"எதிர்பார்த்துக் காத்திருந்த வெற்றி 'சிங்கம்-2' " - சூர்யா
"எனக்கு தேவைப்பட்ட வெற்றி, நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த
வெற்றி 'சிங்கம்-2.' சரியான சமயத்தில் இந்த வெற்றி எனக்குக் கிடைத்துள்ளது "
என 'சிங்கம்-2' சக்சஸ் பிரஸ்மீட்டில் சூர்யா தெரிவித்தார்.
"இந்த வெற்றிக்கு காரணம் இயக்குநர் ஹரி தான். கால்ஷீட்டுக்கு தேதிகள் ஒதுக்கும்போதே என்னுடைய பிறந்தநாள், திருமண நாள், குழந்தைகளோட பிறந்தநாளைக் குறிச்சி வைச்சிப்பாரு.
"இந்த வெற்றிக்கு காரணம் இயக்குநர் ஹரி தான். கால்ஷீட்டுக்கு தேதிகள் ஒதுக்கும்போதே என்னுடைய பிறந்தநாள், திருமண நாள், குழந்தைகளோட பிறந்தநாளைக் குறிச்சி வைச்சிப்பாரு.
அந்த சமயத்துல எங்க ஷூட்டிங் நடந்தாலும் லீவ் கொடுத்து வீட்டுக்குப்
போங்கனு சொல்வாரு. அவரோட சேர்ந்து இது எனக்கு நாலாவது படம். இன்னும் அவரோட
சேர்ந்து படங்கள் பண்ண ஆசைப்படுறேன்.
இந்தப் படம் பார்த்ததுக்கு அப்புறம் அப்பாகிட்ட இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அவ்வளவு பெரிய வார்த்தைகளை இதுவரைக்கும் அப்பா என்கிட்ட சொன்னதில்ல. அது ரொம்ப பர்சனலா இருக்குறதால உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியல.
கல்யாணத்துக்கு அப்புறம் ஜோதிகா பார்த்த என்னோட முதல் படம் இதுதான். அவங்க கை தட்டி பாராட்டுனாங்க" என்றார் சூர்யா.
விஜயகுமார் பேசும்போது. "அடுத்த சூப்பர் ஸ்டார் தம்பி சூர்யா தான்" என்றார்.
அடுத்து பேசிய வில்லனாக நடித்த ரகுமான், "சூர்யா ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் தான். அவரோட உயரம் பத்தி இங்க பேசுனாங்க. 'சிங்கத்துக்கு எதுக்கு ஒட்டகத்தோட ஹைட்டு' " என பஞ்ச் வைத்து முடித்தார்.
இந்தப் படம் பார்த்ததுக்கு அப்புறம் அப்பாகிட்ட இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அவ்வளவு பெரிய வார்த்தைகளை இதுவரைக்கும் அப்பா என்கிட்ட சொன்னதில்ல. அது ரொம்ப பர்சனலா இருக்குறதால உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியல.
கல்யாணத்துக்கு அப்புறம் ஜோதிகா பார்த்த என்னோட முதல் படம் இதுதான். அவங்க கை தட்டி பாராட்டுனாங்க" என்றார் சூர்யா.
விஜயகுமார் பேசும்போது. "அடுத்த சூப்பர் ஸ்டார் தம்பி சூர்யா தான்" என்றார்.
அடுத்து பேசிய வில்லனாக நடித்த ரகுமான், "சூர்யா ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் தான். அவரோட உயரம் பத்தி இங்க பேசுனாங்க. 'சிங்கத்துக்கு எதுக்கு ஒட்டகத்தோட ஹைட்டு' " என பஞ்ச் வைத்து முடித்தார்.
-vikatan
No comments:
Post a Comment