பெற்றோர் எதிர்ப்பை மீறி நடிகை காவேரி திடீர் திருமணம் .
பிரசாந்த் ஜோடியாக வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காவேரி.
தொடர்ந்து சில படங்களில் சின்ன சின்ன
கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், தற்போது சின்னத்திரையில் பிஸி
நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை காவேரிக்கும், கேரளாவை சேர்ந்த ராகேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
ராகேஷின் சொந்த ஊர் கேரளா மாநிலம் உடுப்பி. இவர் சென்னை வேளச்சேரியில்
பார்மெசி ஏஜென்டாக உள்ளார். தொழில் ரீதியாக காவேரியின் அண்ணன் மார்க்
மூலம் ராகேஷ்க்கு, காவேரியிடம் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து காவேரி-ராகேஷ் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி இன்று(07.07.2013) விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தில் உள்ள
பிரசித்திபெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருவரும் ரகசியமாக திருமணம்
செய்து கொண்டனர்.
காவேரிக்கு தெரிந்த விழுப்புரத்தை சேர்ந்த வக்கீல் செந்தில் குமார்
என்பவரது உதவியுடனும், ராகேஷின் நண்பர் ஒருவரது உதவியுடனும் இந்த திருமணம்
நடந்துள்ளது.
தான் ஏன் வீட்டை விட்டு வந்து ரகசியமாக, கோயிலில் திருமணம் செய்து கொண்டேன் என்ற விடயத்தை நடிகை காவேரி கூற மறுத்துவிட்டார்.
No comments:
Post a Comment