உலகம் சுற்றும் பலூன்கள் மூலம் இண்டர்நெட் : கூகுளின் பிரமாண்டத் திட்டம்.
மிகுந்த அழுத்தமுடைய வாயுக்கள் நிரப்பப்பட்டிருக்கும் பலூன்கள், பாலி எத்திலீனால் உருவாக்கப்பட்டவை. சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய சோலார் தகடுகள், அதி நவீன கணினியில் இருக்கக்கூடிய மின்னணுப் பொருள்கள் ஆகியவை இதில் இணைக்கப்பட்டுள்ளன.
சரி, இந்த பலூனால் என்ன நன்மை? காற்றில் இது கிழிந்துபோய்விடாதா? வானூர்திகளுக்கு ஆபத்து ஏற்படாதா என்பன போன்ற கேள்விகள் எல்லாம் எழக்கூடும். ஆனால், மழை பொழிவது, மலை முகடுகள், வானூர்தியின் வழித்தடம் எல்லாம் பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்தான். இந்த பலூன் தரையில் இருந்து 20 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தின் ஸ்ட்ரடோஸ்பியர் அடுக்கில்தான் பயணிக்கப்போகிறது. இந்தப் பகுதியில் காற்றின் வேகம் 8 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மிகச் சீராக இருக்கும் என்பது இதன் சிறப்பம்சம். உலகம் முழுவதும் இருந்து இதுபோன்ற நூற்றுக்கணக்கான பலூன்கள் விண்ணில் செலுத்தப்பட இருக்கின்றன.
வீடுகளில் பிரத்யேக ஆண்டெனாக்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த பலூன்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, இண்டர்நெட்டைப் பயன்படுத்த முடியும். ஒரு பலூன் 40 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இண்டர்நெட் சேவையை அளிக்கும் திறன் கொண்டது என்று கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது சோதனை அடிப்படையில் நியூலாந்தில் இருந்து சுமார் 40 பலூன்கள் விண்ணில் பறக்கவிடப்பட்டுள்ளன. தேடுபொறி சேவைக்குப் பிறகு, கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மிகப் பெரிய திட்டம் என்று கூறப்படுவதால், இதற்கு உலகமெங்கும் எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது.
No comments:
Post a Comment