16 Aug 2013

விஜய்க்கு போன் செய்த அஜீத் தலைவா குறித்து விசாரிப்பு

விஜய்க்கு போன் செய்த அஜீத் தலைவா குறித்து விசாரிப்பு...

தலைவா படம் குறித்த பரபரப்பு நாளுக்கு நாள் வேறு வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் படம் வருமா என்பதே சந்தேகமாகியிருக்கிறது இப்போது. விஜய்யின் உண்ணாவிரதம் மறுக்கப்பட்ட நிலையில் அவரது அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? விஜயகாந்த் இவருக்காக களம் இறங்குவாரா போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்த இக்கட்டான நேரத்தில் மிக மிக சைலண்ட்டாக அந்த சம்பவமும் நடந்ததாம். 

நடிகர் அஜீத் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யிடம் போனில் பேசியதாகவும், எதற்கும் டென்ஷன் ஆகாமல் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

பொதுவாகவே முதல்வர் ஜெயலலிதாவின் அனுதாபி என்று கருதப்படுகிறவர் அஜீத். அதற்காக இந்த தலைவா விஷயத்தில் அவர் களமிரங்க மாட்டார். ஏனென்றால் அடுத்தவர்களுக்காக சிபாரிசுக்கு செல்வது அஜீத்திற்கு பிடிக்காத விஷயம் என்பது அவரை அறிந்தவர்களுக்கு புரியும். எனவே இந்த விசாரிப்பும் அனுதாப ஆறுதலும் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டுமே என்றும் கூறுகிறார்கள் திரையுலகத்தில். 

எதிரி யார் என்றே தெரியாமல் ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
அதுதான் புரியாத புதிர். 

No comments: