30 Jun 2013

ரான்ஞ்னாவில் நடிக்காது போய்விட்டேனே! அமிதாப் பச்சன் புலம்பல் ?

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தனுஷின் முதல் ஹிந்தி படமான ‘ரான்ஞ்னா´ வில் தான் ஒரு சிறிய கதாபாத்திரத்திலாவது தோன்றும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என வேதனையில் உள்ளாராம் அமிதாப் பச்சன்.
ஹிந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான அமிதாப் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரான்ஞ்னா திரைப்படத்டைப் பார்த்தார். 

படத்தைப் பார்த்து விட்டு, இது ஒரு நல்ல படம். இதுபோன்ற படங்களில் நடிப்பவர்களைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாக இருப்பதாக தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
ரான்ஞ்னாவில் தனுஷ் ஜோடியாக் சோனம் கபூர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

இப்படம் தமிழில் ‘அம்பிகாபதி´ என்ற பெயரில் இன்று வெளியாக இருக்கிறது (28/6/2013). ரான்ஞ்னாவைப் பார்த்தவர்கள் எல்லாம், சகட்டு மேனிக்கு படத்திற்கு பாராட்டுக்களை வாரி இறைத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இதனைப் பார்த்து பிரமித்த அமிதாப், தனது இணைய தள பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார். 

‘இந்தத் திரைப்படத்தை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. இதுபோன்ற சிறந்த திரைப்படங்களைப் பார்க்கும்போது இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு சிறிய அளவிலாவது இருந்திருக்கலாமே என்று என்னைப் புலம்பவும், பொறாமைப்படவும் வைத்துவிடுகின்றது.
இளைய தலைமுறையினர் வெளிப்படுத்தும் அபரிமிதமான திறமையும், கலை நுணுக்கத்திறனும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். 

இன்னும் சில திறமையான இயக்குனர்கள், நடிகர்கள் நடித்து வெளிவரவிருக்கும் சில படங்களையும் பார்க்கவேண்டும்.
இத்தகைய திரைப்படங்களைப் பார்ப்பது தனக்கு சந்தோஷத்தையே அளிக்கும்´ எனத் தெரிவித்துள்ளார் அமிதாப்.
பிரகாஷ் ஜாவின் இயக்கத்தில், அமிதாப் நடித்துள்ள சத்யகிரஹா விரைவில் திரைக்கு வரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மீண்டும், குடும்ப பாங்கான கேரக்டர்களை தேடிச் செல்லும் அஞ்சலி!

 “அங்காடித் தெரு, கற்றது தமிழ் என, கனமான கதைகளை கொண்ட படங்களில்நடித்து, முத்திரை பதித்த  இடையில், கிளாமருக்கு முக்கியத்துவம் தரும், சில படங்களிலும் நடித்தார். ஆனால், அஞ்சலி கவர்ச்சியாக நடித்த படங்கள், எடுபடவில்லை. இதனால், மீண்டும், குடும்ப பாங்கான கேரக்டர்களை தேடிச் செல்கிறார். அவர் கூறுகையில், “கவர்ச்சி பொம்மையாக, யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால், நல்ல கதையம்சம் உடைய படங்கள், ஒரு சில நடிகைகளுக்கு தான், கிடைக்கும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. நான்கு பாடல்கள், இரண்டு காட்சிகளில் வந்து, தலைகாட்டுகிற நடிகை என, பெயர் எடுக்க விரும்பவில்லை. அஞ்சலி என்றால், நல்ல படங்களில் நடிக்கும் நடிகை என, ரசிகர்கள் கொண்டாட வேண்டும். எனக்கு, அதுபோதும் என, ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

---Movie updates
ராணியாக வேண்டும் என்பதற்காக 15 கிலோ எடையை குறைத்த அனுஷ்கா!

நடிக்க வருவதற்கு முன், யோகா டீச்சராக பணியாற்றியவர், அனுஷ்கா. தமிழ், தெலுங்கில், தற்போது அவருக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், நல்ல கதையம்சம் உடைய, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார். தற்போது, தமிழ், தெலுங்கில் தயாராகும், “ராணி ருத்ரம்மா தேவி என்ற படத்தில், ராணி ருத்ரம்மா கேரக்டரில் நடிக்கிறாராம்.
ராணி வேடம் என்பதால், குதிரையேற்றம், வாள் வீச்சு போன்ற பயிற்சிகளை பெற வேண்டியிருந்ததாம். இதனால், இதற்கென பிரத்யேக பயிற்சியாளர்களை பணிக்கு அமர்த்தி, இந்த வித்தைகளை கற்றுக் கொண்டாராம். படத்தில், ஆக்டிவ்வாக தோன்ற வேண்டும் என்பதற்காக, கடுமையான உடற் பயிற்சிகளை செய்து, எடையை, 15 கிலோ குறைத்து, கம்பீரமாக, அசல் ராணி போலவே காட்சி அளிக்கிறாராம்.

மீண்டும் நடிக்கவரும் சுந்தர்.சி : நாயகி சமந்தாவா, அனுஷ்காவா?

 ஒழுங்காக படம் இயக்கிக் கொண்டிருந்த சுந்தர் சி.யை அவரது மனைவி குஷ்பு உசுப்பிவிட்டு கதாநாயகனாக்கினார்.
முதல் படம் தலைநகரம் தவிர்த்து மற்ற எல்லாம் சுமாராகத்தான் ஓடியது. கடவுளே இந்த கஷ்டத்திலிருந்து விடுதலை கொடு என்ற தமிழக மக்களின் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது. 

தாறுமாறான தோல்விகளுக்குப் பிறகு, படம் நடிப்பதில்லை என ஒரு நல்ல நாளில் முடிவெடுத்து கலகலப்பு, மத கஜ ராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு என இயக்கத்தின் பக்கம் திரும்பி படங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். 

இரசிகர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்தநிலையில் அரண்மனை என்றொரு கதையை யோசித்து வைத்திருக்கிறாராம். இதில் நானே நடித்தால் என்ன என்று அவருக்கு தோன்றியிருப்பதுதான் காலத்தின் கோலம். 

கதாநாயகியை தேர்வு செய்யும் பொறுப்பை குஷ்பு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா என்று பெயர்களை குலுக்கிப் போட்டு தேர்வு செய்வதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 


1 படம் தோற்றால் 10 படம் நடித்துக் கொடுப்பேன்:வடிவேல்!

சினிமாவில் மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தவர் வடிவேலு. அதனால் பல கதைகள் கேட்டு அதில் ஒரு கதையை செலக்ட் பண்ணி இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பு அவரை வைத்து படம் தயாரிக்க முன்னணி படாதிபதிகள் யாரும் முன்வரவில்லை. 6 மாதங்களாக பொறுமையாக காத்திருந்த வடிவேலுவே ஒருகட்டத்தில் தயாரிப்பாளர் தேடும் பணியில் இறங்கி செயல்பட்டார். அப்படி கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் பிலிம்சுக்கும் பல தடவை நடையாய் நடந்திருக்கிறார். அதன்பிறகுதான் அவரை வைத்து படம் பண்ண முன்வந்தார்களாம். அப்போது, தன்னிடம் கதை சொல்லியிருந்த யுவராஜின் கதையை அவர்களிடம் சொல்லி ஓ.கே வாங்கியிருக்கிறார் வடிவேலு.

ஆனால், அப்படி ஒப்பந்தமாவதற்கு முன்பு, அந்த நிறுவனத்துக்கு ஒரு உறுதி மொழியும் அளித்தாராம் வடிவேலு. அதாவது, ஒருவேளை என்னை வைத்து நீங்கள் தயாரிக்கிற படம் தோல்வியடைந்தால், அதற்கு பிராயசித்தமாக உங்களுக்கு 10 படங்களில் காமெடியனாக நடித்து தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தாராம் வடிவேலு.


28 Jun 2013

ரஜினி – ஷங்கர் கூட்டணி? அதிர்ச்சியில் திரையுலகம்!

ரஜினி கோச்சடையான் திரைப்படத்தின் ரிலீஸிலும், ஷங்கர் ‘ஐ’ திரைப்படத்தின் மேக்கிங்கிலும் முழுமையாக ஈடுபட்டிருக்கின்றனர். ரஜினி ஷங்கர் இணைந்த சிவாஜி, எந்திரன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனைகளைப் படைத்தன. 

எந்திரன் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு தான் ஜப்பானில் ரிலீஸாகி வசூலை அள்ளியது. இந்நிலையில் ஷங்கர் சமீபத்தில் ரஜினியிடம் ஒரு கதையைக் கூறியதாகவும், கதையைக் கேட்ட ரஜினியும் ஓகே சோல்லிவிட்டார் என்ற தகவல் கோடம்பாக்கம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. 

ஷங்கரின் ஐ திரைப்படம் கடைசிகட்ட ஷூட்டிங்கில் இருப்பதாலும், ரஜினி அடுத்ததாக எந்த படத்திலும் ஒப்பந்தமாகாததாலும் இவர்களது மூன்றாவது கூட்டணிக்கு ஏன் வாய்ப்பில்லை என்று கேள்வி எழுப்புகிறது தமிழ்த்திரையுலகம். 



அப்பாவின் கோபம்! அரசியல் நெருக்கடி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! மூட்-அவுட்டில் ‘தலைவா’ விஜய்!

நடிகர் விஜய்யின் 39-வது பிறந்தநாளுக்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் வெகு தீவிரமாக நடந்துவந்தது. சமீபத்தில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்படவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. 



ரசிகர்கள் ஏற்பாடு செய்திருக்கும் எந்த நிகழ்ச்சியிலும் இன்று(22.06.13)விஜய் கலந்துகொள்ளவில்லையாம். இதுபற்றி விசாரித்தபோது, ஏற்கனவே திட்டமிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டது விஜய்யை மிகவும் பாதித்துள்ளதாம். எனவே விஜய் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளமல் மற்ற நாட்களைப் போன்று சாலிக்கிராமத்தில் நடந்துகொண்டிருக்கும் ஜில்லா படப்பிடிப்பிற்கு செல்கிறாராம். 

தனிப்பட்ட முறையில் அரசியல் செல்வாக்கு இருப்பவர்கள் யாரையும் வளரவிடக்கூடாது என்பதில் தற்போதைய அரசாங்கம் தனிகவனம் செலுத்திவருவதாக பேசப்படுகிறது.(சென்ற ஆட்சியிலும் விஜய்க்கு இதுபோன்ற நெருக்கடிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது)மிகவும் எதிர்பார்ப்புடன் நேற்று(21.06.13) நடந்த தலைவா இசைவெளியீட்டு விழாவிலும் விஜய் அதிகம் பேசவில்லை.

இசைவெளியீட்டு விழாவிலும் விஜய் அதிகம் பேசவில்லை.
விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் துப்பாக்கி படஇசைவெளியீட்டு விழாவின்போதே ‘என் மகனின் கால்ஷீட் எனக்கே கிடைக்கவில்லை, ஒரு வழியாக கால்ஷீட் வாங்கி துப்பாக்கி துவங்கினேன். துப்பாக்கி பட பட்ஜெட் எகிறியதும் படம் தாணு கைக்கு மாறியது” என்று கூறியிருந்தார். தலைவா இசைவெளியீட்டு விழாவில் சந்திரசேகர் “தலைவா திரைப்படத்தின் கதை எனக்கே தெரியாது. நானும் உங்களைப் போலத்தான் படத்தைப் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று பேசியதும், விழா நடந்துகொண்டிருக்கும்போதே அவர் கிளம்பிவிட்டதும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 விஜய்க்கு வரும் கதைகளை சந்திரசேகர் தான் கேட்டு ஒப்புதல் சொல்வார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தலைவா இசைவெளியீட்டு விழாவில் நடந்த நிகழ்ச்சிகள் அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கிவிட்டது. அதன் பிறகு பேசிய விஜய்யும் அதிகம் பேசவில்லை. 

தலைவா படக்குழுவிற்கு நன்றி சொன்னதோடு “படம் நன்றாக இருக்கிறது தியேட்டருக்கு சென்று பாருங்கள்” என்று முடித்துவிட்டார். ரசிகர்கள் கேட்டதும் அலட்டிக்கொள்ளாமல் பாட்டு பாடும் விஜய், நேற்று ரசிகர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் பாடாமல் மைக்கை வைத்துவிட்டு சென்றுவிட்டார். அப்பாவின் கோபத்திற்கும், அரசியல் நெருக்கடிகளுக்கும் சம்மந்தம் இருக்குமா? இல்லையென்றால் ‘தலைவா’ விஜய் ஏன் மூட்-அவுட்டில் இருக்கிறார் என்ற கேள்விகளை ரசிகர்கள் தங்களுக்குள்ளே பரிமாறிக்கொள்கின்றனர்.


Slumdog Millionaire Tanvi makes her Tamil debut in Sandithen Unnai.

TANVI LONKAR in SANDHITHEN UNNAI.

Though, it took a lot of effort on her Uncle’s part to cast this pretty girl as the teenage avatar of Freida Pinto in Slumdog Millionaire, filmmakers don’t need much convincing these days post her Academy Award-winning stint that brought her due recognition for an ‘Outstanding Performance by a Cast in a Motion Picture’ at the 81st Oscar Awards ceremony. 


Continuing in her dream run,these days, Tanvi is busy with the schedules of her upcoming Tamil debut – Sandithen Unnai’ from director Nagamaneci . “She is cast as a minister’s daughter in this project and has a very important role in this movie. Tanvi is a promising talent. I am sure her will to work hard will take her a long way.” remarks the debutante director who has had a stint in ad film making before entering the world of cinema. 



Evidently, Tanvi who is getting a taste of Indian movies has a different approach that what she shared with Hollywood director Danny Boyle. Irrespective of the petty differences in the working style, she says “Being a performer, I don’t think it is a good idea to classify everything by region. After Slumdog Millionaire happened, there have been many offers in Bollywood but I preferred Sandithen Unnai as I could relate to the character very easily.”

 ---Movie updates

27 Jun 2013

மீண்டும் விஜய் இயக்கத்தில் சாரா.


தெய்வ திருமகள் படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் குழந்தை நட்சத்திரம் சாரா.
அந்த படத்தில் சாராவின் நடிப்பு திறமையை பார்த்து பாராட்டாதவர்களே இருக்க முடியாது. 

இதனையடுத்து சுந்தர்ராஜனின் நிலாச்சோறு படத்தில் நடித்துள்ள சாரா, மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

அதாவது, தற்போது விஜய்யின் தலைவா படம் முடிந்த பிறகு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படத்தில் தான் நடிக்க போகிறார். 

இப்படம் முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரம் சாராவைச் சுற்றி பின்னப்பட்ட கதை. 

மேலும் விருதுகளை குறிவைத்தே இப்படம் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிகை நிரோஷாவும் நடிக்கிறாராம்.

 ---Movie updates
 

இந்திராகாந்தியாக ஹாலிவுட் நடிகை.



நட்டிகுமார் இயக்கத்தில் இந்திராகாந்தியின் வாழ்கை வரலாறு விரைவில் திரைப்படமாக தயாராக உள்ளது. 


இவர் ஏற்கெனவே கணேஷ் வெங்கட்ராம்வை வைத்து பனித்துளி என்கிற படத்தை இயக்கியவர் ஆவார்.

இந்நிலையில் தற்போது இந்திரா காந்தியின் வாழ்க்கையை படமாக்க தயாராகி வருகிறார். 


இதற்காக திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நட்டிகுமார், படத்திற்கு அயர்ன் லேடி இந்திராகாந்தி என்கிற தலைப்பை தெரிவு செய்திருக்கிறார். 


மேலும் படத்தில் இந்திராகாந்தி வேடத்திற்கு ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டாவை நடிக்க வைக்கப் போகிறாராம்.

எனவே, அவருடைய திகதிக்காக காத்திருக்கும் நட்டிகுமார் அயர்ன் லேடி இந்திராகாந்தி படத்தை தன்னுடைய கனவு படம் என்கிறார்.

இப்படத்தை ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

 ---Movie updates

25 Jun 2013

Work on Suriya’s Dhruva Natchathiram yet to start?

Ace director Gautham Vasudev Menon announced with full enthu the launch of his Suriya-starrer Dhruva Natchathiram in the first week of May. Repeating Suriya for the third time as hero in his film, he had also said he would once again be working with A.R. Rahman for this film. Menon’s Neethane En Ponvasantham, which released last year, had Maestro Ilaiyaraaja’s music. 


The shoot of the film was to have commenced last Monday (17th June) but Suriya wasn’t ready as he was busy with the audio-launch of his upcoming film Singam-2. Usually, Suriya doesn’t take much time in getting off the blocks once he commits himself to starring in a film. 



Menon is producing the film under his banner ‘Photon Kathaas’. Simran & Parthiepan are slated to play prominent roles in the film. While initially it was rumoured that Sameera Reddy might be starred opposite Suriya, it turns out that Menon suggested Trisha’s name to Suriya. However, Suriya reportedly told Menon not to sign up Trisha and look for a ‘fresh’ face. 


It was then said Amala Paul has been signed up as the heroine. There is some degree of uncertainty about that as the Unit says that when the shoot commences finally, there is every chance of the heroine getting changed. Suriya is likely to start shooting for the film from the first week of July.

AR Rahman to release coffee table book reflections this July.

AR Rahman, is presently basking in all the goodies coming his way from the success of Dhanush’s Bollywood debut – Raanjhanaa, a romantic drama, directed by Anand L Rai. The movie has already been confirmed a hit from Dhanush himself , who claims a positive box office collection in favor of the project. Meanwhile, Isaipuyal Rahman is also reminiscing his initial days as a budding composer in the industry.

Now, this double Oscar winner is anticipating the release of his book – Reflections, which aims to capture some memorable days with yesteryear legends and singers throughout his long spanning career. Likewise, complimenting notes from the stalwarts of Tamil industry are also a part of the illustrious collection.

Professional photographer T Selvakumar who has closely worked with Rahman as its author remarks, “Audio Media Inc. will publish this book and the proceeds for it will go to the AR Rahman Foundation. It is a tribute to the singers who apart from just being a part of his compositions have influenced him to evolve as a composer over the years. It will showcase Rahman’s compassionate work in the field with these performers who have a high regard for his body of work. We expect to make “Reflections” available in the market from July.”

In response Rahman said, “Throughout my journey as a composer, these people have stood by me irrespective of my failure and success at the box office. This is a gift to them, you can pre-order my new book on http://www.audiomedia.in .”


20 Jun 2013

Operation Ellalan (2008)

Operation Ellalan (2008)
Operation Ellalan (2008) 
DVDRip 
Tamil EELAM Movie 
1CDRip 700MB.avi

(Size: 662.48 MB)
Torrent download

NOTE (just skip the add after clicking the link)
 


                                                                  ---Movie updates

19 Jun 2013

thalaivaa promo - mp3 2013

thalaivaa promo - mp3

thalaivaa promo - mp3 2013

(Size: 7.12 MB)
Torrent download

NOTE (just skip the add after clicking the link)
 


18 Jun 2013

Ambikapathy - mp3 2013

Ambikapathy - mp3 with lyrics

Ambikapathy - mp3 2013

(Size: 49.90 MB)
Torrent download

NOTE (just skip the add after clicking the link)


 
link. ------> Click Here to Download Ambikapathy - mp3


17 Jun 2013

டூப் போடாமல், கயிறு கட்டாமல் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த இயக்குநர் மிஷ்கின்!



ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ஒரு சண்டைக் காட்சியில் ஓடும் ரயிலிருந்து கீழே குதித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். இதற்காக அவர் எந்த இடத்திலும் டூப்பைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லோன் வுல்ஃப் என்று சொந்தப் பட நிறுவனம் தொடங்கியுள்ள இயக்குநர் மிஷ்கின், இளையராஜா இசையில் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார். இதில் ஓநாயின் குணம் கொண்ட மனிதன் வேடத்தில் இயக்குநர் மிஷ்கினும், ஆட்டுக்குட்டியைப் போன்ற சாது கேரக்டரில் வழக்கு எண் பட ஹீரோ ஸ்ரீயும் நடிக்கின்றனர். 


இந்தப் படத்துக்காக சமீபத்தில் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அதில் ஓடும் ரயிலிலிருந்து இயக்குநர் மிஷ்கின் குதிக்க வேண்டும். ரயில் கொஞ்சம் வேகமாக ஓடும். தண்டவாளத்தில் நிறைய மின்சாரக் கம்பங்கள் வேறு இருந்தன. எனவே இந்தக் காட்சியை டூப் வைத்து எடுக்கலாம் என ஸ்டன்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் கூறினாராம். ஆனால் காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என கறாராக சொல்லிவிட்ட மிஷ்கின், டூப் போடாமல், கயிறு கட்டாமல், கிரீன் மேட் உபயோகிக்காமல் இந்தக் காட்சியில் ரயிலிலிருந்து குதித்து பிரமிக்க வைத்துள்ளார். இது குறித்து ஜெகன் கூறுகையில், “மிஷ்கின் இதற்காக எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை. எங்களுக்கு பயமாகத்தான் இருந்தது. ஆனால் முதல் டேக் திருப்திகரமாக இல்லாததால் மீண்டும் ஒரே டேக் குக்கு போய் இந்த காட்சியை வெற்றிகரமாக எடுத்து முடித்தார் மிஷ்கின். இந்த காட்சி மிக சிறப்பாக வந்துள்ளது. மிஷ்கின் உழைப்பை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது துணிச்சலுக்கும் அர்பணிப்புக்கும் நான் தலைவணங்குகிறேன். இவருடன் பணிபுரிவதை நான் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன்,” என்றார்.

---Movie updates      
காஜலின் திமிர்த்தனம்! கடுப்பான கமல்!!!


கமல் நடிக்க இருக்கும் ‘உத்தம வில்லன்’ படத்திலிருந்து காஜலை தடாலடியாக தூக்கியெறிந்து விட்டாராம் கமல்.


தமிழில் விஜய்யின் ஜில்லா, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல்அகர்வால். இந்த படங்களில் நடித்துக்கொண்டே சில தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் படுபிஸியாக நடித்து வருகிறார்.

அப்படிப்பட்டவரை டைரக்டர் என்.லிங்குசாமி தயாரித்து வரும் உத்தம வில்லன் படத்தில் கமலுக்கு ஜோடியாக்க பேசி வந்தனர்.

கமல் படம் என்பதால் உடனே ஓ.கே சொல்லி படு குஷியாக இருந்தார் காஜல். என்னை கவர்ந்த சில நடிகர்களில் கமலும் ஒருவர். அவருடன் நடிப்பது எனக்கு பெரிய சந்தோஷம் என்றெல்லாம் தனது தங்கை உள்ளிட்ட சகாக்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். ஆனால், இடையில் என்ன குழப்பம் நடந்ததோ, இப்போது காஜலை தடாலடியாக தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறொரு ஹீரோயினை பார்த்து வருகிறார்களாம்.

இருந்தாலும் எதற்காக உங்களை கமல் சார் படத்திலிருந்து தூக்கினார்கள் என்று காஜலிடம் கேட்டால், அது சம்பந்தமான சமாச்சாரங்களை வெளிப்படையாக பேச மறுக்கிறார். “கமல் சார் படத்தில் நடிக்க எனக்கும் ரொம்ப ஆசை தான், ஆனால் அவர்கள் கேட்ட தேதிகளை நான் வேறொரு படத்துக்கு கொடுத்து விட்டதால் என்னால் அந்தப்படத்தில் நடிக்க முடியவில்லை என்று வழக்கமாக ஹீரோயின்கள் விடும் புருடாவை கூசாமல் விடுகிறாராம்.

ஆனால் உண்மை என்னவென்றால் சில படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் காஜலின் பொறுப்பற்ற நடவடிக்கைகளைப் பற்றி கேள்விப்பட்டாராம் கமல், அதுமட்டுமில்லாமல் அவர் ஒரு திமிர் பிடித்த பெண், அவரை என்னுடைய படத்தில் அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் என்று சில மாதங்களுக்கு முன்பு காஜலைப் பற்றி டைரக்டர் பாரதிராஜ சொன்ன எதிர்மறையாக கருத்தும் தான் காஜலை கமல் வெறுக்கக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.



எது எப்படியோ.., காஜலின் திமிருக்கு நல்லதொரு பாடம் புகட்டி விட்டார் கமல்.

---Movie updates       
என் பெயரைச்சொல்லி ஏமாற்றுகிறார்கள் – இயக்குனர் பிரபுசாலமன்.

இயக்குனர் பிரபுசாலமன் பெயரை சொல்லி பிரபல சினிமா இயக்குனர்களிடமும் நடிகர்கள், நடிகைகளிடமும் நான் பிரபு சாலமன் பேசுகிறேன் என் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை நான் இரண்டு லட்சம் கொடுத்துள்ளேன் மீதி மருதுவசெலவிற்காக உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள் என்று சொல்லி லச்ச கணக்கில் பணம் கேட்டுள்ளனர் பணத்தை வங்கிக்கணக்கில் போடுங்கள் என்று கூறி ஏமாற்றி உள்ளனர். அதை நம்பி சில சினிமா பிரபலங்கள் அந்த வங்கிக்கணக்கில் பல லட்சம் பணம் போட்டுள்ளனர். 


என்பெயரை சொல்லி ஏமாற்றுகின்றனர் அதை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.அப்படி யாரவது கேட்டால் பணம் கொடுக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன். 


இதுபோல் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மற்றும் வேதம்புதிது கண்ணன் ,நடிகர் சாந்தனு ஆகியோரின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர் அதை செய்த நபர்தான் என் பெயரும் சொல்லி மோசடி செய்துள்ளனர் என்று எனக்கு சந்தேகம் உள்ளது. 


இது சம்மந்தமாக மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளேன் என்று கூறினார். 

---Movie updates     

சேட்டை இயக்குனர் மீது கடுப்பில் சந்தானம்.

கொலிவுட்டில் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை வேட்டைக்காரன், உத்தமபுத்திரன், உன்னாலே உன்னாலே உட்பட்ட படங்களில் கொமடி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஸ்ரீநாத் இயக்குகிறார். 


அதோடு, ஸ்ரீநாத் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவாவின் அசிஸ்டென்ட். படத்தில் பயங்கர சண்டைக்காட்சி ஒன்றும் இருக்கிறதாம்.

வில்லன்கள் சுற்றி வளைக்க, தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ஃபுல் பாட்டிலை எடுத்து அவர்களை அடித்து விரட்டுவாராம் சந்தானம்.

முதலில் இந்தப் படத்தை சேட்டை பட இயக்குனர் கண்ணன் இயக்குவதாக இருந்த நிலையில், சந்தானம் ஸ்ரீநாத்தை சிபாரிசு செய்ததால் ஸ்ரீநாத் இயக்குகிறார். 


இதற்குக் காரணம் நல்லபடியாக போய் கொண்டிருந்த தனது மார்க்கெட்டை டாய்லெட் பக்கம் தள்ளிவிட்டவர் இயக்குனர் கண்ணன் தானாம். 


நடிகர் சந்தானம் அதனால் தான் சேட்டை இயக்குனர் கண்ணன் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 


---Movie updates    

அமெரிக்க அரசு தம்மிடம் கேட்டது என்ன? : வெளியிட்டது பேஸ்புக்.


அமெரிக்க அரசிடமிருந்து தமது யூசர்களின் அக்கவுண்டுக்களை பாதுகாக்க கடுமையாக போராடி வருவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

அமெரிக்க பாதுகாப்புத்துறை பேஸ்புக், விண்டோஸ், டுவிட்டர், ஆப்பிள் என பிரபல இணைய நிறுவனங்களிடமிருந்து அவற்றின் பாவணையாளர்களின் சில தகவல்களை இரகசியமாக கேட்டு மிரட்டுவதாக அமெரிக்கப் பாதுகாப்பு துறையில் பணிபுரிந்த முன்னாள் தொழில்நுட்பவியாலாளர் ஸ்னோவ்டென் அண்மையில் ஓர் இரகசியத்தை போட்டுடைத்திருந்தார்.


இதையடுத்து சமூக வலைத்தளங்களிடம் அதன் பாவணையாளர்கள் கேள்வி மேல் கேள்வி போட்டுத் தாக்குகிறார்கள். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், தனக்கு அமெரிக்க அரசிடமிருந்து 9,000 - 10,000 ற்கு மேற்பட்ட விண்ணப்பங்களை அனுப்பப்பட்டிருந்ததாகவும் அவை அனைத்தும், தமது பயனாளர்களின் இரகசியத் தகவல்களைக் கேட்டு அனுப்பட்ட கோரிக்கைகள் எனவும் தெரிவித்துள்ளது.


தமக்கு இதே போன்று அமெரிக்காவிடமிருந்து 6,000 - 7,000 கோரிக்கைகளை அமெரிக்க அரசு அனுப்பியிருப்பதாக மைக்சோராப்ட் தெரிவித்துள்ளது. உள்ளூர் குற்றவாளிகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குபவர்கள் என அமெரிக்க அரசு சந்தேகிக்கும் நபர்களின் இணையத்தகவல்களை தருமாறே அமெரிக்க அரசு கோரியுள்ளதாம்.


பேஸ்புக், கூகுள், யாகூ, அப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் என முக்கிய இணைய நிறுவனங்களிடமிருந்து அவற்றின் பாவணையாளர்களின் சில தகவல்களை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி (NSA) பெற முனைந்ததாகவும் இந்த திட்டத்திற்கு Prism என பெயரிடப்பட்டு செயற்படத் தொடங்கியிருந்ததாகவும் முன்னர் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. எனினும் இதை மறுத்திருந்த அமெரிக்க அரசு சட்டரீதியான கோரிக்கைகளை மாத்திரமே தாம் விடுத்திருந்ததாகவும், எவரது தனிப்பட்ட விபரங்களிலும் தலையிடும் உரிமை எமக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறியிருந்தது.


---Movie updates    

உலகம் சுற்றும் பலூன்கள் மூலம் இண்டர்நெட் : கூகுளின் பிரமாண்டத் திட்டம்.

உலகத்தின் பெரும்பான்மையான மக்களுக்கு இன்டர்நெட்டை பயன்படுத்தும் வசதி கிடைத்துவிட்டதாக ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால் உலகில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு இன்னும் இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையைப் போக்கி மூலை முடுக்கெல்லாம் இன்டர்நெட்டை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கூகுள் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

மிகுந்த அழுத்தமுடைய வாயுக்கள் நிரப்பப்பட்டிருக்கும் பலூன்கள், பாலி எத்திலீனால் உருவாக்கப்பட்டவை. சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய சோலார் தகடுகள், அதி நவீன கணினியில் இருக்கக்கூடிய மின்னணுப் பொருள்கள் ஆகியவை இதில் இணைக்கப்பட்டுள்ளன.

 சரி, இந்த பலூனால் என்ன நன்மை? காற்றில் இது கிழிந்துபோய்விடாதா? வானூர்திகளுக்கு ஆபத்து ஏற்படாதா என்பன போன்ற கேள்விகள் எல்லாம் எழக்கூடும். ஆனால், மழை பொழிவது, மலை முகடுகள், வானூர்தியின் வழித்தடம் எல்லாம் பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்தான். இந்த பலூன் தரையில் இருந்து 20 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தின் ஸ்ட்ரடோஸ்பியர் அடுக்கில்தான் பயணிக்கப்போகிறது. இந்தப் பகுதியில் காற்றின் வேகம் 8 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மிகச் சீராக இருக்கும் என்பது இதன் சிறப்பம்சம். உலகம் முழுவதும் இருந்து இதுபோன்ற நூற்றுக்கணக்கான பலூன்கள் விண்ணில் செலுத்தப்பட இருக்கின்றன.

இவற்றில் உள்ள ஆன்டெனா, பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. இதனால், பலூன் எந்தப் பக்கம் பறக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும். இந்த பலூன்கள் ஒன்றுடன் ஒன்று கம்பியில்லா வலையமைப்பை ஏற்படுத்திக் கொள்வதுடன் பூமியில் உள்ள இண்டர்நெட் சர்வர்களுடன் இணந்திருக்கும். இதனால், இந்த பலூன்கள் அனைத்தும் கிட்டத்தட்ட புதியவகை செயற்கைக்கோள்கள் போலச் செயல்படத் தொடங்கும்.

வீடுகளில் பிரத்யேக ஆண்டெனாக்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த பலூன்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, இண்டர்நெட்டைப் பயன்படுத்த முடியும். ஒரு பலூன் 40 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இண்டர்நெட் சேவையை அளிக்கும் திறன் கொண்டது என்று கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது சோதனை அடிப்படையில் நியூலாந்தில் இருந்து சுமார் 40 பலூன்கள் விண்ணில் பறக்கவிடப்பட்டுள்ளன. தேடுபொறி சேவைக்குப் பிறகு, கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மிகப் பெரிய திட்டம் என்று கூறப்படுவதால், இதற்கு உலகமெங்கும் எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது.
  
Project Loon: The Technology(video)




---Movie updates    
’துப்பறியும் ஆனந்த்’, துருவநட்சத்திரமாக மாறிய கதை!

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’துருவநட்சத்திரம்’. இந்தப் படத்தில் அஜித் நடிக்க மறுத்து, பின்பு விஜய், தெலுங்கில் மகேஷ்பாபு, பாலிவுட்டில் அமீர்கான் வரை சென்று திரும்பியது. இதையடுத்து கௌதம் மேனனின் நண்பரும், நடிகருமான சூர்யா ஒப்புக் கொண்டார். மற்ற நடிகர்கள் ஒப்புக் கொள்ளாததற்குக் காரணம், இந்தப் படத்தின் கதையானது, 1950ல் நடக்கிற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது பீரியட் ஃபிலிம். இதனால் கால்ஷீட் வருடக்கணக்கில் தேவைப்படும் என்பதால், அவர்கள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து சூர்யாவிடம் கதையைக் கூறியிருக்கிறார். கதையைக் கேட்ட சூர்யா 1950ல் நடக்கிற மாதிரி உள்ள கதையை, இப்ப உள்ள ஜெனரேஷனுக்கு ஏற்ற மாதிரி மாற்றச் சொல்லியிருக்கிறார். இதனால் படம் ஆரம்பிக்க கொஞ்சம் தாமதம் ஆனது. இந்நிலையில் சமீபத்தில் ஆரம்பித்த இப்படத்தின் படபூஜைக்குப் பிறகு, துப்பறியும் ஆனந்த்தை, துருவநட்சத்திரமாக மாற்றினார் கௌதம்.

இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் பார்த்திபன் வில்லன் ரோலில் வருகிறாராம். நாயகன் சூர்யா இன்வெஸ்டிகேஷன் ஆபிஸராக வருகிறார். இவர்களுடன் சமீராரெட்டி, சிம்ரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ’ஆஸ்கர்’ வின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அதி விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. சூர்யாவும் தற்போது சிங்கம் கெட்டப்பிலிருந்து மாறி, துருவநட்சத்திரமாக காட்சியளிக்கிறார்.
  

---Movie updates