30 Jun 2013

மீண்டும் நடிக்கவரும் சுந்தர்.சி : நாயகி சமந்தாவா, அனுஷ்காவா?

 ஒழுங்காக படம் இயக்கிக் கொண்டிருந்த சுந்தர் சி.யை அவரது மனைவி குஷ்பு உசுப்பிவிட்டு கதாநாயகனாக்கினார்.
முதல் படம் தலைநகரம் தவிர்த்து மற்ற எல்லாம் சுமாராகத்தான் ஓடியது. கடவுளே இந்த கஷ்டத்திலிருந்து விடுதலை கொடு என்ற தமிழக மக்களின் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது. 

தாறுமாறான தோல்விகளுக்குப் பிறகு, படம் நடிப்பதில்லை என ஒரு நல்ல நாளில் முடிவெடுத்து கலகலப்பு, மத கஜ ராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு என இயக்கத்தின் பக்கம் திரும்பி படங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். 

இரசிகர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்தநிலையில் அரண்மனை என்றொரு கதையை யோசித்து வைத்திருக்கிறாராம். இதில் நானே நடித்தால் என்ன என்று அவருக்கு தோன்றியிருப்பதுதான் காலத்தின் கோலம். 

கதாநாயகியை தேர்வு செய்யும் பொறுப்பை குஷ்பு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா என்று பெயர்களை குலுக்கிப் போட்டு தேர்வு செய்வதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 


No comments: