மீண்டும் விஜய் இயக்கத்தில் சாரா.
தெய்வ திருமகள் படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் குழந்தை நட்சத்திரம் சாரா.
அந்த படத்தில் சாராவின் நடிப்பு திறமையை பார்த்து பாராட்டாதவர்களே இருக்க முடியாது.
இதனையடுத்து சுந்தர்ராஜனின் நிலாச்சோறு படத்தில் நடித்துள்ள சாரா, மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அதாவது, தற்போது விஜய்யின் தலைவா படம் முடிந்த பிறகு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படத்தில் தான் நடிக்க போகிறார்.
இப்படம் முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரம் சாராவைச் சுற்றி பின்னப்பட்ட கதை.
மேலும் விருதுகளை குறிவைத்தே இப்படம் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிகை நிரோஷாவும் நடிக்கிறாராம்.
No comments:
Post a Comment