17 Jun 2013

’துப்பறியும் ஆனந்த்’, துருவநட்சத்திரமாக மாறிய கதை!

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’துருவநட்சத்திரம்’. இந்தப் படத்தில் அஜித் நடிக்க மறுத்து, பின்பு விஜய், தெலுங்கில் மகேஷ்பாபு, பாலிவுட்டில் அமீர்கான் வரை சென்று திரும்பியது. இதையடுத்து கௌதம் மேனனின் நண்பரும், நடிகருமான சூர்யா ஒப்புக் கொண்டார். மற்ற நடிகர்கள் ஒப்புக் கொள்ளாததற்குக் காரணம், இந்தப் படத்தின் கதையானது, 1950ல் நடக்கிற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது பீரியட் ஃபிலிம். இதனால் கால்ஷீட் வருடக்கணக்கில் தேவைப்படும் என்பதால், அவர்கள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து சூர்யாவிடம் கதையைக் கூறியிருக்கிறார். கதையைக் கேட்ட சூர்யா 1950ல் நடக்கிற மாதிரி உள்ள கதையை, இப்ப உள்ள ஜெனரேஷனுக்கு ஏற்ற மாதிரி மாற்றச் சொல்லியிருக்கிறார். இதனால் படம் ஆரம்பிக்க கொஞ்சம் தாமதம் ஆனது. இந்நிலையில் சமீபத்தில் ஆரம்பித்த இப்படத்தின் படபூஜைக்குப் பிறகு, துப்பறியும் ஆனந்த்தை, துருவநட்சத்திரமாக மாற்றினார் கௌதம்.

இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் பார்த்திபன் வில்லன் ரோலில் வருகிறாராம். நாயகன் சூர்யா இன்வெஸ்டிகேஷன் ஆபிஸராக வருகிறார். இவர்களுடன் சமீராரெட்டி, சிம்ரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ’ஆஸ்கர்’ வின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அதி விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. சூர்யாவும் தற்போது சிங்கம் கெட்டப்பிலிருந்து மாறி, துருவநட்சத்திரமாக காட்சியளிக்கிறார்.
  

---Movie updates   

No comments: