27 May 2013

பொங்கல் தினத்தன்று 'ஐ'!
 எப்போதுமே யாரும் எதிர்பார்க்காத இடங்கள், பிரம்மாண்டமான அரங்குகள், ரயிலுக்கு பெயிண்ட் அடிப்பது, துணை நடன கலைஞர்கள் அனைவருக்கும் பெயிண்ட் அடித்து ஆடவைப்பது என பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் ஷங்கர்.

விக்ரம், ஏமி ஜாக்சன், சுரேஷ் கோபி, ராம் குமார், சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் 'ஐ' படத்தினை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ராம் ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கர் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு VFX எனப்படும் கிராபிக்ஸ் பணிகளை LORD OF THE RINGS படத்திற்கு கவனித்த குழு செய்து வருகிறது. தற்போது கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜுன் 2ம் வாரம் சென்னையில் துவங்க இருக்கிறது. செப்டம்பர் மாதம் வரை படப்பிடிப்பு இருக்கிறதாம். பின்னணி இசைக் கோர்ப்பு பணியையும் விரைவில் துவங்க திட்டமிட்டு இருக்கிறாராம் ரஹ்மான்.

இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள், டப்பிங் பணிகள், பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் என அனைத்தும் முடிய இந்தாண்டு இறுதி ஆகிவிடுமாம், அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று இப்படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.


No comments: