17 Jun 2013

சேட்டை இயக்குனர் மீது கடுப்பில் சந்தானம்.

கொலிவுட்டில் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை வேட்டைக்காரன், உத்தமபுத்திரன், உன்னாலே உன்னாலே உட்பட்ட படங்களில் கொமடி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஸ்ரீநாத் இயக்குகிறார். 


அதோடு, ஸ்ரீநாத் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவாவின் அசிஸ்டென்ட். படத்தில் பயங்கர சண்டைக்காட்சி ஒன்றும் இருக்கிறதாம்.

வில்லன்கள் சுற்றி வளைக்க, தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ஃபுல் பாட்டிலை எடுத்து அவர்களை அடித்து விரட்டுவாராம் சந்தானம்.

முதலில் இந்தப் படத்தை சேட்டை பட இயக்குனர் கண்ணன் இயக்குவதாக இருந்த நிலையில், சந்தானம் ஸ்ரீநாத்தை சிபாரிசு செய்ததால் ஸ்ரீநாத் இயக்குகிறார். 


இதற்குக் காரணம் நல்லபடியாக போய் கொண்டிருந்த தனது மார்க்கெட்டை டாய்லெட் பக்கம் தள்ளிவிட்டவர் இயக்குனர் கண்ணன் தானாம். 


நடிகர் சந்தானம் அதனால் தான் சேட்டை இயக்குனர் கண்ணன் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 


---Movie updates    

No comments: