12 Jul 2013

‎விஜய்யின் ‘தலைவா’ கதை ரகசியம்..!.+ டிரைலர்!!


விஜய்யின் ‘தலைவா’ கதை ரகசியம்..!.+ டிரைலர்!!
விஜய்யின் ‘தலைவா’ கதை ரகசியம்..!.+ டிரைலர்!!
Thalaivaa ...


விஜய் & அமலாபால் ஜோடி நடிப்பில் விஜய் இயக்கி வரும் ‘தலைவா’ படம் கிட்டத்தட்ட முடிவடைந்து ரிலீசுக்கு நெருங்கியிருக்கிறது. பொதுவாகவே விஜய் படங்களில் ‘மெசேஜ்’ இருப்பது வழக்கம்… இந்த ‘தலைவா’ படத்திலும் கண்டிப்பாக ஒரு மெசேஜ் இருக்கிறது.

‘உஷ்’… சத்தம் வேண்டாம்… காதை குடுங்க… காற்று வாக்கில் வந்த ‘தலைவா’ கதை ரகசியத்தை சொல்கிறேன்…

விஜய் அப்பாவாக இருக்கும் சத்யராஜ் மும்பையில் மிகப் பெரிய மனிதர். இவர் இல்லாமல் அங்கு எதுவும் நடக்காது. அப்படி செல்வாக்கானவர் திடீரென இறந்து போகிறார். வெளிநாட்டில் இருக்கும் விஜய்க்கு அப்பா மரணத்திற்கு பிறகு மும்பையிலேயே வந்து செட்டில் ஆகி… அப்பாவின் இடத்தை நிரப்புகிறார்… மக்களும் விஜய்யை தலைவனாக ஏற்றுக் கொள்கிறார்கள்…

சத்யராஜ் எப்படி இறந்து போகிறார்… மக்கள் எப்படி விஜய்யை தலைவனாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் ‘தலைவா’ படத்தின் ஒரு வரி கதையாம்… இடையிடையே அமலாபாலுடன் காதல்… சந்தானத்தின் காமெடி என பட்டையை கிளப்பும் விதத்தில் ‘தலைவா’ உருவாகியிருக்கிறதாம்…

ஜூலை கடைசியில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என நினைத்தவர்களுக்கு படத்தின் போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் முடியாததால் ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு ரிலீஸ் தேதியை தள்ளிகொண்டு போயிருக்கிறார்கள்… ஆகஸ்ட் 9ல் உலகம் முழுக்க ‘தலைவா’ வலம் வருவான் என்கிறார்கள்.



10 Jul 2013

இஸ்லாமியராக மாறிய நடிகர் விஜய்..!

இஸ்லாமியராக மாறிய நடிகர் விஜய்..!

கிறிஸ்தவரான நடிகர் விஜய் இஸ்லாமியராக மாறிவிட்டாரா என தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சி அடைய வேண்டாம்...

நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் 'ஜில்லா' படத்தின் ஒரு காட்சியில் விஜய் தாடி வைத்து குல்லா போட்டு இஸ்லாமியராக மாறி நடித்திருக்கிறார்.

படம் முழுக்க இஸ்லாமியராக நடிக்கிறாரா... இந்த கேள்விக்குள் நீங்கள் போவதற்கு முன்பு ஒரு சின்ன பிளாஷ்பேக்...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து ஹிட் ஆன படம் 'துப்பாக்கி'... இந்த படத்தில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தி விட்டார்கள் என இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியதும்... படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வரிடம் புகார் அளித்ததும்... இஸ்லாமிய பிரதிநிதிகளிடம் இயக்குனர் முருகதாஸ், விஜய் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், தயாரிப்பாளர் தாணுவும் பேச்சு வார்த்தை நடத்தி சில காட்சிகளை நீக்கியதும்...

அந்த சூழலில், 'இஸ்லாமியர்களை எந்த சூழலிலும் விஜய் தவறாக சித்தரிக்க மாட்டார்... அடுத்த படத்தில் இஸ்லாமியர்களின் நண்பனாக கட்டாயம் விஜய் நடிப்பார்' என எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்திருந்தார்...


இப்போது புரிகிறதா... 'ஜில்லா' படத்தில் விஜய் இஸ்லாமியர் வேஷம் போட்டதற்கு காரணம்... 

இஸ்லாமியராக கமல் நடிப்பில் உருவான 'விஸ்வரூபம்' படத்துக்கு எழுந்த பெரும் எதிர்ப்புக்கு பிறகு இஸ்லாமியர்களாக நடிப்பதற்கு மூத்த நடிகர்கள் தயங்கிய நிலையில் விஜய் இஸ்லாமியர் வேஷம் போட்டிருப்பது மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது... 

இஸ்லாமியர்களை கவுரவப்படுத்தும் விதமாக காட்சிகள் இருந்தாலும் இப்போதைக்கு அதைப்பற்றிய தகவல்கள் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறாராம் விஜய்...


சூப்பர்... நலமாக இருக்கிறேன்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஹிருத்திக்

சூப்பர்... நலமாக இருக்கிறேன்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஹிருத்திக் .

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் உள்ள இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், தான் நலமாக இருப்பதாக தனது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் சமூக வலைத்தளம் மூலமாக நேற்று செய்தி அனுப்பியுள்ளார்.
மும்பையில் உள்ள மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னதாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப் பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

நட்சத்திரப் பட்டாளங்கள் அவரை நேரில் சென்று நலம் விசாரித்த வண்ணம் உள்ளன.

ஹிருத்திக்கின் அப்பாவான நடிகர் ராகேஷ் ரோசன் ‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது என்று ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஹிருத்திக்கின் திரையுலக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் அவரை நேரில் சென்று மருத்துவமனையில் பார்த்த வண்ணம் உள்ளனர்.

ஆனால், சாதாரண எளிய ரசிகர்களுக்கு ஹிருத்திக்கின் தற்போதைய நிலைமையைப் பற்றி நேரடியாக தெரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் நிலவியது. இதனை புரிந்து கொண்ட ஹிருத்திக் ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்துள்ளார்.

சலைன் ஏற்றப்பட்ட கைகளோடு, ‘சூப்பர்' என்று விரல்களைக் காட்டிய தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஹிருத்திக்.

கூடவே, ‘தான் நலமாக இருப்பதாகவும், தன் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் நன்றி' எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், வெள்ளிக்கிழமை ரிலீசாகவுள்ள தனது நண்பரின் படத்திற்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் ஹிருத்திக் .

9 Jul 2013

"எதிர்பார்த்துக் காத்திருந்த வெற்றி 'சிங்கம்-2' " - சூர்யா

"எதிர்பார்த்துக் காத்திருந்த வெற்றி 'சிங்கம்-2' " - சூர்யா

"எனக்கு தேவைப்பட்ட வெற்றி, நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வெற்றி 'சிங்கம்-2.' சரியான சமயத்தில் இந்த வெற்றி எனக்குக் கிடைத்துள்ளது " என 'சிங்கம்-2' சக்சஸ் பிரஸ்மீட்டில் சூர்யா தெரிவித்தார்.

"இந்த வெற்றிக்கு காரணம் இயக்குநர் ஹரி தான். கால்ஷீட்டுக்கு தேதிகள் ஒதுக்கும்போதே என்னுடைய பிறந்தநாள், திருமண நாள், குழந்தைகளோட பிறந்தநாளைக் குறிச்சி வைச்சிப்பாரு.
அந்த சமயத்துல எங்க ஷூட்டிங் நடந்தாலும் லீவ் கொடுத்து வீட்டுக்குப் போங்கனு சொல்வாரு. அவரோட சேர்ந்து இது எனக்கு நாலாவது படம். இன்னும் அவரோட சேர்ந்து படங்கள் பண்ண ஆசைப்படுறேன்.

இந்தப் படம் பார்த்ததுக்கு அப்புறம் அப்பாகிட்ட இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அவ்வளவு பெரிய வார்த்தைகளை இதுவரைக்கும் அப்பா என்கிட்ட சொன்னதில்ல. அது ரொம்ப பர்சனலா இருக்குறதால உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியல.

கல்யாணத்துக்கு அப்புறம் ஜோதிகா பார்த்த என்னோட முதல் படம் இதுதான். அவங்க கை தட்டி பாராட்டுனாங்க" என்றார் சூர்யா.

விஜயகுமார் பேசும்போது. "அடுத்த சூப்பர் ஸ்டார் தம்பி சூர்யா தான்" என்றார்.

அடுத்து பேசிய வில்லனாக நடித்த ரகுமான், "சூர்யா ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் தான். அவரோட உயரம் பத்தி இங்க பேசுனாங்க. 'சிங்கத்துக்கு எதுக்கு ஒட்டகத்தோட ஹைட்டு' " என பஞ்ச் வைத்து முடித்தார்.
 -vikatan

---Movie updates          

8 Jul 2013

இளையராஜாவாக நடிக்கும் சத்தியராஜ்

இளையராஜாவாக நடிக்கும் சத்தியராஜ் .

இரண்டு இசையமைப்பாளர்களை சுற்றி நடக்கும் கதையாக இசை என்ற படத்தை இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா.
இப்படத்தை தானே இயக்கி, இசையமைத்து, நடிக்கவும் செய்கிறார்.
இரண்டு இசையமைப்பாளர்களிடையே ஏற்படும் ஈகோ மோதலை பற்றி எடுத்துக் கூறும் படமாகவும் இப்படம் தயாராகிறது.
இது இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய கதை என சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

படத்தில் இரண்டு இசையமைப்பாளர்களின் கதாபாத்திரம் பெயரும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என உச்சரிப்பது போலவே வருவதாகவும் கூறப்படுகிறது.

ரகுமான் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறாராம். இளையராஜா கேரக்டருக்கு முதலில் பிரகாஷ் ராஜ் ஒப்பந்தமாகி இருந்தாராம்.
கதை கேட்டு நடிக்க சம்மதித்த பிரகாஷ் ராஜ், தான் இளையராஜா கேரக்டரில் நடிப்பதாக வெளியே தகவல் கசிந்ததும் திடீரென படத்திலிருந்து விலகிவிட்டார்.

சர்ச்சைக்கு பயந்தே அவர் விலகியதாக தற்போது கூறப்படுகிறது. இதையடுத்து பலரிடம் கதையை கூறியுள்ளார் சூர்யா.
ஆனால் யாரும் நடிக்க முன்வராத இந்நிலையில் இப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

---Movie updates     

நடிகர் ஆகின்றார் நீயா நானா புகழ் கோபி!

 நடிகர் ஆகின்றார் நீயா நானா புகழ் கோபி!

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். அவர் இப்போது சினிமா நடிகர் ஆகிவிட்டார். சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி, அமலா பால் நடிக்கும் ‘‘நிமிர்ந்துநில்’’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜெயம்ரவி நாட்டையே உலுக்கும் ஒரு ரகசியத்தை மீடியாவுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது அவரது நினைவுக்கு வருவது நீயா நானா கோபி. உடனே அவரை மட்டும் அழைத்து நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரமாண்ட டிரக்கரின் உள்ளே வைத்து அவர் அது பற்றி பேட்டி கொடுக்கிறாராம். இந்த பேட்டியை முறியடிக்க சி.பி.ஐ.அதிகாரி சரத்குமார் துரத்துவாராம். இந்த காட்சியை பெங்களுரு மைசூரு ரோட்டில் படமாக்கியிருக்கிறார்கள். அதில் கலந்து கொண்டு கோபிநாத் நடித்திருக்கிறார். படத்தில் சுமார் 20 நிமிடங்கள் வருகிறார் கோபிநாத்.
இதுபற்றி அவர் கூறும்போது “எனக்கு நடிக்கத் தெரியாது. இயக்குனர் சமுத்திரகனி நீங்கள் நீங்களாக வந்தால் போதும் என்றுதான் அழைத்தார். ஆனால் அதன் பிறகு ஆக்ஷன் காட்சியில் எல்லாம் நடிக்க வைத்துவிட்டார். ஒரு சமுதாய பிரச்னையை பேசுகிற படம். வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்றார்.
- See more at: http://www.tamilyouthcafe.com/cinema/14213#sthash.a6drjUuL.dpuf
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். அவர் இப்போது சினிமா நடிகர் ஆகிவிட்டார். சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி, அமலா பால் நடிக்கும் ‘‘நிமிர்ந்துநில்’’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜெயம்ரவி நாட்டையே உலுக்கும் ஒரு ரகசியத்தை மீடியாவுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது அவரது நினைவுக்கு வருவது நீயா நானா கோபி. உடனே அவரை மட்டும் அழைத்து நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரமாண்ட டிரக்கரின் உள்ளே வைத்து அவர் அது பற்றி பேட்டி கொடுக்கிறாராம். இந்த பேட்டியை முறியடிக்க சி.பி.ஐ.அதிகாரி சரத்குமார் துரத்துவாராம். இந்த காட்சியை பெங்களுரு மைசூரு ரோட்டில் படமாக்கியிருக்கிறார்கள். அதில் கலந்து கொண்டு கோபிநாத் நடித்திருக்கிறார். படத்தில் சுமார் 20 நிமிடங்கள் வருகிறார் கோபிநாத்.

இதுபற்றி அவர் கூறும்போது “எனக்கு நடிக்கத் தெரியாது. இயக்குனர் சமுத்திரகனி நீங்கள் நீங்களாக வந்தால் போதும் என்றுதான் அழைத்தார். ஆனால் அதன் பிறகு ஆக்ஷன் காட்சியில் எல்லாம் நடிக்க வைத்துவிட்டார். ஒரு சமுதாய பிரச்னையை பேசுகிற படம். வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்றார்.

 ---Movie updates    


விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். அவர் இப்போது சினிமா நடிகர் ஆகிவிட்டார். சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி, அமலா பால் நடிக்கும் ‘‘நிமிர்ந்துநில்’’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜெயம்ரவி நாட்டையே உலுக்கும் ஒரு ரகசியத்தை மீடியாவுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது அவரது நினைவுக்கு வருவது நீயா நானா கோபி. உடனே அவரை மட்டும் அழைத்து நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரமாண்ட டிரக்கரின் உள்ளே வைத்து அவர் அது பற்றி பேட்டி கொடுக்கிறாராம். இந்த பேட்டியை முறியடிக்க சி.பி.ஐ.அதிகாரி சரத்குமார் துரத்துவாராம். இந்த காட்சியை பெங்களுரு மைசூரு ரோட்டில் படமாக்கியிருக்கிறார்கள். அதில் கலந்து கொண்டு கோபிநாத் நடித்திருக்கிறார். படத்தில் சுமார் 20 நிமிடங்கள் வருகிறார் கோபிநாத்.
இதுபற்றி அவர் கூறும்போது “எனக்கு நடிக்கத் தெரியாது. இயக்குனர் சமுத்திரகனி நீங்கள் நீங்களாக வந்தால் போதும் என்றுதான் அழைத்தார். ஆனால் அதன் பிறகு ஆக்ஷன் காட்சியில் எல்லாம் நடிக்க வைத்துவிட்டார். ஒரு சமுதாய பிரச்னையை பேசுகிற படம். வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்றார்.
- See more at: http://www.tamilyouthcafe.com/cinema/14213#sthash.a6drjUuL.dpuf


நடிகர் ஆகின்றார் நீயா நானா புகழ் கோபி!


நடிகர் ஆகின்றார் நீயா நானா புகழ் கோபி!

7 Jul 2013

நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் அறுவைசிகிச்சை

நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் அறுவைசிகிச்சை .

பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷனுக்கு சில மாதங்களுக்கு முன்னர் ‘பேங்க் பேங்க்’ படப்பிடிப்பின் போது தலையில் காயம் ஏற்பட்டது.

இந்த விபத்திற்குப் பின்பு அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது.
இந்த காயத்தின் விளைவாக மண்டை ஓட்டிற்கும் மூளைக்கும் இடையே நரம்பில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

ரத்தக் கசிவை நிறுத்த உடனடியாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, மும்பை கர் பகுதியில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் இன்று ஹிருத்திக் ரோஷனுக்கு தலையில் சத்திரசிகிச்சை நடத்தப்பட்டது.

நரம்பியல் நிபுணர் மருத்துவர் பி.கே. மிஷ்ரா வெற்றிகரமாக நடத்திய இந்த சத்திரசிகிச்சை சுமார் 45 நிமிடம் நீடித்ததாகவும் ஹிருத்திக் ரோஷன் நலமாக இருப்பதாகவும் அவரது தந்தை ராகேஷ் ரோஷன் கூறியுள்ளார்.

---Movie updates    

பெற்றோர் எதிர்ப்பை மீறி நடிகை காவேரி திடீர் திருமணம்

பெற்றோர் எதிர்ப்பை மீறி நடிகை காவேரி திடீர் திருமணம் .

பிரசாந்த் ஜோடியாக வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காவேரி.
தொடர்ந்து சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், தற்போது சின்னத்திரையில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை காவேரிக்கும், கேரளாவை சேர்ந்த ராகேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

ராகேஷின் சொந்த ஊர் கேரளா மாநிலம் உடுப்பி. இவர் சென்னை வேளச்சேரியில் பார்மெசி ஏஜென்டாக உள்ளார். தொழில் ரீதியாக காவேரியின் அண்ணன் மார்க் மூலம் ராகேஷ்க்கு, காவேரியிடம் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து காவேரி-ராகேஷ் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி இன்று(07.07.2013) விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தில் உள்ள பிரசித்திபெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
காவேரிக்கு தெரிந்த விழுப்புரத்தை சேர்ந்த வக்கீல் செந்தில் குமார் என்பவரது உதவியுடனும், ராகேஷின் நண்பர் ஒருவரது உதவியுடனும் இந்த திருமணம் நடந்துள்ளது.

தான் ஏன் வீட்டை விட்டு வந்து ரகசியமாக, கோயிலில் திருமணம் செய்து கொண்டேன் என்ற விடயத்தை நடிகை காவேரி கூற மறுத்துவிட்டார். 

---Movie updates   

2013 இல் கலெக்ஷனை அள்ளிய படங்கள்!

2013 இல் கலெக்ஷனை அள்ளிய படங்கள்!

2013ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 78 படங்கள் ரிலீசாகியுள்ளது. சுமார் 10 படங்கள் தான் ஹிட்டடித்துள்ளது. மீதி படங்களால் தயாரிப்பாளருக்கு லாஸ். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி பெப்பே காட்டியுள்ளது. சத்தமில்லாமல் கலெக்ஷனை அள்ளிய படங்கள் எது, ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்… - See more at: http://www.tamilyouthcafe.com/cinema/14130#sthash.nJrb5wgB.dpuf
2013ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 78 படங்கள் ரிலீசாகியுள்ளது. சுமார் 10 படங்கள் தான் ஹிட்டடித்துள்ளது. மீதி படங்களால் தயாரிப்பாளருக்கு லாஸ். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி பெப்பே காட்டியுள்ளது. சத்தமில்லாமல் கலெக்ஷனை அள்ளிய படங்கள் எது, ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்… - See more at: http://www.tamilyouthcafe.com/cinema/14130#sthash.nJrb5wgB.dpuf
2013ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 78 படங்கள் ரிலீசாகியுள்ளது. சுமார் 10 படங்கள் தான் ஹிட்டடித்துள்ளது. மீதி படங்களால் தயாரிப்பாளருக்கு லாஸ். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி பெப்பே காட்டியுள்ளது. சத்தமில்லாமல் கலெக்ஷனை அள்ளிய படங்கள் எது, ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்....


கலெக்ஷனை அள்ளிய படங்கள்…

கண்ணா லட்டு தின்ன ஆசையா : கலெக்ஷனை பொறுத்தவரை காசு… பணம்… துட்டு… மணி.. மணி… என்று கொண்டாடியது கண்ணா லட்டு திண்ண ஆசையா. குறைந்த முதலீட்டில் நிறைய லாபம். தயாரிப்பாளரான முதல் படத்திலேயே கோடிகளை அள்ளினார் சந்தானம்.

விஸ்வரூபம் : பெரிய முதலீட்டில் பெரிய லாபம் கண்டது விஸ்வரூபம். தடை, போராட்டம் அது இது என்று படத்துக்கு ஏகத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்க கமல் ஆழ்வார் பேட்டை வீட்டை காப்பாற்றிக் கொண்டார்.

சூது கவ்வும் : அதிரடியாய் வந்து அள்ளியது. தில்லுமுல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு இரண்டுமே சிரிக்க வைத்தே சில்லறையை மூட்டை கட்டியது. கேடிபில்லா கில்லாடி ரங்கா, உதயம் என்.எச் 4, எதிர்நீச்சல், நேரம் படங்கள் லாபத்தை சம்பாதித்துக் கொண்டன.

பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள்…

அலெக்ஸ் பாண்டியன் : கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்தப் படம்தான் அவருக்கு இறங்கு முகத்தை உண்டாக்கியது.

ஆதிபகவன் : நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர், ஆதிபகவன் படத்தை இயக்கினார். சுமார் இரண்டு வருடம் படிப்பிடிப்பு நடந்தது. படத்தின் கதையை சீக்ரெட்டாக வைத்திருந்தார். ஜெயம்ரவி திருநங்கையாக நடிக்கிறார் என்கிற தகவல் கசிய எதிர்பார்ப்பு எகிறியது. படம் எதிர்பாராத வகையில் படுதோல்வி அடைந்தது. தயாரிப்பாளர் அன்புக்கு பல கோடி லாஸ்.

டேவிட் : இந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது டேவிட். இந்தியில் சைத்தான் ஹிட் கொடுத்த பிஜு நம்பியாரின் படம். ஏற்கெனவே முகமூடியில் மூடி கழன்றிருந்த ஜீவாவும், ராஜாபாட்டையில் கிரீடத்தை இழந்திருந்த விக்ரமும் இந்தப் படத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். டேவிட், இரண்டு பேர் நம்பிக்கையையும் பொய்யாக்கியது.

மூன்று பேர் மூன்று காதல் : இயக்குனர் வசந்த் தனது மூன்று பேர் மூன்று காதல் படத்துக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு விளம்பரம் கொடுத்தார். அர்ஜூன், விமல் உள்ளிட்ட மூன்று ஹீரோக்கள். ஜோதிகா சாயலில் ஒரு ஹீரோயின். சிம்ரன் சாயலில் ஒரு ஹீரோயின் என்ற பில்டப் வேறு, தாமிரபரணி பானு ரீ எண்ட்ரி என எகிறிக்கிடந்தது எதிர்பார்ப்பு. அத்தனையும் கவிழ்த்து போட்டது மூன்று மூன்று.

சேட்டை : இந்தியில் மெகா ஹிட் அடித்த டெல்லி பெல்லியை அதே யுடிவி நிறுவனம் தமிழில் ரீமேக் மன்னன் கண்ணனை வைத்து ரீமேக்கியது. ஆர்யா, ஹன்சிகா, சந்தானம் என மெகா கூட்டணி இருந்தும் சேட்டையின் டாய்லெட் சேட்டையை மக்கள் ரசிக்கவில்லை. சந்தானத்திற்கு லேசான சறுக்கலைக் கொடுத்தது.

சமர் : விஷாலின் சமர் சறுக்கிக் கொண்டது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இரண்டு விஷயங்கள் நடந்தது. யாருமே எதிர்பாராத வகையில் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களை கவிழ்த்துப் போட்டது 2013.

கடல் : ராவணன் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் ஏகத்துக்கு எல்லோரது பிபிபையும் எகிற வைத்தது. காரணம் அதில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமான கார்த்திக் மகன் கவுதமும், ராதா மகள் துளசியும் அறிமுகமானார்கள். உலக சினிமா வரலாற்றில் இது அரிதான ஒரு நிகழ்வு. அதேபோன்ற கடற்புறத்து கதை. ஏ,ஆர்.ரகுமான் இசை, அர்ஜுன் முதன்முறையாக வில்லன், அரவிந்த்சாமி ரீ எண்ட்ரி என ஏகப்பட்ட பில்டப்புகள் இருந்தும் படம் ஓடாதது மணிரத்னத்திற்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கே அதிர்ச்சிதான். கடல் படத்தால் கோடிக்கணக்கில் பணம் இழந்த விநியோகஸ்தர்கண் மணிரத்னம் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தியது மோசமான வரலாற்று கரும்புள்ளி.

அன்னக்கொடி : மண்ணின் மைந்தர் பாரதிராஜாவின் அன்னக்கொடி அரைக் கம்பத்தில் பறந்தது. என் கனவு படம், லட்சிய படம் என்றெல்லாம் ஏகத்துக்கு சொன்னார். ரிலீசுக்குப் பிறகு படத்தை மீடியாக்கள் கிழித்து தொங்கவிட பாரதிராஜா அப்செட்.

பெரிய ஜாம்பவான்களையும், ஹீரோக்களையும் படுத்தி எடுத்துவிட்டது 2013ன் முன்பகுதி.

பாராட்டு பெற்ற ஹரிதாஸ், சென்னையில் ஒரு நாள்…

தசைக்குறைபாடு உள்ள சிறுவன் மராத்தான் சேம்பியனாகும் கதைகொண்ட ஹரிதாஸ், உடல் உறுப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்திய சென்னையில் ஒரு நாள் இரண்டுமே மக்களின் பராட்டைப் பெற்றது. செ.ஒ.நா லாபம் சம்பாதித்தது. ஹரிதாஸ் புகழை மட்டும் சம்பாதித்தது.

மன்சூரலிகான் தனது லொள்ளு தாதா பராக் பராக் படத்துக்கும், ராஜகுமாரனின், திருமதி.தமிழ் படத்துக்கும் பண்ணிய பப்ளிசிட்டி கூத்துக்கள் பவர் ஸ்டார் இல்லாத குறையை போக்கியது.

கூட்டி கழித்துப் பார்த்தால் 2013ம் ஆண்டின் முதல்பாதி ஹீரோக்களையும் ஜீனியஸ்களையும் சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு புதியவர்களுக்கு ரெட் கார்பெட் விரித்தது.

---Movie updates  
கலெக்ஷனை அள்ளிய படங்கள்…
கண்ணா லட்டு தின்ன ஆசையா : கலெக்ஷனை பொறுத்தவரை காசு… பணம்… துட்டு… மணி.. மணி… என்று கொண்டாடியது கண்ணா லட்டு திண்ண ஆசையா. குறைந்த முதலீட்டில் நிறைய லாபம். தயாரிப்பாளரான முதல் படத்திலேயே கோடிகளை அள்ளினார் சந்தானம்.
விஸ்வரூபம் : பெரிய முதலீட்டில் பெரிய லாபம் கண்டது விஸ்வரூபம். தடை, போராட்டம் அது இது என்று படத்துக்கு ஏகத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்க கமல் ஆழ்வார் பேட்டை வீட்டை காப்பாற்றிக் கொண்டார்.
சூது கவ்வும் அதிரடியாய் வந்து அள்ளியது. தில்லுமுல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு இரண்டுமே சிரிக்க வைத்தே சில்லறையை மூட்டை கட்டியது. கேடிபில்லா கில்லாடி ரங்கா, உதயம் என்.எச் 4, எதிர்நீச்சல், நேரம் படங்கள் லாபத்தை சம்பாதித்துக் கொண்டன.
பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள்…
அலெக்ஸ் பாண்டியன் : கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்தப் படம்தான் அவருக்கு இறங்கு முகத்தை உண்டாக்கியது.
ஆதிபகவன் : நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர், ஆதிபகவன் படத்தை இயக்கினார். சுமார் இரண்டு வருடம் படிப்பிடிப்பு நடந்தது. படத்தின் கதையை சீக்ரெட்டாக வைத்திருந்தார். ஜெயம்ரவி திருநங்கையாக நடிக்கிறார் என்கிற தகவல் கசிய எதிர்பார்ப்பு எகிறியது. படம் எதிர்பாராத வகையில் படுதோல்வி அடைந்தது. தயாரிப்பாளர் அன்புக்கு பல கோடி லாஸ்.
டேவிட் : இந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது டேவிட். இந்தியில் சைத்தான் ஹிட் கொடுத்த பிஜு நம்பியாரின் படம். ஏற்கெனவே முகமூடியில் மூடி கழன்றிருந்த ஜீவாவும், ராஜாபாட்டையில் கிரீடத்தை இழந்திருந்த விக்ரமும் இந்தப் படத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். டேவிட், இரண்டு பேர் நம்பிக்கையையும் பொய்யாக்கியது.
மூன்று பேர் மூன்று காதல் : இயக்குனர் வசந்த் தனது மூன்று பேர் மூன்று காதல் படத்துக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு விளம்பரம் கொடுத்தார். அர்ஜூன், விமல் உள்ளிட்ட மூன்று ஹீரோக்கள். ஜோதிகா சாயலில் ஒரு ஹீரோயின். சிம்ரன் சாயலில் ஒரு ஹீரோயின் என்ற பில்டப் வேறு, தாமிரபரணி பானு ரீ எண்ட்ரி என எகிறிக்கிடந்தது எதிர்பார்ப்பு. அத்தனையும் கவிழ்த்து போட்டது மூன்று மூன்று.
சேட்டை : இந்தியில் மெகா ஹிட் அடித்த டெல்லி பெல்லியை அதே யுடிவி நிறுவனம் தமிழில் ரீமேக் மன்னன் கண்ணனை வைத்து ரீமேக்கியது. ஆர்யா, ஹன்சிகா, சந்தானம் என மெகா கூட்டணி இருந்தும் சேட்டையின் டாய்லெட் சேட்டையை மக்கள் ரசிக்கவில்லை. சந்தானத்திற்கு லேசான சறுக்கலைக் கொடுத்தது.
சமர் : விஷாலின் சமர் சறுக்கிக் கொண்டது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இரண்டு விஷயங்கள் நடந்தது. யாருமே எதிர்பாராத வகையில் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களை கவிழ்த்துப் போட்டது 2013.
கடல் : ராவணன் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் ஏகத்துக்கு எல்லோரது பிபிபையும் எகிற வைத்தது. காரணம் அதில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமான கார்த்திக் மகன் கவுதமும், ராதா மகள் துளசியும் அறிமுகமானார்கள். உலக சினிமா வரலாற்றில் இது அரிதான ஒரு நிகழ்வு. அதேபோன்ற கடற்புறத்து கதை. ஏ,ஆர்.ரகுமான் இசை, அர்ஜுன் முதன்முறையாக வில்லன், அரவிந்த்சாமி ரீ எண்ட்ரி என ஏகப்பட்ட பில்டப்புகள் இருந்தும் படம் ஓடாதது மணிரத்னத்திற்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கே அதிர்ச்சிதான். கடல் படத்தால் கோடிக்கணக்கில் பணம் இழந்த விநியோகஸ்தர்கண் மணிரத்னம் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தியது மோசமான வரலாற்று கரும்புள்ளி.
அன்னக்கொடி : மண்ணின் மைந்தர் பாரதிராஜாவின் அன்னக்கொடி அரைக் கம்பத்தில் பறந்தது. என் கனவு படம், லட்சிய படம் என்றெல்லாம் ஏகத்துக்கு சொன்னார். ரிலீசுக்குப் பிறகு படத்தை மீடியாக்கள் கிழித்து தொங்கவிட பாரதிராஜா அப்செட்.
பெரிய ஜாம்பவான்களையும், ஹீரோக்களையும் படுத்தி எடுத்துவிட்டது 2013ன் முன்பகுதி.
பாராட்டு பெற்ற ஹரிதாஸ், சென்னையில் ஒரு நாள்…
தசைக்குறைபாடு உள்ள சிறுவன் மராத்தான் சேம்பியனாகும் கதைகொண்ட ஹரிதாஸ், உடல் உறுப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்திய சென்னையில் ஒரு நாள் இரண்டுமே மக்களின் பராட்டைப் பெற்றது. செ.ஒ.நா லாபம் சம்பாதித்தது. ஹரிதாஸ் புகழை மட்டும் சம்பாதித்தது.
மன்சூரலிகான் தனது லொள்ளு தாதா பராக் பராக் படத்துக்கும், ராஜகுமாரனின், திருமதி.தமிழ் படத்துக்கும் பண்ணிய பப்ளிசிட்டி கூத்துக்கள் பவர் ஸ்டார் இல்லாத குறையை போக்கியது.
கூட்டி கழித்துப் பார்த்தால் 2013ம் ஆண்டின் முதல்பாதி ஹீரோக்களையும் ஜீனியஸ்களையும் சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு புதியவர்களுக்கு ரெட் கார்பெட் விரித்தது.
- See more at: http://www.tamilyouthcafe.com/cinema/14130#sthash.nJrb5wgB.dpuf

5 Jul 2013

கோலிவுட்டுக்கு தாவத் துடிக்கும் அசினுக்கு உதவுவாரா கௌதம் மேனன்?

கோலிவுட்டுக்கு தாவத் துடிக்கும் அசினுக்கு உதவுவாரா கௌதம் மேனன்? 

சென்னை: பாலிவுட்டில் இருந்து மீண்டும் கோலிவுட் பக்கம் போய்விடலாமா என்ற யோசனையில் இருக்கும் அசினுக்கு கௌதம் மேனன் உதவி செய்வாரா?
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தபோது அசின் பாலிவுட்டில் சாதிக்க வேண்டும் என்று மும்பையில் செட்டிலானார். பாலிவுட்டில் நான் தான் நம்பர் 1 ஹீரோயின் என்று அவர் கூறியதை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. அங்கு அவருக்கு அப்படி ஒன்றும் பட வாய்ப்புகளும் வருவதில்லை.

இந்நிலையில் அவருக்கு வெளிநாட்டில் காதலர் உள்ளதாகவும் அதனால் தான் அவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருவதாகவும் வட இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. பேசாமல் பாலிவுட்டில் இருந்து கோலிவுட் பக்கம் போய்விடலாமா என்று அசின் நீண்ட நாட்களாக யோசனையில் உள்ளார்.

இந்நிலையில் கௌதம் மேனன் தனது துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் அல்லது சோனம் கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். அப்படி அவர் அசினை தேர்வு செய்தால் அவருக்கு இது பெரிய உதவியாக இருக்கும். அதே சமயம் அண்மையில் தமிழகத்தில் வெளியான அம்பிகாபதி படத்தில் நடித்துள்ள சோனம் கபூரை நம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. இதையும் மனதில் வைத்து தான் கௌதம் ஹீரோயினை தேர்வு செய்யக்கூடும்.

---Movie updates  

சிம்பு - சந்தானம்காமெடி கலாட்டா

சிம்பு - சந்தானம்காமெடி கலாட்டா.

"வாலு படத்திற்கான டைட்டில் பிரச்னை எழுந்த போது, சிம்பு,"ஷாக் ஆகிவிட்டார். இதனால், "வேட்டை மன்னன் பட வேலைகளில் இறங்கினார், அவர். அதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், "வாலு டைட்டில் சிம்பு படத்துக்கே கிடைத்தது. அதனால், இப்போது மீண்டும், "வாலு படப்பிடிப்பில் இறங்கியுள்ளார் சிம்பு. சந்தானம், ஹன்சிகா இருவரும் வெவ்வேறு படங்களில் படுபிசியாக நடித்துக் கொண்டிருந்த போதும், சிம்பு அழைத்ததைத் தொடர்ந்து, மீண்டும் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகின்றனர். இப்படமும் காமெடி கதையில் உருவாகி வருவதால், ஒவ்வொரு காட்சியிலும், சிம்பு - சந்தானம் கூட்டணி காமெடியில் பட்டையை கிளப்புகிறதாம்.  


---Movie updates  

4 Jul 2013

சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார் சூர்யா!

சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார் சூர்யா!

தமிழ்த் திரையுலகில் தற்போது இருக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம். சூர்யா, கார்த்தியின் உறவுக்காரரான ஞானவேல்ராஜா இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சூர்யாவின் கால்ஷீட் தேதிகள் கேட்டு வரும் முன்னணி இயக்குனர்களை, அப்படியே கார்த்தியின் கால்ஷீட் தேதிகள் கொடுத்து படத்தினைத் தயாரித்து விடுகிறதாம் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.

வெங்கட்பிரபு முதலில் சூர்யாவின் தேதிகள் கேட்டு தான் சென்றார். ஆனால், தற்போது கார்த்தியை வைத்து 'பிரியாணி' சமைத்து வருகிறார். அதுபோலவே ராஜேஷும் சூர்யா தேதிகள் கேட்டார். தற்போது கார்த்தியை வைத்து 'ஆல் இன் ஆல் அழகுராஜா' இயக்கி வருகிறார்.

'சிங்கம் 2' முடிந்த கையோடு ஹரியை வளைத்துப் போட்டு விட்டார்கள். ஹரி அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி தான் நாயகன். இப்படி சூர்யாவை அணுகும் அனைத்து இயக்குனர்களையும் கார்த்தியை முன்னிறுத்தி விடுகிறார்களாம்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஒருபுறம் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யாவும் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்க இருக்கிறார்.

தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு '2D Entertainment' என்று தலைப்பிட்டு இருக்கிறார். D - Diya, D - Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து '2D Entertainment' என்று பெயரிட்டு இருக்கிறார்.
இந்த நிறுவனத்தின் மூலம் சிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் சூர்யா.

---Movie updates  

3 Jul 2013

பரத் இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.

பரத் இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.

பரத் இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.’பாய்ஸ்’ படத்தில் ஷங்கர் மூலம் அறிமுகமான பரத் அதன்பிறகு “காதல்”, ”பட்டியல்”, எம் மகன்”,”வெயில்”, பழனி”, சேவல்”, அரவாண்” போன்று  சுமார் 20 படங்களில் நடித்திருப்பவர். இவர் நடித்து “கில்லாடி”"555″ படங்கள் வெளியாகயுள்ளன. இந்நிலையில் இவருக்கு ஒரு இந்திப் படத்தில் நடிக்க அழைப்பு வந்து உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கியாகிவிட்டது.
ஒவ்வொருவருக்கும் இந்திப் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். சிலருக்கு கனவாக கூட இருக்கும். ஏனென்றால் இந்தி மார்கெட் அவ்வளவு பெரியது. இந்தியில் நடித்துவிட்டால் இப்போது உலகப்புகழ் கிடைத்து விடுகிறது. நான் இது பற்றி சிந்தித்ததில்லை. நாமெல்லாம் எங்கே நடிக்க போகிறோம் என்று இருந்தேன்.

“ஒரு நாள் எனக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது.தாங்கள் ’555′ படத்தின் ஸ்டில்கள்,விளம்பரங்களை பார்த்ததாகவும் பிடித்து இருந்ததாகவும் உடனடியாக மும்பை வரமுடியுமா என்றும் கேட்டார்கள். மும்பை போனேன்.அவர்களுக்கு பிடித்து விட்டது. அதுதான் ‘ஜாக்பாட்’படம் எனக்கு இந்த படவாய்ப்பே ஒரு ஜாக்பாட் வாய்ப்பு போலதான்.இரண்டே நாளில் முடிவாகிவிட்டது.


ஜாக்பாட் படத்தை தயாரிப்பது வைக்கிங் மீடியா என் டர்டெய்ன்மெண்ட் நிறுவனம். இயக்குவது கெய்சாத் குஸ்தாத். இவர் அமெரிக்காவில் சினிமா படித்தவர்.”பாம்பே பாய்ஸ்”, “பூம்” போன்ற படங்களை இயக்கியவர். கத்ரினா கய்ப்பை அறிமுகம் செய்தவரே இவர்தான்.படத்துக்கு ஒளிப்பதிவு ஆர்த்தர் சுராவ்ஸ்கி. இவர் போலந்துகாரர். ஹாலிவுட் ஈரானில் கொரியன் படங்களில் பணியாற்றியவர்.இந்தப் படத்துக்கு 7 பேர் இசை அமைக்கிறார்கள்.இது ஒரு காமெடி த்ரில்லர்.

படத்தில் நான்,சச்சின் ஜோஷி,நஸ்ருதீன் ஷா,சன்னி லியோன் நான்கு பேர் முக்கிய கேரக்டர்கள்.எங்களைச் சுற்றிதான் கதை நிகழும்.நான்கு பெரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஏமாற்றிக் கொள்ளை அடிப்போம். 

 நான் பாண்டிசேரியிலிருந்து கோவா போய் தங்கிவிட்ட தமிழ்ப் பையனாக நடிக்கிறேன்.அங்குள்ள கேஸினோ,எனப்படும் கேளிக்கை விடுதியில் வேலை பார்ப்பேன். இந்தக்கதை கோவா,மும்பை என இரண்டு நகரங்களிலும் நடக்கும்.இதில் நடிக்கும் நடிகர்களில் இளையவன் நான்தான். இருந்தாலும் தமிழ் திரையுலகின் மீதுள்ள மரியாதையால் என்னை அன்பாக நடத்துகிறார்”. இவ்வாறு பரத் கூறினார்.

---Movie updates   

85 வயது முதியவராக விக்ரம்!

85 வயது முதியவராக விக்ரம்!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'ஐ' படத்தின் FIRST LOOK போஸ்டர், டிரெய்லர் எப்போது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஆனால், அதற்கு இன்னும் பல காலம் ஆகும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

ரொம்பவே உடல் மெலிந்து காணப்பட்ட விக்ரம், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே 'ஐ' படத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக விக்ரமை எந்த பொது நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை.

அதுமட்டுமன்றி ஜி.வி.பிரகாஷின் திருமணத்தில் கூட விக்ரம் கலந்து கொள்ளவில்லை. தொலைபேசி மூலமாக தனது வாழ்த்தை தெரிவித்தார். விக்ரம் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று விசாரித்ததில் சில ஆச்சர்ய தகவல்கள் கிடைத்தன.

'ஐ' படத்தில் 85 வயது முதியவர் வேடம் ஒன்று இருக்கிறதாம். அதுவும் அந்த வேடத்தில் உடம்பு வெயிட் ஏற்றி ஜிம் பாய் மாதிரி இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டு இருக்கிறாராம் ஷங்கர்.

இதற்காக எந்த நேரம் பார்த்தாலும் ஜிம்மே கதி என்று இருக்கிறாராம் விக்ரம். ஜிம் விட்டால் வீடு, வீட்டை விட்டால் படப்பிடிப்பு என்று கடந்த 3 மாதங்களாக இருந்து வருகிறார் விக்ரம்.

இந்த உடலமைப்போடு எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கோ, குடும்ப நிகழ்ச்சிக்கோ செல்ல வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறாராம் ஷங்கர்
.

---Movie updates   

85 வயது முதியவராக விக்ரம்!
85 வயது முதியவராக விக்ரம்!
85 வயது முதியவராக விக்ரம்!
85 வயது முதியவராக விக்ரம்!

2 Jul 2013

ஆல் இன் அழகு ராஜாவில் பாவனா

ஆல் இன் அழகு ராஜாவில் பாவனா ?

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் பாவனா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சகுனி, அலெக்ஸ் பாண்டியன் என தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்ததால், வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் கார்த்தி.
இந்நிலையில் அவர் ஒரே நேரத்தில் பிரியாணி, ஆல் இன் அழகு ராஜா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பிரியாணியில் ஹன்சிகாவுடனும், அழகு ராஜாவில் காஜல் அகர்வாலுடனும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அழகு ராஜா படத்தில் பாவனாவும் இணைகிறாராம்.
படத்தில் புதுசாக பாவனாவை உள்ளே கொண்டு வந்திருப்பது கார்த்தி தானாம்.

படமே முடிந்த பின்பும் கதையில் மேலும் பல திருத்தங்கள் செய்து இப்போது இருபது நாட்கள் ஷுட்டிங் கிளம்புகிறார்களாம்.
இதற்காக பாவனா தொடர்ச்சியாக இருபது நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

நேரம் நாயகிக்கு நடிக்க நேரமில்லையாம்!

நேரம் நாயகிக்கு நடிக்க நேரமில்லையாம்!


சமீபத்தில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா நாசிம். 


கேரளத்து வரவான இவர் தற்போது தனுசுக்கு ஜோடியாக நய்யாண்டி படத்திலும், ஆர்யாவுக்கு ஜோடியாக ராஜாராணி படத்திலும் நடிப்பதற்காக கால்ஷிட் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராஜராணி படத்திற்காக காஞ்சிபுரத்தில் படப்பிடிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இவர் அதில் கலந்து கொள்ளாததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 


இது குறித்து சங்க நிர்வாகிகள் விசாரித்த போது நய்யாண்டி, ராஜாராணி ஆகிய இரண்டு படத்துக்கும் ஒரே நாளில் நஸ்ரியா கால்ஷீட் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. நேரம் படத்திற்கு பின்பு இவருக்கு நேரம் நன்றாக இருப்பதால் வாய்ப்புகள் குவிகின்றன ஆனால் இதனை நஸ்ரியாவால் சரியாக பயன்படுத்த தெரியவில்லை என சினிமா வட்டாரங்கள்.

---Movie updates

Century in Cinema: A celebration at Chennai .

Century in Cinema: A celebration at Chennai .

The southern movie industry is soon to come together to commemorate Indian cinema’s centenary year. C. Kalyan, president of South Indian Film Chambers of Commerce (SIFCC) admits that returning to the roots is one of the reasons why Chennai was chosen for the event.

“Chennai is the birthplace of South Indian cinema” says Kalyan while he expresses his excitement over the fact that notable personalities from the Malayalam, Tamil, Telugu and Kannada film industries are expected to be among the attendees. In preparation for the occasion that is to run from Sept 1-3, all the four industries will remain closed facilitating and ensuring the participation of many.

There are also hopes that the chief ministers of the respective states would grace the event and give support to the memorable gathering.
 

-behindwoods

Dhruva Natchathiram dropped

Is Dhruva Natchathiram dropped?

Supposed casting and scripting challenges have warranted Dhruva Natchathiram’s commencement to be postponed.

At the moment the industry is buzzing with the news that Dhruva Natchathiram might be dropped. But, in an interview to a daily yesterday, Suriya had categorically stated that he is committed to Gautham Vasudeva Menon (GVM) and denied claims of backing out of the project, and in his own words added that "the script needs some more working on". When Behindwoods got in touch with the prolific director, GVM said that he had nothing further to add to what Suriya had said to the daily.

Suriya - Gautham pairing has always enjoyed a cult following among the movie buffs. This delay with Dhruva Natchathiram has prompted Suriya to jump into action for his project with Lingusamy where the pre-production is in full swing. The crew is planning a 5 day schedule, sometime during mid August to kick start the proceedings.

also got in touch with Lingusamy. "We will be starting the shoot soon in August. The film is as yet untitled but everything is being planned. I will keep you posted on the updates", added Lingusamy. Being one of the top commercial directors of Tamil, there is lot of expectation on his first union with Suriya.