கள் ரிலீசாகியுள்ளது. சுமார் 10 படங்கள் தான் ஹிட்டடித்துள்ளது. மீதி படங்களால் தயாரிப்பாளருக்கு லாஸ். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி பெப்பே காட்டியுள்ளது. சத்தமில்லாமல் கலெக்ஷனை அள்ளிய படங்கள் எது, ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்....


கலெக்ஷனை அள்ளிய படங்கள்…

கண்ணா லட்டு தின்ன ஆசையா : கலெக்ஷனை பொறுத்தவரை காசு… பணம்… துட்டு… மணி.. மணி… என்று கொண்டாடியது கண்ணா லட்டு திண்ண ஆசையா. குறைந்த முதலீட்டில் நிறைய லாபம். தயாரிப்பாளரான முதல் படத்திலேயே கோடிகளை அள்ளினார் சந்தானம்.

விஸ்வரூபம் : பெரிய முதலீட்டில் பெரிய லாபம் கண்டது விஸ்வரூபம். தடை, போராட்டம் அது இது என்று படத்துக்கு ஏகத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்க கமல் ஆழ்வார் பேட்டை வீட்டை காப்பாற்றிக் கொண்டார்.

சூது கவ்வும் : அதிரடியாய் வந்து அள்ளியது. தில்லுமுல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு இரண்டுமே சிரிக்க வைத்தே சில்லறையை மூட்டை கட்டியது. கேடிபில்லா கில்லாடி ரங்கா, உதயம் என்.எச் 4, எதிர்நீச்சல், நேரம் படங்கள் லாபத்தை சம்பாதித்துக் கொண்டன.

பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள்…

அலெக்ஸ் பாண்டியன் : கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்தப் படம்தான் அவருக்கு இறங்கு முகத்தை உண்டாக்கியது.

ஆதிபகவன் : நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர், ஆதிபகவன் படத்தை இயக்கினார். சுமார் இரண்டு வருடம் படிப்பிடிப்பு நடந்தது. படத்தின் கதையை சீக்ரெட்டாக வைத்திருந்தார். ஜெயம்ரவி திருநங்கையாக நடிக்கிறார் என்கிற தகவல் கசிய எதிர்பார்ப்பு எகிறியது. படம் எதிர்பாராத வகையில் படுதோல்வி அடைந்தது. தயாரிப்பாளர் அன்புக்கு பல கோடி லாஸ்.

டேவிட் : இந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது டேவிட். இந்தியில் சைத்தான் ஹிட் கொடுத்த பிஜு நம்பியாரின் படம். ஏற்கெனவே முகமூடியில் மூடி கழன்றிருந்த ஜீவாவும், ராஜாபாட்டையில் கிரீடத்தை இழந்திருந்த விக்ரமும் இந்தப் படத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். டேவிட், இரண்டு பேர் நம்பிக்கையையும் பொய்யாக்கியது.

மூன்று பேர் மூன்று காதல் : இயக்குனர் வசந்த் தனது மூன்று பேர் மூன்று காதல் படத்துக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு விளம்பரம் கொடுத்தார். அர்ஜூன், விமல் உள்ளிட்ட மூன்று ஹீரோக்கள். ஜோதிகா சாயலில் ஒரு ஹீரோயின். சிம்ரன் சாயலில் ஒரு ஹீரோயின் என்ற பில்டப் வேறு, தாமிரபரணி பானு ரீ எண்ட்ரி என எகிறிக்கிடந்தது எதிர்பார்ப்பு. அத்தனையும் கவிழ்த்து போட்டது மூன்று மூன்று.

சேட்டை : இந்தியில் மெகா ஹிட் அடித்த டெல்லி பெல்லியை அதே யுடிவி நிறுவனம் தமிழில் ரீமேக் மன்னன் கண்ணனை வைத்து ரீமேக்கியது. ஆர்யா, ஹன்சிகா, சந்தானம் என மெகா கூட்டணி இருந்தும் சேட்டையின் டாய்லெட் சேட்டையை மக்கள் ரசிக்கவில்லை. சந்தானத்திற்கு லேசான சறுக்கலைக் கொடுத்தது.

சமர் : விஷாலின் சமர் சறுக்கிக் கொண்டது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இரண்டு விஷயங்கள் நடந்தது. யாருமே எதிர்பாராத வகையில் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களை கவிழ்த்துப் போட்டது 2013.

கடல் : ராவணன் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் ஏகத்துக்கு எல்லோரது பிபிபையும் எகிற வைத்தது. காரணம் அதில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமான கார்த்திக் மகன் கவுதமும், ராதா மகள் துளசியும் அறிமுகமானார்கள். உலக சினிமா வரலாற்றில் இது அரிதான ஒரு நிகழ்வு. அதேபோன்ற கடற்புறத்து கதை. ஏ,ஆர்.ரகுமான் இசை, அர்ஜுன் முதன்முறையாக வில்லன், அரவிந்த்சாமி ரீ எண்ட்ரி என ஏகப்பட்ட பில்டப்புகள் இருந்தும் படம் ஓடாதது மணிரத்னத்திற்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கே அதிர்ச்சிதான். கடல் படத்தால் கோடிக்கணக்கில் பணம் இழந்த விநியோகஸ்தர்கண் மணிரத்னம் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தியது மோசமான வரலாற்று கரும்புள்ளி.

அன்னக்கொடி : மண்ணின் மைந்தர் பாரதிராஜாவின் அன்னக்கொடி அரைக் கம்பத்தில் பறந்தது. என் கனவு படம், லட்சிய படம் என்றெல்லாம் ஏகத்துக்கு சொன்னார். ரிலீசுக்குப் பிறகு படத்தை மீடியாக்கள் கிழித்து தொங்கவிட பாரதிராஜா அப்செட்.

பெரிய ஜாம்பவான்களையும், ஹீரோக்களையும் படுத்தி எடுத்துவிட்டது 2013ன் முன்பகுதி.

பாராட்டு பெற்ற ஹரிதாஸ், சென்னையில் ஒரு நாள்…

தசைக்குறைபாடு உள்ள சிறுவன் மராத்தான் சேம்பியனாகும் கதைகொண்ட ஹரிதாஸ், உடல் உறுப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்திய சென்னையில் ஒரு நாள் இரண்டுமே மக்களின் பராட்டைப் பெற்றது. செ.ஒ.நா லாபம் சம்பாதித்தது. ஹரிதாஸ் புகழை மட்டும் சம்பாதித்தது.

மன்சூரலிகான் தனது லொள்ளு தாதா பராக் பராக் படத்துக்கும், ராஜகுமாரனின், திருமதி.தமிழ் படத்துக்கும் பண்ணிய பப்ளிசிட்டி கூத்துக்கள் பவர் ஸ்டார் இல்லாத குறையை போக்கியது.

கூட்டி கழித்துப் பார்த்தால் 2013ம் ஆண்டின் முதல்பாதி ஹீரோக்களையும் ஜீனியஸ்களையும் சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு புதியவர்களுக்கு ரெட் கார்பெட் விரித்தது.

---Movie updates  
கலெக்ஷனை அள்ளிய படங்கள்…
கண்ணா லட்டு தின்ன ஆசையா : கலெக்ஷனை பொறுத்தவரை காசு… பணம்… துட்டு… மணி.. மணி… என்று கொண்டாடியது கண்ணா லட்டு திண்ண ஆசையா. குறைந்த முதலீட்டில் நிறைய லாபம். தயாரிப்பாளரான முதல் படத்திலேயே கோடிகளை அள்ளினார் சந்தானம்.
விஸ்வரூபம் : பெரிய முதலீட்டில் பெரிய லாபம் கண்டது விஸ்வரூபம். தடை, போராட்டம் அது இது என்று படத்துக்கு ஏகத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்க கமல் ஆழ்வார் பேட்டை வீட்டை காப்பாற்றிக் கொண்டார்.
சூது கவ்வும் அதிரடியாய் வந்து அள்ளியது. தில்லுமுல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு இரண்டுமே சிரிக்க வைத்தே சில்லறையை மூட்டை கட்டியது. கேடிபில்லா கில்லாடி ரங்கா, உதயம் என்.எச் 4, எதிர்நீச்சல், நேரம் படங்கள் லாபத்தை சம்பாதித்துக் கொண்டன.
பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள்…
அலெக்ஸ் பாண்டியன் : கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்தப் படம்தான் அவருக்கு இறங்கு முகத்தை உண்டாக்கியது.
ஆதிபகவன் : நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர், ஆதிபகவன் படத்தை இயக்கினார். சுமார் இரண்டு வருடம் படிப்பிடிப்பு நடந்தது. படத்தின் கதையை சீக்ரெட்டாக வைத்திருந்தார். ஜெயம்ரவி திருநங்கையாக நடிக்கிறார் என்கிற தகவல் கசிய எதிர்பார்ப்பு எகிறியது. படம் எதிர்பாராத வகையில் படுதோல்வி அடைந்தது. தயாரிப்பாளர் அன்புக்கு பல கோடி லாஸ்.
டேவிட் : இந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது டேவிட். இந்தியில் சைத்தான் ஹிட் கொடுத்த பிஜு நம்பியாரின் படம். ஏற்கெனவே முகமூடியில் மூடி கழன்றிருந்த ஜீவாவும், ராஜாபாட்டையில் கிரீடத்தை இழந்திருந்த விக்ரமும் இந்தப் படத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். டேவிட், இரண்டு பேர் நம்பிக்கையையும் பொய்யாக்கியது.
மூன்று பேர் மூன்று காதல் : இயக்குனர் வசந்த் தனது மூன்று பேர் மூன்று காதல் படத்துக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு விளம்பரம் கொடுத்தார். அர்ஜூன், விமல் உள்ளிட்ட மூன்று ஹீரோக்கள். ஜோதிகா சாயலில் ஒரு ஹீரோயின். சிம்ரன் சாயலில் ஒரு ஹீரோயின் என்ற பில்டப் வேறு, தாமிரபரணி பானு ரீ எண்ட்ரி என எகிறிக்கிடந்தது எதிர்பார்ப்பு. அத்தனையும் கவிழ்த்து போட்டது மூன்று மூன்று.
சேட்டை : இந்தியில் மெகா ஹிட் அடித்த டெல்லி பெல்லியை அதே யுடிவி நிறுவனம் தமிழில் ரீமேக் மன்னன் கண்ணனை வைத்து ரீமேக்கியது. ஆர்யா, ஹன்சிகா, சந்தானம் என மெகா கூட்டணி இருந்தும் சேட்டையின் டாய்லெட் சேட்டையை மக்கள் ரசிக்கவில்லை. சந்தானத்திற்கு லேசான சறுக்கலைக் கொடுத்தது.
சமர் : விஷாலின் சமர் சறுக்கிக் கொண்டது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இரண்டு விஷயங்கள் நடந்தது. யாருமே எதிர்பாராத வகையில் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களை கவிழ்த்துப் போட்டது 2013.
கடல் : ராவணன் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் ஏகத்துக்கு எல்லோரது பிபிபையும் எகிற வைத்தது. காரணம் அதில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமான கார்த்திக் மகன் கவுதமும், ராதா மகள் துளசியும் அறிமுகமானார்கள். உலக சினிமா வரலாற்றில் இது அரிதான ஒரு நிகழ்வு. அதேபோன்ற கடற்புறத்து கதை. ஏ,ஆர்.ரகுமான் இசை, அர்ஜுன் முதன்முறையாக வில்லன், அரவிந்த்சாமி ரீ எண்ட்ரி என ஏகப்பட்ட பில்டப்புகள் இருந்தும் படம் ஓடாதது மணிரத்னத்திற்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கே அதிர்ச்சிதான். கடல் படத்தால் கோடிக்கணக்கில் பணம் இழந்த விநியோகஸ்தர்கண் மணிரத்னம் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தியது மோசமான வரலாற்று கரும்புள்ளி.
அன்னக்கொடி : மண்ணின் மைந்தர் பாரதிராஜாவின் அன்னக்கொடி அரைக் கம்பத்தில் பறந்தது. என் கனவு படம், லட்சிய படம் என்றெல்லாம் ஏகத்துக்கு சொன்னார். ரிலீசுக்குப் பிறகு படத்தை மீடியாக்கள் கிழித்து தொங்கவிட பாரதிராஜா அப்செட்.
பெரிய ஜாம்பவான்களையும், ஹீரோக்களையும் படுத்தி எடுத்துவிட்டது 2013ன் முன்பகுதி.
பாராட்டு பெற்ற ஹரிதாஸ், சென்னையில் ஒரு நாள்…
தசைக்குறைபாடு உள்ள சிறுவன் மராத்தான் சேம்பியனாகும் கதைகொண்ட ஹரிதாஸ், உடல் உறுப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்திய சென்னையில் ஒரு நாள் இரண்டுமே மக்களின் பராட்டைப் பெற்றது. செ.ஒ.நா லாபம் சம்பாதித்தது. ஹரிதாஸ் புகழை மட்டும் சம்பாதித்தது.
மன்சூரலிகான் தனது லொள்ளு தாதா பராக் பராக் படத்துக்கும், ராஜகுமாரனின், திருமதி.தமிழ் படத்துக்கும் பண்ணிய பப்ளிசிட்டி கூத்துக்கள் பவர் ஸ்டார் இல்லாத குறையை போக்கியது.
கூட்டி கழித்துப் பார்த்தால் 2013ம் ஆண்டின் முதல்பாதி ஹீரோக்களையும் ஜீனியஸ்களையும் சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு புதியவர்களுக்கு ரெட் கார்பெட் விரித்தது.
- See more at: http://www.tamilyouthcafe.com/cinema/14130#sthash.nJrb5wgB.dpuf

5 Jul 2013

கோலிவுட்டுக்கு தாவத் துடிக்கும் அசினுக்கு உதவுவாரா கௌதம் மேனன்?

கோலிவுட்டுக்கு தாவத் துடிக்கும் அசினுக்கு உதவுவாரா கௌதம் மேனன்? 

சென்னை: பாலிவுட்டில் இருந்து மீண்டும் கோலிவுட் பக்கம் போய்விடலாமா என்ற யோசனையில் இருக்கும் அசினுக்கு கௌதம் மேனன் உதவி செய்வாரா?
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தபோது அசின் பாலிவுட்டில் சாதிக்க வேண்டும் என்று மும்பையில் செட்டிலானார். பாலிவுட்டில் நான் தான் நம்பர் 1 ஹீரோயின் என்று அவர் கூறியதை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. அங்கு அவருக்கு அப்படி ஒன்றும் பட வாய்ப்புகளும் வருவதில்லை.

இந்நிலையில் அவருக்கு வெளிநாட்டில் காதலர் உள்ளதாகவும் அதனால் தான் அவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருவதாகவும் வட இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. பேசாமல் பாலிவுட்டில் இருந்து கோலிவுட் பக்கம் போய்விடலாமா என்று அசின் நீண்ட நாட்களாக யோசனையில் உள்ளார்.

இந்நிலையில் கௌதம் மேனன் தனது துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் அல்லது சோனம் கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். அப்படி அவர் அசினை தேர்வு செய்தால் அவருக்கு இது பெரிய உதவியாக இருக்கும். அதே சமயம் அண்மையில் தமிழகத்தில் வெளியான அம்பிகாபதி படத்தில் நடித்துள்ள சோனம் கபூரை நம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. இதையும் மனதில் வைத்து தான் கௌதம் ஹீரோயினை தேர்வு செய்யக்கூடும்.

---Movie updates  

சிம்பு - சந்தானம்காமெடி கலாட்டா

சிம்பு - சந்தானம்காமெடி கலாட்டா.

"வாலு படத்திற்கான டைட்டில் பிரச்னை எழுந்த போது, சிம்பு,"ஷாக் ஆகிவிட்டார். இதனால், "வேட்டை மன்னன் பட வேலைகளில் இறங்கினார், அவர். அதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், "வாலு டைட்டில் சிம்பு படத்துக்கே கிடைத்தது. அதனால், இப்போது மீண்டும், "வாலு படப்பிடிப்பில் இறங்கியுள்ளார் சிம்பு. சந்தானம், ஹன்சிகா இருவரும் வெவ்வேறு படங்களில் படுபிசியாக நடித்துக் கொண்டிருந்த போதும், சிம்பு அழைத்ததைத் தொடர்ந்து, மீண்டும் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகின்றனர். இப்படமும் காமெடி கதையில் உருவாகி வருவதால், ஒவ்வொரு காட்சியிலும், சிம்பு - சந்தானம் கூட்டணி காமெடியில் பட்டையை கிளப்புகிறதாம்.  


---Movie updates  

4 Jul 2013

சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார் சூர்யா!

சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார் சூர்யா!

தமிழ்த் திரையுலகில் தற்போது இருக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம். சூர்யா, கார்த்தியின் உறவுக்காரரான ஞானவேல்ராஜா இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சூர்யாவின் கால்ஷீட் தேதிகள் கேட்டு வரும் முன்னணி இயக்குனர்களை, அப்படியே கார்த்தியின் கால்ஷீட் தேதிகள் கொடுத்து படத்தினைத் தயாரித்து விடுகிறதாம் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.

வெங்கட்பிரபு முதலில் சூர்யாவின் தேதிகள் கேட்டு தான் சென்றார். ஆனால், தற்போது கார்த்தியை வைத்து 'பிரியாணி' சமைத்து வருகிறார். அதுபோலவே ராஜேஷும் சூர்யா தேதிகள் கேட்டார். தற்போது கார்த்தியை வைத்து 'ஆல் இன் ஆல் அழகுராஜா' இயக்கி வருகிறார்.

'சிங்கம் 2' முடிந்த கையோடு ஹரியை வளைத்துப் போட்டு விட்டார்கள். ஹரி அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி தான் நாயகன். இப்படி சூர்யாவை அணுகும் அனைத்து இயக்குனர்களையும் கார்த்தியை முன்னிறுத்தி விடுகிறார்களாம்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஒருபுறம் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யாவும் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்க இருக்கிறார்.

தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு '2D Entertainment' என்று தலைப்பிட்டு இருக்கிறார். D - Diya, D - Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து '2D Entertainment' என்று பெயரிட்டு இருக்கிறார்.
இந்த நிறுவனத்தின் மூலம் சிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் சூர்யா.

---Movie updates