6 Aug 2013

'தலைவா'வுக்கு கிடைத்த வெற்றி!

'தலைவா'வுக்கு கிடைத்த வெற்றி!

இந்தியத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் ஆகஸ்ட் 9-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மிகவும் எதிர்பார்ப்புடன் கூடிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தலைவா', தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் 'Atharintiki Daredi', இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' ஆகிய படங்கள் தான் அவை.

மூன்று படங்களுமே அதிக பட்ஜெட்டில் தயாராகி இருப்பதோடு, மூன்றுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருப்பவை.

இந்தப் போட்டியில் இருந்து திடீரென பவன் கல்யாணின் 'Atharintiki Daredi' விலகியிருக்கிறது. தனித்தெலுங்கானா பிரச்னையால் ஆந்திரா முழுவதும் அதிரிபுதிரியாகிக் கிடக்கிறது.

இதனால் படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்திருக்கிறார்கள். ரிலீஸ் எப்போது என்பதை விரைவில் அறிவிப்பார்களாம்.

இந்த அறிவிப்பால், 'தலைவா' படக்குழு ஏக உற்சாகத்தில் இருக்கிறதாம். காரணம், வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளை பவன் கல்யாண் படத்துக்காக ஏற்கெனவே புக் செய்து வைத்திருந்தனர்.

இப்போது அந்தப் படம் ரிலீஸாகாததால், அந்தத் திரையரங்குகள் 'தலைவா'வுக்குக் கிடைத்திருக்கிறதாம்.

அதுபோலவே பெங்களூரில் உள்ள மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்களில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் படத்துக்குத்தான் அதிக ஸ்கிரீன்கள் ஒதுக்கப்பட்டதாம். அந்த ஸ்கிரீன்களையும் இப்போது 'தலைவா' கைப்பற்றி இருக்கிறது.
 

No comments: