29 May 2013

சுனாமியால் அதிர வைக்கும் பிரபு சாலமன் !
வித்தியாசமான கதைகளங்களை திரைப்படமாக்கி அதில் வெற்றியும் பெறுபவர் பிரபு சாலமன். கதைகளங்கள் மட்டுமன்றி படத்தினை அவர் காட்சியமைக்கும் இடமும் வித்தியாசமாக இருக்கும்.

இவரது இயக்கத்தில் வெளியான 'கும்கி' படத்தில், பிரபுசாலமன் காட்சியமைத்த இடங்கள் அனைவரது மனங்களையும் கொள்ளைக் கொண்டது.

இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த பிரபுசாலமன், அப்படத்தினை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்.

அப்படத்தில் 'நான் ஈ' படத்தில் நடித்த நானி நாயகனாக நடிக்க இருக்கிறார். குரங்கினி மலையில் யானையைப் பின்புலமாக ​வைத்துப் படமாக்கியவர், அடுத்து சுனாமியை மையமாக்கி இயக்குகிறார்.

சுனாமி இடம்பெறும் காட்சியை மட்டும் 40 நிமிடங்கள் காட்டி, படம் பார்ப்பவர்களை அதிரவைக்க திட்டமிட்டு இருக்கிறாராம் பிரபு சாலமன். அதுமட்டுமன்றி பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களின் பட்ஜெட்டையும் விட இப்படத்தின் பட்ஜெட் அதிகம். 

No comments: