4 Jul 2013

சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார் சூர்யா!

சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார் சூர்யா!

தமிழ்த் திரையுலகில் தற்போது இருக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம். சூர்யா, கார்த்தியின் உறவுக்காரரான ஞானவேல்ராஜா இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சூர்யாவின் கால்ஷீட் தேதிகள் கேட்டு வரும் முன்னணி இயக்குனர்களை, அப்படியே கார்த்தியின் கால்ஷீட் தேதிகள் கொடுத்து படத்தினைத் தயாரித்து விடுகிறதாம் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.

வெங்கட்பிரபு முதலில் சூர்யாவின் தேதிகள் கேட்டு தான் சென்றார். ஆனால், தற்போது கார்த்தியை வைத்து 'பிரியாணி' சமைத்து வருகிறார். அதுபோலவே ராஜேஷும் சூர்யா தேதிகள் கேட்டார். தற்போது கார்த்தியை வைத்து 'ஆல் இன் ஆல் அழகுராஜா' இயக்கி வருகிறார்.

'சிங்கம் 2' முடிந்த கையோடு ஹரியை வளைத்துப் போட்டு விட்டார்கள். ஹரி அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி தான் நாயகன். இப்படி சூர்யாவை அணுகும் அனைத்து இயக்குனர்களையும் கார்த்தியை முன்னிறுத்தி விடுகிறார்களாம்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஒருபுறம் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யாவும் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்க இருக்கிறார்.

தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு '2D Entertainment' என்று தலைப்பிட்டு இருக்கிறார். D - Diya, D - Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து '2D Entertainment' என்று பெயரிட்டு இருக்கிறார்.
இந்த நிறுவனத்தின் மூலம் சிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் சூர்யா.

---Movie updates  

No comments: