மீண்டும், குடும்ப பாங்கான கேரக்டர்களை தேடிச் செல்லும் அஞ்சலி!
“அங்காடித் தெரு, கற்றது தமிழ் என, கனமான கதைகளை கொண்ட படங்களில்நடித்து,
முத்திரை பதித்த இடையில், கிளாமருக்கு முக்கியத்துவம் தரும், சில
படங்களிலும் நடித்தார். ஆனால், அஞ்சலி கவர்ச்சியாக நடித்த படங்கள்,
எடுபடவில்லை. இதனால், மீண்டும், குடும்ப பாங்கான கேரக்டர்களை தேடிச்
செல்கிறார். அவர் கூறுகையில், “கவர்ச்சி பொம்மையாக, யார் வேண்டுமானாலும்
நடிக்கலாம். ஆனால், நல்ல கதையம்சம் உடைய படங்கள், ஒரு சில நடிகைகளுக்கு
தான், கிடைக்கும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. நான்கு பாடல்கள்,
இரண்டு காட்சிகளில் வந்து, தலைகாட்டுகிற நடிகை என, பெயர் எடுக்க
விரும்பவில்லை. அஞ்சலி என்றால், நல்ல படங்களில் நடிக்கும் நடிகை என,
ரசிகர்கள் கொண்டாட வேண்டும். எனக்கு, அதுபோதும் என, ஒரு பேட்டியில்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment